என் மலர்
- கிருபானந்த வாரியாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கிருபானந்தவாரியாரின் படத்திற்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் செங்குந்தர் அபிவிருத்தி சங்கம் சார்பில் மறைந்த ஆன்மீக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் சி.எஸ்.எம்.எஸ்.சங்கரசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் அனுசுயா மாரிமுத்து, பொருளாளர் குருநாதன், துணைத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கிருபானந்தவாரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், முத்தையா, சிவராமன், சுப்பிரமணியன், ஆறுமுகம், சுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், நகராட்சி கவுன்சிலர் செல்வராஜ், மகா ஸ்டுடியோ சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆர்ப்பாட்டத்தின்போது பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- ஏ.ஜி.எம்.டி. திட்டத்தின் வேலைகளை அந்தந்த ஊராட்சியின் மூலமாக டெண்டர் நடைபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவரும், கோவிந்தபேரி ஊராட்சி தலைவருமான டி.கே. பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். கூட்டமைப்பு செயலாளர் பூமிநாத் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் ஏ.ஜி.எம்.டி. திட்டத்தின் வேலைகளை அந்தந்த ஊராட்சியின் மூலமாக டெண்டர் நடைபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் கணேசன், மாரியப்பன், மாரி சுப்பு ,குயிலி லட்சுமணன், முத்துச்செல்வி ரஞ்சித், முத்துலட்சுமி ராமதுரை, ஸாருகலா ரவி, அழகு துரை, முருகன், கல்யாண சுந்தரம் , முப்புடாதி பெரியசாமிஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் கீழாம்பூர் ஊராட்சி தலைவர் மாரிசுப்பு நன்றி கூறினார்.
- 4-ந்தேதி மதுரையில் இருந்து தென்காசி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்று இரவு குற்றாலத்தில் தங்குகிறார்.
- தென்காசியில் உள்ள இசக்கி மகாலில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
தென்காசி:
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தென்காசி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
இதற்காக 4-ந்தேதி மதுரையில் இருந்து தென்காசி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்று இரவு குற்றாலத்தில் தங்குகிறார்.
தொடர்ந்து மறுநாள் (5-ந்தேதி) காலை தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அதன் பின்னர் தென்காசியில் உள்ள இசக்கி மகாலில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அவர் தி.மு.க. நிர்வாகி களிடம் ஆலோசனை நடத்து கிறார்.
ஏற்பாடுகள் தீவிரம்
அவரது வருகையை ஒட்டி தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
- முகாமில் குழந்தைகளுக்கு புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம் உள்ளிட்ட ஆதார் சேவைகள் செய்து கொடுக்கப்படும்.
- செல்வமகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம் கணக்குகள் முகாமிலே ஆரம்பித்து கொடுக்கப்படும்.
தென்காசி:
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர் குழு இணைந்து பாவூர்சத்திரம் அஞ்சல் துறையுடன் ஆதார் திருத்தச் சிறப்பு முகாம் நடத்தியது.
பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் கடந்த 24-ந் தேதி தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை,ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து 6 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த முகாமில் குழந்தை களுக்கு புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம், 5 வயது முடிந்த குழந்தை களுக்கு ஆதார் புதுப்பித்தல், 15 வயது முடிந்த குழந்தை களுக்கு ஆதார் புதுப்பித்தல், ஆதார் எடுத்து 10 வருடம் முடிந்தவர்களுக்கு ஆதார் புதுப்பித்தல், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் முதலிய ஆதார் சேவைகள் செய்து கொடுக்கப்படும்.
பாவூர்சத்திரம் சுற்று வட்டார மக்கள் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம் கணக்கு கள் தொடங்க வேண்டி இருந்தால் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்றால் முகாமிலே சேமிப்பு கணக்கு ஆரம்பித்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு பாவூர் சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் சசி ஞானசேகரன் மற்றும் நிர்வாகி அருணாச்சலம் , ரஜினி, ஆனந்த், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாவூர்சத்திரம் அஞ்சல் துறை அதிகாரி ஜோதி வரவேற்று பேசினார். கல்லூ ரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார். வட்டார தலைவரும், கண்தானம் விழிப்புணர் குழு நிறுவனரும் ஆகியகே.ஆர்.பி. இளங்கோ, அஞ்சலக ஆய்வாளர் ராம சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் சினேகா பாரதி நன்றி கூறினார்.
- சிறப்பு மருத்துவ முகாமை சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தேவிபட்டணம் ஊராட்சி ஆரம்பப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., வாசு யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ், துணைத்தலைவர் மாடக்கண்ணு, சிவகிரி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், தேவிபட்டணம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர் முருகன், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் விக்கி, தலைமை மருத்துவர்கள் திருமலை, மயில்வாகணன், அப்துல் காதர், மாரிமுத்து, செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் 36 மாதங்களை கடந்தும் நடைபெற்று வருகிறது.
