search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP"

    • ஆட்சிக்கு எதிராக, தலைவர்களுக்கு எதிராக எதிர்ப்பு இருந்தால் மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள்.
    • ஆனால், நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் நாம் மக்களின் கோபத்தை கேட்கவில்லை.

    தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டிக் கொடுத்தார். அப்போது மக்களவை தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது குறித்து தனது பார்வையை தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஜூன் 4-ந்தேதி முடிவு என்னதாக இருக்கும் என்பதை எதிர்காலம் காட்டும். ஆனால் பத்திரிகையாளரக்ள், நிபுணர்கள் போன்றோர் தங்களது கருத்துகளை கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்த வரையில், நிலைத்தன்மை (தொடர்ந்து விசயத்தை கூறுவது) சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறுவேன்.

    கடந்த ஐந்து மாதங்களாக நீங்கள் தேர்தலை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள் என்பது விசயம் இல்லை. பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறேன். கடந்த தேர்தலில் பிடித்த அதே இடங்களை பிடிக்கும் அல்லது கூடுதலாக சில இடங்களை பிடிக்கும்.

    அடிப்படையை நாம் பார்க்க வேண்டும். ஆட்சிக்கு எதிராக, தலைவர்களுக்கு எதிராக எதிர்ப்பு இருந்தால், மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால், நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் நாம் மக்களின் கோபத்தை கேட்கவில்லை. ஏமாற்றங்கள், ஆசைகள் நிறைவேறாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாடு தழுவிய கோபத்தை கேட்கவில்லை.

    இந்த நபர் ஆட்சிக்கு வந்தால் நம்முடைய நிலை முன்னேற்றம் அடையும் என மக்கள் உணர்வதாக வைத்துக் கொண்டால் ராகுல் காந்தி வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நாம் எங்கேயும் கேட்க முடியவில்லை. அவருடைய ஆதரவாளர்கள் சொல்லலாம். நான் நாடு தழுவிய அளவில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

    பதவியில் இருப்பவருக்கு எதிராக பரவலான கோபமோ அல்லது சவாலாக இருக்கும் எதிர்ப்பு குரலோ இல்லை. அதனால் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன்.

    கிழக்கு மற்றும் தெற்கில் சுமார் 225 இடங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு பா.ஜனதா மிகப்பெரிய அளவில் சோபிக்கவில்லை. 50-க்கும் குறைவான இடங்களைத்தான் தற்போது வைத்துள்ளது. அவர்கள் தோல்வியடைந்தால், அவர்கள் வடக்கு மற்றும் மேற்கில் சறுக்கியிருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டியது அவசியம். என்னுடைய மதிப்பிட்டின்படி அப்படி இல்லை. ஆனுால், கிழக்கு மற்றும் தெற்கில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.

    இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    • மாநிலத்தின் மோசமான நிதியை நிலையை சுட்டிக்காட்டி மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஆர்பிஐ கடன் வழங்க மறுத்துவிட்டது.
    • மோகன் யாதவ் தலைமையிலான 160 நாட்கள் ஆட்சியின் பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்க வெளியிட நாங்கள் விரும்புகிறோம்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ஜனதா முதல்வர் மோகன் யாதவிடம் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "மாநிலத்தின் மோசமான நிதியை நிலையை சுட்டிக்காட்டி மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஆர்பிஐ கடன் வழங்க மறுத்துவிட்டது. மோகன் யாதவ் தலைமையிலான 160 நாட்கள் ஆட்சியின் பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்க வெளியிட நாங்கள் விரும்புகிறோம். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.

    பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, ரூ.450-க்கு சமையல் எரிவாயு போன்ற வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு ஆடம்பரமாக பணத்தைச் செலவு செய்கிறது. மாநிலத்தின் கஜானா காலியாக இருந்த நிலையில், பாஜக அரசு விமானம் வாங்க திட்டமிட்டு, அமைச்சர்களின் வீடுகளை அலங்கரிப்பதற்கும், அவர்களுக்கு விலை உயர்ந்த வாகனங்கள் வாங்குவதற்கும் பணம் செலவழிக்கிறது" என்றார்.

    • பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.
    • ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.

    கோயிலுக்குச் சென்ற புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் பூரியில் உள்ள ஸ்ரீஜெகன்நாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும், மேலும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைய வழிகாட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று ஒடிஷா பாஜக தலைவர் சம்பித் பத்ரா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    • பாஜகவின் அரசியல்வாதிகள் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் 12 சந்திப்புகள் நடத்தியுள்ளனர்.
    • எதற்காக பாஜகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் ஏன் தொடர்ச்சியாக சந்தித்து கொண்டன.

    பாஜகவுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்ன உறவு உள்ளது என்று காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்காக பல கேள்விகள் கேட்டுள்ளது.

    இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    "2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மோடி அதை கண்டுகொள்வது கூட இல்லை. சீனாவை எதிர்த்து நிற்க பாஜக ஏன் விரும்பவில்லை என்று இந்திய மக்கள் கேட்கிறார்கள்.

    பா.ஜ.க.வுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்புகள் இதன் பின்னணியில் உள்ளதா?

    2008 ஆம் ஆண்டு முதல் பாஜகவின் அரசியல்வாதிகள் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் குறைந்தது 12 சந்திப்புகள் நடத்தியுள்ளனர். இந்த சந்திப்புகள் பெரும்பாலும் சீனாவில் நடந்துள்ளது.

    இந்த சந்திப்புகளில் என்ன பேசப்பட்டது. எதற்காக பாஜகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் ஏன் தொடர்ச்சியாக சந்தித்து கொண்டன.

    2017 ஜூன் மாதத்தில் டோக்லாமில் எல்லை மோதல்கள் நடந்த அதே மாதத்தில் பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஏன் சந்தித்து கொண்டனர்.

    இந்த சந்திப்புகளில் என்ன பேசப்பட்டது என்பதை வெளியிட வேண்டும்" என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

    அண்மையில் பிரதமர் மோடியை சீனா பிளாக்மெயில் செய்து வருகிறது என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்திருந்தார்.

    "நம்மிடம் உள்ள ராணுவ வலிமையால் சீனா ஆக்கிரமித்த இந்திய பகுதிகளை எளிதில் கைப்பற்றிவிடலாம். ஆனால் பிரதமர் மோடி அதை செய்வதில்லை. காரணம் என்னவென்றால் பிரதமர் மோடியை சீனா பிளாக்மெயில் செய்து வருகிறது.சீனா பிரதமர் மோடியை பிளாக்மெயில் செய்வதற்கான காரணத்தை தேர்தலுக்குப் பிறகு வெளிப்படுத்துவேன்' என சமீபத்திய பேட்டியில் சுப்ரமணிய சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனக்கான கடமையில் தேர்தல் ஆணையம் கேவலமாக தோற்றிருக்கிறது.
    • தேர்தல் ஆணையம் செயல்படவில்லை எனில், நீதிமன்றம் தலையிட வேண்டி வரும்.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எவ்வித இழிவான விளம்பரங்களையும் பாஜக வெளியிட கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் குறித்து அவதூறு செய்யும் வகையில் பாஜக இழிவான விளம்பரங்களை வெளியிட்டு வருவதற்கு எதிராக அக்கட்சி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையில், "திரிணாமுல் காங்கிரஸை கொச்சைப்படுத்தும் வகையில் பாஜக வெளியிட்ட விளம்பரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. தனக்கான கடமையில் தேர்தல் ஆணையம் கேவலமாக தோற்றிருக்கிறது. தேர்தல் ஆணையம் செயல்படவில்லை எனில், நீதிமன்றம் தலையிட வேண்டி வரும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸின் புகாரை, தேர்தல் ஆணையம் உரிய நேரத்திற்குள் தீர்த்திருக்க வேண்டும். தேர்தலுக்கு பின் புகார்களை தீர்ப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை" எனவும் நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

    தேர்தல்களின் போது, ஊடகங்கள் எந்தவொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிக்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில், பாஜகவுக்கு எதிரான புகார்களை கிடப்பில் போடும் தேர்தல் ஆணையம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்கிற அர்த்தத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கின் முகவரி @ECISVEEP என்பதிலிருந்து ECISLEEP என மாற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஒரு புறம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என்று கூறியதையும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை.
    • ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாவார்கள். ஆனால், தமிழக விவசாயிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.


    ஒரு புறம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என்று கூறியதையும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டுவதையும் தடுக்கவில்லை. தங்கள் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனையும், உரிமைகளையும் அடகு வைக்க, திமுக எப்போதும் தயங்கியதே இல்லை.

    ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன், 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. உண்மையில், கோபாலபுரக் குடும்பத்தின் நலனைத் தவிர, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    உடனடியாக, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


    • 25 ஆண்டுகால பிஜு ஜனதா தள அரசு ஒடிசா மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
    • ஜூன் 10-ந்தேதி ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும்.

    புவனேஸ்வர்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    பிரதமர் மோடி இன்று காலை பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் வழிபாடு நடத்தினார். அதை தொடர்ந்து அவர் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இரு புறத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக நின்று அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    ரோடு ஷோவை முடித்த பிறகு தேன்கனலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    25 ஆண்டுகால பிஜு ஜனதா தள அரசு ஒடிசா மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இன்று ஒட்டு மொத்த ஒடிசாவும் இதை சிந்திக்கிறது.

