என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    ஹூண்டாய் நிறுவனம் தனது அல்காசர் எஸ்யுவி மாடலை ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தது.


    ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடலை சார்ந்து உருவாகி இருக்கும் அல்காசர் மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட எஸ்யுவி மாடல் வெளியீடு மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டு இருந்தது.

     ஹூண்டாய் அல்காசர்

    இந்த நிலையில், இகன் வெளியீடு தற்போது ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் காட்டி வருவதால், புதிய கார் வெளியீட்டை ஹூண்டாய் ஒத்திவைத்து இருக்கிறது.

    வெளியீட்டிற்கு முன் ஹூண்டாய் அல்காசர் பிரீ-புரோடெக்ஷன் மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய அல்காசர் மாடல் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யுவியின் மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட வேரியண்ட் ஆகும். எனினும், கிரெட்டா மாடலுடன் ஒப்பிடும் போது அல்காசர் மாடலில் ஹூண்டாய் பல்வேறு மாற்றங்களை செய்து இறுக்கிறது.
    டுகாட்டி நிறுவனத்தின் 2022 ஹைப்பர்மோட்டர்ட் 950 சூப்பர்பைக் விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இத்தாலை நாட்டை சேர்ந்த சூப்பர்பைக் உற்பத்தியாளரான டுகாட்டி, 2022 ஹைப்பர்மோட்டர்ட் 950 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹைப்பர்மோட்டர்ட் 950 புது டிசைன் மற்றும் மேம்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹைப்பர்மோட்டர்ட் 950 மாடல்- ஸ்டான்டர்டு, RVE மற்றும் SP என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. மூன்று வேரியண்ட்களும் இந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஹைப்பர்மோட்டார்டு இந்திய விலை ரூ. 12.5 லட்சத்தில் துவங்கும் என தெரிகிறது. 

     2022 டுகாட்டி ஹைப்பர்மோட்டர்ட் 950

    புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 மாடலில் முந்தைய வேரியண்டில் வழங்கப்பட்ட என்ஜினின் மேம்பட்ட வெர்ஷன் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதில் டெஸ்மோடிரோமிக் டெஸ்டாஸ்டிரெட்டா 11°, எல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு 937சிசி என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 112.6 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது. இத்துடன் RVE மற்றும் SP வேரியண்ட்களில் பை-டைரெக்ஷனல் குவிக் ஷிப்டர் டுகாட்டி குவிக் ஷிப்ட் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
    டெஸ்லா நிறுவனத்தின் ரோட்ஸ்டர் மாடல் அதிவேகமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.


    டெஸ்லா எலெக்ட்ரிக் மாடல்கள் அதிவேகமாக செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. இதிலும் டெஸ்லா ரோட்ஸ்டர் மாடல் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ரோட்ஸ்டர் மாடலின் டிசைன் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

     டெஸ்லா ரோட்ஸ்டர்

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரோட்ஸ்டர் மாடலின் ஸ்பேஸ் எக்ஸ் பேக்கேஜ் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.1 நொடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது. இது உண்மையில் சாத்தியமாகும் பட்சத்தில் இத்தகைய வேகத்தில் செல்லும் உலகின் முதல் கார் என்ற பெருமையை ரோட்ஸ்டர் பெறும்.

    முன்னதாக டெஸ்லா நிறுவனம் தனது ரோட்ஸ்டர் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 1.9 நொடிகளில் எட்டிவிடும் என தெரிவித்து இருந்தது. எனினும், 1.1 நொடிகளில் இந்த வேகத்தை எட்டும் பட்சத்தில் இது உலகின் அதிவேகமான கார் என்ற பெருமையை பெறும். 
    தமிழகத்தில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான மருத்துவ உபகரணங்களை ஹூண்டாய் பவுன்டேஷன் நிதி வழங்கியுள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுன்டேஷன் சார்பில் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் கேர்ஸ் 3.0 திட்டத்தின் கீழ் மாநில அரசாங்கத்திற்கு ரூ. 10 கோடி வழங்கப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்றை எதிர்க்கும் நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     ஹூண்டாய்

    நிவாரண உதவி தொகையில் ரூ. 5 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. இந்த தொகை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ. 5 கோடி கொண்டு பிபிஐ கிட் உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட இருக்கின்றன. 

    கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின் போதும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுன்டேஷன் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பிலான நிவாரண உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய X3 பேஸ்லிப்ட் மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    பிஎம்டபிள்யூ X3 பேஸ்லிப்ட் மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. சர்வதேச வெளியீட்டுக்கு முன் இந்த மாடலின் ஸ்பை படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படத்தில் இருப்பது சீன அம்சங்கள் நிறைந்த மாடல் ஆகும். 

    ஸ்பை படத்தில் புது பிஎம்டபிள்யூ காரின் வெளிப்புற டிசைன் விவரங்கள் வெளியாகி உள்ளது. புது X3 பேஸ்லிப்ட் மாடலில் பெரிய கிட்னி கிரில் உள்ளது. இது காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. ஒற்றை பிரேம் கிரிலுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     பிஎம்டபிள்யூ X3 கார்

    முன்புற பம்ப்பர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக செங்குத்தான வென்ட்கள் உள்ளன. இத்துடன் புதிய அலாய் வீல்கள், புது எல்இடி டெயில் லைட்கள், பின்புறம் மேம்பட்ட பம்ப்பர், ட்வீக் செய்யப்பட்ட டிப்யூசர் வழங்கப்பட்டு உள்ளது. காரின் உள்புற அம்சங்கள் ரகசியமாகவே இருக்கிறது.

    இந்த மாடலின் இந்திய வெர்ஷன் 2.0 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். 
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சி கிளாஸ் செடான் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்தியாவில் சி கிளாஸ் மாடல் மூன்று வேரியண்ட்கள் - சி200 புரோகிரெசிவ், சி220டி புரோகிரெசிவ் மற்றும் டாப் எண்ட் சி300டி ஏஎம்ஜி லைன் கிடைக்கிறது.

    இவற்றில் சி200 புரோகிரெசிவ், சி220டி புரோகிரெசிவ் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில், சி300டி ஏஎம்ஜி லைன் மாடல் இந்திய வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. சி200 புரோகிரெசிவ் வேரியண்ட் விலை ரூ. 59,863 உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

     மெர்சிடிஸ் பென்ஸ் கார்

    இந்த மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 201 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் சி220சி புரோகிரெசிவ் வேரியண்ட் விலை ரூ. 59,237 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 192 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    பெனலி நிறுவனம் சத்தமின்றி புதிய 250சிசி மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    பெனலி நிறுவனத்தின் புதிய 250சிசி மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அந்த வகையில் புது மாடல் பேர்டு ரக ஸ்போர்ட்ஸ்பைக் ஆகும். தோற்றத்தில் இந்த மாடல் டிவிஎஸ் அபாச்சி ஆர்ஆர்310 மற்றும் கேடிஎம் ஆர்சி390 போன்றே காட்சியளிக்கிறது.

    முன்புறம் எட்ஜி டூயல் ஹெட்லேம்ப் செட்டப், ஆங்குலர் பேரிங், மஸ்குலர் பியூவல் டேன்க், டெயில் பகுதி மிக மெல்லியதாக இருக்கிறது. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டில்பார், ஸ்ப்லிட் ரக சீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

     பெனலி

    இந்த மாடல் 249சிசி என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 27 பிஹெச்பி பவர் வழங்கும் என தெரிகிறது. எடையை பொருத்தவரை புது பெனலி மாடல் 159 கிலோ வரை இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    இதன் டாப் எண்ட் மாடலில் அலுமினியம் சிங்கில்-சைடு ஸ்விங்-ஆர்ம் வழங்கப்படும் என்றும் பேஸ் வேரியண்டில் ஸ்டீல் டபுல்-சைடு ஸ்விங்-ஆர்ம் வழங்கப்படலாம்.
    போர்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் 563 பிஹெச்பி திறன் கொண்டிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்டு தனது முதல் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் எப்-150 லைட்னிங் என அழைக்கப்படுகிறது. புதிய எப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் கனெக்டெட் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

    போர்டு எப் 150 லைட்னிங் இரட்டை எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருக்கிறது. இந்த பிக்கப் டிரக் 563 பிஹெச்பி பவர், 1050 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4 நொடிகளில் எட்டிவிடும். 

     போர்டு எலெக்ட்ரிக் பிக்கப் டிரக்

    இந்த மாடலில் 115 முதல் 150 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதனுடன் சூப்பர் பாஸ்ட் டிசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 87 கிலோமீட்டர்கள் பயணிப்பதற்கான சார்ஜ் செய்ய 10 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இதன் பேட்டரியை 15 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 41 நிமிடங்கள் ஆகும்.