- போதுமான தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் அமைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் காரசார விவாதங்கள் நடைபெற்றது.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-
நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் இந்த மாதத்தில் முடியும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் இன்னும் நிறைய பணிகள் நிலுவையில் உள்ளது. சாலைப் பணிகளை முடிக்கக்கூடிய இலக்கு தேதி மட்டும் மாறுகிறதே தவிர, பணிகள் முடிந்தபாடில்லை. 18 மாதங்களில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் 36 மாதங்களை கடந்தும் நடைபெற்று வருகிறது.
பாவூர்சத்திரம் மற்றும் ராமசந்திரப்பட்டணம் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. விபத்துகளை தடுக்க அதிகாரிகளின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. ஒன் டு ஒன் பஸ்கள் அசுர வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. சாலை பாதுகாப்பில் போதுமான நடவடிக்கைகள் எடுத்து சாலை விபத்துகளை தடுக்காவிட்டால் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்து நீதிமன்றம் வரை சென்று அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முறையிடுவோம். சாலை பாதுகாப்பு குறித்து போதுமான நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
உடனே மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், அங்கு அமர்ந்திருந்த அதிகாரிகளை பார்த்து ஆலங்குளத்தில் இருந்து தென்காசி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். போதுமான தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் அமைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள திறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதுகுறித்து சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளில், சாலை பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதுமான எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்புகள் அமைத்தல், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்றார்.
- ராஜீவ்காந்தி நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- வாகன நிறுத்தம் பகுதியில் ராஜீவ்காந்தி மோட்டார் சைக்கிளை விடுவதற்குள் ரெயில் புறப்பட்டுள்ளது.
கடையம்:
கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியை அடுத்த அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தை உள்ளனர்.
ராஜீவ் காந்தி நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் தினமும் மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்குறிச்சி ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து செங்கோட்டை-நெல்லை பயணிகள் ரெயிலில் ஏறி நெல்லைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அவர் புறப்பட்டுள்ளார். அவர் ரெயில்வே வாகன நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிளை விடுவதற்குள் ரெயில் புறப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து ரெயில்வே நடைமேடைக்கு வேகமாக ஓடி உள்ளார். அங்கு ரெயிலில் ஏறுவதற்கு முயன்றபோது தடுமாறி கீழே விழுந்த அவரது தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாா.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தென்காசி ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சமூக நல்லிணக்க கூட்டம் ஊராட்சி தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.
- சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி அருகே தேவிபட்ட ணம் ஊராட்சியில் சமூக நல்லிணக்க கூட்டம் ஊராட்சி தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலை வர் மாடக்கண்ணு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சமூக நல்லிணக்கம் கருதியும், சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
மேலும் பஸ் வரும் வழியிலும், பழைய பஸ் நிறுத்தம் (மந்தை மைதானம்) அருகே உள்ள ஆக்கிரமிப்பு களையும் அகற்றுவதற்கு தனியாக அனைத்து சமூகம் மற்றும் அனைத்து கட்சி கொண்ட குழு அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பாதயாத்திரை நிகழ்ச்சியை வருகிற 3-ந்தேதி காலை பொட்டல்புதூரில் தொடங்கி கடையத்தில் முடிப்பது என முடிவு செய்யப்பட்டது.
- பொதுக்கூட்டத்தில் திரளான தொண்டர்களை கலந்த கொள்ள செய்வது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவல கத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செய லாளர் பாலகுருநாதன் ராமநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளரும், கன்னியாகுமரி பெரு ங்கோட்ட பொறுப்பாள ருமான பொன் பால கணபதி, மாநில தொழில் பிரிவு செயலாளர் மகா தேவன், தென்காசி மாவட்ட பார்வை யாளர் மகாராஜன், மாநில செயற்குழு உறுப்பி னர் பாண்டித்துரை ஆகி யோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணா மலை தென்காசி மாவட்ட த்தில் பங்கேற்க இருக்கும் என் மண் என் மக்கள் யாத்திரையின் முடிவில் சங்கரன்கோவிலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் சம்பந்த மாக மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், பிற அணி, பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதில், வருகிற 3-ந்தேதி காலை பாதயாத்திரை நிகழ்ச்சியை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொட்டல்புதூரில் தொடங்கி கடையத்தில் முடிப்பது என்றும், அன்று மாலை தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூரில் தொடங்கி தென்காசி புதிய பஸ் நிலையத்தில் நிறைவு செய்யவும், 4-ந் தேதி காலை மேலகடையநல்லூர் கடகலீஸ்வரர் கோவிலில் தொடங்கி கிருஷ்ணா புரத்தில் யாத்திரையை முடிப்பது என்றும் அன்று மாலையில் புளியங்குடி மின்சார அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு தொடங்கி டி.என். புதுக்குடி யில் முடிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.மேலும் 6-ந் தேதி மாலை 4 மணிக்கு சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதி என்.ஜி.ஓ. காலனி யில் தொடங்கி சங்கரன் கோவில் வடக்கு ரத வீதியில் யாத்திரையை முடிப்பது என்றும் பின்னர் மாலை 6 மணிக்கு பொதுக் கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நடை பயணத்திலும், பொதுக்கூட்டத்திலும் தென்காசி மாவட்டத்தில் இருந்து திரளான தொண்டர்களையும், பொது மக்களையும் கலந்த கொள்ள செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர்கள் ராதா கிருஷ்ணன், முத்துக்குமார், பாலமுருகன், முத்துலட்சுமி, மாவட்டச் செயலாளர்கள் ராஜலட்சுமி சுப்ரமணியன், அர்ஜூனன் மற்றும் மண்டல் தலைவர்கள், மண்டல் பார்வையாளர்கள், பிற அணி, பிரிவு நிர்வாகி கள் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி நன்றி கூறினார்.