    ஒடிசா மாநிலம் இயற்கை வளங்கள் மிக்கதாக இருந்த போதிலும் அங்கு அதிக வறுமை இருப்பதை கண்டு நான் வேதனைப்படுகிறேன். பிஜு ஜனதா தளம் ஆட்சியில் ஒடிசாவில் கனிமங்கள், கலாச்சாரம் பாதுகாப்பாக இல்லை. இந்த ஆட்சியில் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோவில் பாதுகாப்பற்றதாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக ஜெகநாதரின் கருவூலகத்தின் சாவிகள் காணவில்லை.

    ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம், வீடு போன்றவற்றை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    ஒடிசாவில் பா.ஜ.க.வை தேர்ந்தெடுங்கள். மாநிலத்தின் மகன் அல்லது மகளை முதல்-மந்திரி ஆக்குவோம். ஜூன் 10-ந்தேதி ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அழைக்க வந்துள்ளேன்.

    புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட கனிம நிதியில் இருந்து ஒடிசா ரூ.26,000 கோடி பெற்றது. அந்தப் பணத்தை சாலைகள், பள்ளிகள் மற்றும் குடிநீருக்காகச் செலவழித்து இருக்க வேண்டும். ஆனால் பிஜு ஜனதா தளம் அரசு அதை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியில் சிறு தொழிலாளர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டனர்.

    இங்கு பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், சத்தீஸ்கரை போன்று, நெல் பயிருக்கு குவிண்டாலுக்கு 3,100 ரூபாயாக உயர்த்துவோம் என்பது மோடியின் உத்தரவாதம். இன்னும் 2 நாட்களில் நெற்பயிர்க்கான பணம் விவசாயிகளுக்கு வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • நாடு முழுவதும் நாங்கள் ஒரே மாதிரியான இலக்குடன்தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு உரிய பலன் கிடைக்கும்.
    • தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது போல ஒரு மாயை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக பேசுவதாகவும், செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. உண்மையில் நான் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேசியது இல்லை.

    அதுபோல சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் நடந்து கொண்டது இல்லை. நாட்டு மக்களில் யாரையும் நான் சிறப்பு மக்கள் என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை என்றுதான் சொன்னேன். அதை இப்படி திரித்து சொல்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி இந்த தடவை நான் சொல்லாததை எல்லாம் பிரசாரத்தில் சொல்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மீறி வருகிறது.

    காங்கிரஸ் கட்சியினர் சிறுபான்மை இன மக்களை தூண்டும் வகையில் பிரசாரங்களில் பேசுகிறார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மை இன மக்களை காங்கிரஸ் கட்சியினர் இப்படி பயன்படுத்துகிறார்கள்.

    இதை நான் குறிப்பிட்டு சொன்னவுடன் அவர்கள் நான் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக செயல்படுவதாக வதந்தி பரப்புகிறார்கள். மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கரும், நேருவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இன்று அதில் இருந்து விலகி செல்கிறார்கள். அதை சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகும். அதைத்தான் நான் செய்து வருகிறேன்.

    தேர்தல் பிரசார கூட்டங்களில் நான் எப்போதுமே சிறுபான்மை இன மக்கள் பற்றி பேசுவது கிடையாது. ஆனால் காங்கிரசார் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் சிறுபான்மை இன மக்களை குறிப்பிட்டு பேசுவது தேர்தல் சமயத்தில் அவர்களை திசை திருப்புவது போல் உள்ளது.

    நாங்கள் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவு மக்களும் எங்களுடன் சுமூகமாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அனைவரும் சமம் என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும்.

    இந்த விசயத்தில் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சிக்கு சிறுபான்மை இன மக்கள் பலியாகி விடக்கூடாது.

    நாடு முழுவதும் நாங்கள் ஒரே மாதிரியான இலக்குடன்தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு உரிய பலன் கிடைக்கும். தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது போல ஒரு மாயை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

    2019-ம் ஆண்டு தேர்தல் முடிவை பாருங்கள். தென் மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றியது பா.ஜ.க. மட்டுமே. மீண்டும் சொல்கிறேன். இந்த தடவையும் தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    தென் மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா திகழும். தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் கணிசமான அளவுக்கு உயரப்போவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

    காங்கிரஸ் கட்சி மத ரீதியாக இட ஒதுக்கீடு செய்ய நினைக்கிறது. அதை நடக்க விடமாட்டேன். அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவேன். நாடு முழுவதும் இதற்கு மக்களிடம் ஆதரவு உள்ளது.

    நாடு முழுவதும் மக்கள் ஆதரவு இருப்பதால் இந்த முறை அனைத்துப் பகுதிகளிலும் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் வெற்றிகளை பெறுவோம். குறிப்பாக தெற்கிலும், கிழக்கிலும் பாரதிய ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்.