    புதிய எப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் டிரக் மாடல் துவக்க விலையை 39,974 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்துள்ளது.
    நிசான் நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 75 ஆயிரம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    நிசான் இந்தியா நிறுவனம் கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 75 ஆயிரம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது. இவற்றில் ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது.

    எனினும், கூடுதல் பலன்கள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அதிக சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் மே 31 வரை வழங்கப்படுகிறது. சலுகை பலன்கள் ஒவ்வொரு நகரம் மறஅறும் விற்பனையாளருக்கு ஏற்ப மாறுபடும்.

     நிசான் கிக்ஸ்

    இந்திய சந்தையில் நிசான் கிக்ஸ் மாடல் மொத்தம் எட்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் இரண்டு பெட்ரோல் என்ஜின் - 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மறஅறும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 154 பிஹெச்பி, 254 என்எம் டார்க் மற்றும் 105 பிஹெச்பி, 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. நிசான் கிக்ஸ் மாடல் துவக்க விலை ரூ. 9.50 லட்சம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.65 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    எலெக்ட்ரிக் திறன் கொண்ட பறக்கும் வாகனங்களில் பொது மக்களுக்கு டாக்சி சேவை துவங்கப்பட இருக்கிறது.

    எலெக்ட்ரிக் திறன் கொண்ட பறக்கும் டாக்சிக்கள் 2024 அல்லது 2025 வாக்கில் ஐரோப்பாவில் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த தகவலை ஐரோப்பாவுக்கான வான்வெளி பாதுகாப்பு ஆணையர் தெரிவித்து இருக்கிறார். 

    இந்த பறக்கும் வாகனங்கள் செங்குத்தாக (Vertical Take Off) வான்வெளிக்கு கிளம்பும் திறன் கொண்டிருக்கும். இவற்றை வர்த்தக ரீதியில் பயன்படுத்தலாம் என ஐரோப்பிய யூனியனுக்கான வான்வெளி பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பேட்ரிக் கி தெரிவித்தார்.

     பறக்கும் வாகனம்

    தானியங்கி முறையில் செயல்படும் டிரோன்கள் பயன்பாட்டிற்கு வர மேலும் ஐந்து ஆண்டுகள் கூடதலாக ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனுக்கான வான்வெளி பாதுகாப்பு நிறுவனம் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து இதனை சாத்தியப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 
    2021 ஸ்கோடா ஆக்டேவியா மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை அந்நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.

    அடுத்த தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. இதனை ஸ்கோடா இந்தியா இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

     2021 ஸ்கோடா ஆக்டேவியா

    மேலும் 2021 ஸ்கோடா அக்டேவியா முன்பதிவு கார் அறிமுகத்தின் போதே துவங்கும் என்றும், விநியோகம் இதன் வெளியீட்டை தொடர்ந்து உடனடியாக துவங்கும் என அவர் தெரிவித்தார். புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஸ்கோடா ஆக்டேவியா மாடலின் உற்பத்தி பணிகள் இந்தியாவில் துவங்கிவிட்டது. மேலும் இதன் முதல் யூனிட் ஔரங்காபாத் நகரில் இயங்கும் ஸ்கோடா ஆலையில் இருந்து வெளியானது. 2021 ஆக்டேவியா மாடல் முற்றிலும் புது டிசைன், அம்சங்கள் மற்றும் பவர்டிரெயின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்த சுமார் 2 லட்சம் யூனிட்களை ரீகால் செய்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 2.3 லட்சம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்கள் இதில் அடங்கும். இக்னிஷன் காயிலில் கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து இவை ரீகால் செய்யப்படுகின்றன.

    இந்த கோளாறு மோட்டார்சைக்கிள் திறனை குறைப்பதோடு, வேறு பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது. கிளாசிக் 350, Meteor 350 மற்றும் புல்லட் மாடல்கள் என மொத்தத்தில் 2,36,966 யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன.

     ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

    இதில் Meteor 350 மாடல்கள் டிசம்பர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இதேபோன்று கிளாசிக் மற்றும் புல்லட் மாடல்கள் ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.

    பாதிக்கப்பட்ட யூனிட்களில் சுமார் 10 சதவீதத்திற்கு மட்டுமே இக்னிஷன் காயிலை மாற்ற வேண்டிய நலை ஏற்படும் என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது. ரீகால் இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா போன்ற சந்தைகளிலும் மேற்கொள்ளப்படுகிறது.
    ×