- செங்கோட்டை பகுதியில் விளையும் காய்கறிகளை உள்ளூர் மட்டுமின்றி கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
- தென்மேற்கு பருவமழையானது ஆரம்பத்தில் பெய்த நிலையில் பின்னர் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது.
செங்கோட்டை:
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான செங்கோட்டை சுற்றுவட்டப் பகுதி பூ மகசூலுக்கு சிறப்பு பெற்றதாகும்.
உளுந்து, சோளம், கம்பு
இப்பகுதி விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி காலங்களில் நெல் மற்றும் தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டப்பயிர்களும், ஏனைய காலங்களில் உளுந்து, சோளம், கம்பு மற்றும் தோட்ட பயிரான கத்தரி, வெண்டை, புடலங்காய், மிளகாய், தக்காளி உள்ளிட்ட கோடை கால பயிர்கள், நெல்லி, புளி உள்ளிட்ட வறட்சியை தாங்கும் பயிர்கள் என பயிரிடுவார்கள்.
இப்பகுதியில் விளையும் காய்கறிகளை உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். மேலும் கேரளாவில் கொண்டாப்படும் ஓணம் பண்டிகை காலத்தில் அங்கு காய்கறிகள் விலை அதிகரிப்பதால் அதனை கணக்கில் கொண்டு செங்கோட்டை பகுதி விவசாயிகள் தங்களின் விளைச்சலை பெருக்குவர். இதனால் வர்த்தக அதிகளவில் இப்பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெருமளவில் பயன்பெற்றனர்.
தென்மேற்கு பருவமழை
இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையானது ஆரம்பத்தில் பெய்த நிலையில் பின்னர் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது.
மழை பொய்த்ததால் மோட்டை, அடவிநயினார் அணை உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது தண்ணீரின் அளவு குறைந்து காணப்படுகிறது.
இதனால் செங் கோட்டை பகுதியில் குறைந்த அளவிலான விவசாயிகளே பயிரிட்டுள்ளனர். காய்கறிகள் விளைச்சல் குறைந்ததால் அவற்றின் விலையும் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.
விவசாயிகள் வேதனை
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் தற்போது வரை பருவமழை பெய்யாததால் செங்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் வெறும் புல் தரையாக காட்சி அளிக்கிறது. இதனால் அவை ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.
இதே நிலை நீடித்தால் தங்களின் வாழ்வாதாரம் பெரும் பின்னடைவை சந்திக்கும் என செங்கோட்டை பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- கீழநீலிதநல்லூர் கிராமத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் பாபு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழநீலிதநல்லூர் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். கீழநீலிதநல்லூர் ஊராட்சி தலைவர் கோதை அம்மாள் பாபு முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் பாபு, மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், மாவட்ட ஆதி திராவிடர் நல தலைவர் ராஜ் என்ற கருப்பசாமி, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் தனசேகரன், மாவட்ட பிரதிநிதி சண்முக பாண்டியன், ஊராட்சி துணைத் தலைவர் ஜானகி, கிளை செயலாளர்கள் முத்துராமலிங்கம், ராஜேந்திரன், மைனர்சாமி, பரஞ்சோதி, தங்கத்துரை, இளைஞர் அணி சிவா, மாதவன், பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து சிறுவன் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.
- பொது மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை, கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து சிறுவன் உள்பட பலர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் என்னிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே சங்கரன்கோவில், மேல நீலிதநல்லூர், புளியங்குடி பகுதிகளில் இதேபோன்று 30-க்கும் மேற்பட்ட நபர்கள் தெரு நாய்களால் கடிபட்டு பாதிப்படைந்ததால் பொதுமக்களுடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடையநல்லூர் தொகுதி முழுவதுமே பொதுமக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்க இயலாத சூழ்நிலை இருக்கிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பொது மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி தர தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது அ.தி.மு.க. வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் உடன் இருந்தார்.







