search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவிபட்டணம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
    X

    தேவிபட்டணம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

    • சிறப்பு மருத்துவ முகாமை சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தேவிபட்டணம் ஊராட்சி ஆரம்பப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., வாசு யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ், துணைத்தலைவர் மாடக்கண்ணு, சிவகிரி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், தேவிபட்டணம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர் முருகன், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் விக்கி, தலைமை மருத்துவர்கள் திருமலை, மயில்வாகணன், அப்துல் காதர், மாரிமுத்து, செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×