search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் ஆதார் திருத்த சிறப்பு முகாம்
    X

    பாவூர்சத்திரத்தில் ஆதார் திருத்த சிறப்பு முகாம்

    • முகாமில் குழந்தைகளுக்கு புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம் உள்ளிட்ட ஆதார் சேவைகள் செய்து கொடுக்கப்படும்.
    • செல்வமகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம் கணக்குகள் முகாமிலே ஆரம்பித்து கொடுக்கப்படும்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர் குழு இணைந்து பாவூர்சத்திரம் அஞ்சல் துறையுடன் ஆதார் திருத்தச் சிறப்பு முகாம் நடத்தியது.

    பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் கடந்த 24-ந் தேதி தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை,ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து 6 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் குழந்தை களுக்கு புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம், 5 வயது முடிந்த குழந்தை களுக்கு ஆதார் புதுப்பித்தல், 15 வயது முடிந்த குழந்தை களுக்கு ஆதார் புதுப்பித்தல், ஆதார் எடுத்து 10 வருடம் முடிந்தவர்களுக்கு ஆதார் புதுப்பித்தல், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் முதலிய ஆதார் சேவைகள் செய்து கொடுக்கப்படும்.

    பாவூர்சத்திரம் சுற்று வட்டார மக்கள் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம் கணக்கு கள் தொடங்க வேண்டி இருந்தால் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்றால் முகாமிலே சேமிப்பு கணக்கு ஆரம்பித்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சிக்கு பாவூர் சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் சசி ஞானசேகரன் மற்றும் நிர்வாகி அருணாச்சலம் , ரஜினி, ஆனந்த், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாவூர்சத்திரம் அஞ்சல் துறை அதிகாரி ஜோதி வரவேற்று பேசினார். கல்லூ ரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார். வட்டார தலைவரும், கண்தானம் விழிப்புணர் குழு நிறுவனரும் ஆகியகே.ஆர்.பி. இளங்கோ, அஞ்சலக ஆய்வாளர் ராம சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் சினேகா பாரதி நன்றி கூறினார்.

    Next Story
    ×