    நாங்கள் நிர்ணயித்துள்ள 400 இடங்கள் லட்சியத்தை மிக எளிதாக கடப்போம். உண்மையில் பாரதிய ஜனதா கட்சிதான் தேசிய அளவில் உணர்வுப்பூர்வமான கட்சி. நாங்கள் எந்த மாநிலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுத்தாலும் அது தேசிய நலனை அடிப்படையாக கொண்டு தான் அமையும்.

    ஆனால் பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் வேறு விதமாக பேசி திசை திருப்புகின்றன. நாட்டின் நலனை சீரழிக்கும் வகையில் உள்ளன.

    பாரதிய ஜனதாவை பிராமணர்கள் கட்சி என்று சொன்னார்கள். ஆனால் பாரதிய ஜனதாவில் தலித், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
    • ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

    நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26-ந் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13-ந் தேதி 4-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனிடையே, இன்று 5-ம் கட்ட தேர்தல் தொடங்கியது.

    ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இதுவரை 23 மாநிலங்களில் நான்கு கட்டங்களாக 379 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    உத்திரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 7, பீகார், ஒடிசாவில் தலா 5 தொகுதிகளில் வாக்குபதிவு நடை பெறுகிறது. ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராஜ்னாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிகளில் வாக்குபதிவு நடைப்பெறுகிறது. வடக்கு மும்பை - பியூஷ்கோயல், லக்னோ - ராஜ்நாத், அமேதி - ஸ்மிருதி தொகுதியிலும் தேர்தல்.

    ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 49 தொகுதிகளில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைப்பெறுகிறது.

    • இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 4-ம் கட்டமாக மே 13 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

    இந்த தொகுதியில் இளைஞர் ஒருவர் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 8 முறை வாக்களிக்கும் நபர் தான் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

    இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், தேர்தல் ஆணையமே இதை கொஞ்சம் பாருங்கள், இப்போதாவது கொஞ்சம் விழித்திருங்கள் என்று பதிவிட்டுள்ளது.

    இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார். அதில், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் ஒரு கொள்ளை கமிட்டிதான் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த வீடியோ தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த விவகாரத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    • 4-ம் கட்டமாக மே 13 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 4-ம் கட்டமாக மே 13 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

    இந்த தொகுதியில் இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 8 முறை வாக்களிக்கும் நபர் தான் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

    இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், தேர்தல் ஆணையமே இதை கொஞ்சம் பாருங்கள், இப்போதாவது கொஞ்சம் விழித்திருங்கள் என்று பதிவிட்டுள்ளது.

    இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார். அதில், "தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் ஒரு கொள்ளை கமிட்டிதான்" என்று தெரிவித்துள்ளார்.

    • இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல்.
    • இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் கடந்த 17ஆம் தேதி வெளியானது.

    இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் கிஷோர் பிரதமர் மோடியை விமர்சித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "மோடி பொது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, மனிதனாக இருக்கவும் தகுதியில்லாதவர். இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல். உண்மைக்கு புறம்பான, நெறிமுறையற்ற கருத்துகளை கூறுவதால் அவர் வெட்கப்பட வேண்டும்.

    அவரது வார்த்தைகள், செயல்பாடுகள் என அனைத்தும், உலகில் அவரை விட பெரிய பொய்யர், பெரிய கோழை, அதிக திமிர் கொண்டவர், மோசமானவர், கொடூரமானவர், முட்டாள், கீழ்த்தரமானவர், உணர்வற்றவர், மக்களுக்கு எதிரானவர், ஆபத்து நிறைந்தவர், ஊழல் நிறைந்த சர்வாதிகாரி என்பதை காட்டுகிறது.

    பாஜக ஆட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும், விவசாயிகள், இராணுவ வீரர்கள், பெண்கள், குழந்தைகள், மருத்துவமனைகள், கல்லூரிகளின் வளர்ச்சி குறித்தும், செய்த பணிகள் குறித்தும் பேசும் திறன் மோடிக்கு இல்லை. வெறும் பொய் சொல்லி வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். மேலும் கற்பனையாக வாக்கு ஜிகாத், ஊடுருவல்காரர்கள், பாகிஸ்தானியர்கள் என்று இந்த நாட்டு மக்களை கூறி வருகிறார்.

    அதோடு பிற கட்சியை சுட்டிக்காட்டி அவர்கள் உங்கள் வீடு, எருமை, சைக்கிள் உள்ளிட்ட சொத்துகளை எடுத்து கொள்வார்கள் என்றும், கோயில்களை பூட்டிவிடுவார்கள் என்றும் பேசி வருகிறார். இப்படியான அதிகாரப்பசி மற்றும் போலி இந்துவாக நடந்து கொள்வதால் இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு முன்னதாக நடிகர் கிஷோர், மோடியை விமர்சித்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது குறிப்பிடத்தக்கது.

    ×