என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
போர்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் அறிமுகம்
Byமாலை மலர்20 May 2021 9:44 AM GMT (Updated: 20 May 2021 9:44 AM GMT)
போர்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் 563 பிஹெச்பி திறன் கொண்டிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்டு தனது முதல் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் எப்-150 லைட்னிங் என அழைக்கப்படுகிறது. புதிய எப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் கனெக்டெட் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
போர்டு எப் 150 லைட்னிங் இரட்டை எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருக்கிறது. இந்த பிக்கப் டிரக் 563 பிஹெச்பி பவர், 1050 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4 நொடிகளில் எட்டிவிடும்.
இந்த மாடலில் 115 முதல் 150 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதனுடன் சூப்பர் பாஸ்ட் டிசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 87 கிலோமீட்டர்கள் பயணிப்பதற்கான சார்ஜ் செய்ய 10 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இதன் பேட்டரியை 15 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 41 நிமிடங்கள் ஆகும்.
புதிய எப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் டிரக் மாடல் துவக்க விலையை 39,974 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X