search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voting"

    • பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) தொடங்கியுள்ளது.
    • அரசியல் தலைவர்களும், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலிவுட் சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) தொடங்கியுள்ளது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 6 மணி முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா் - ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா 1 தொகுதி இதில் அடக்கம். அரசியல் தலைவர்களும், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலிவுட் சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சுனில் செட்டி, பார்ஹான் அக்தர், பரேஷ் ராவல், தர்மேந்திரா நடிகை ஜான்வி கபூர், ஹேம மாலினி உள்ளிட்டோர் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

    மேலும் மும்பை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக காலம் காணும்மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங், உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் களம் காணும் ஸ்மிரிதி இரானி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி ஆகியோர் அவரவர் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளனர். 

    • பா.ஜனதாவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டிதான் என்று பதிவிட்டிருந்தார்.
    • தேர்தல் ஆணையமே, இந்த வீடியோவை பார்த்தீர்களா? ஒரு நபர் 8 முறை ஓட்டுப்போடுகிறார். நீங்கள் விழித்திருக்க வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டிருந்தது.

    லக்னோ:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இதில் உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் தொகுதியில் கடந்த 13-ந் தேதி ஓட்டுப்பதிவு நடை பெற்றது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் முகேஷ்ராஜ்பூதி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் ஓட்டுப்பதிவின் போது, இந்த தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாலிபர் ஒருவர் பாரதிய ஜனதாவுக்கு 8 முறை வாக்களித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை அவரே எடுத்துள்ளார்.

    வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லவும், வாக்காளர் ஓட்டுப்போடுவதை படம் பிடிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோவை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, இது தவறு என்று தேர்தல் ஆணையம் உணர்ந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்... பா.ஜனதாவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டிதான் என்று பதிவிட்டிருந்தார்.

    இதேப்போல அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் அந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, தேர்தல் ஆணையமே, இந்த வீடியோவை பார்த்தீர்களா? ஒரு நபர் 8 முறை ஓட்டுப்போடுகிறார். நீங்கள் விழித்திருக்க வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டிருந்தது.

    வீடியோ வைரலானதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக உத்தரபிரதேச தேர்தல் ஆணையர் கூறுகையில், இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் அலுவலர் பிரதீத்திரிபாதி நயா காவ்ன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசார ணையில் சம்பந்தப்பட்ட வாலிபர் அதே பகுதியை சேர்ந்த ராஜல்சிங் என தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 171 (தேர்தல் தொடர்பான குற்றம்), 419 (நபர் மூலம் ஏமாற்றியதற்கான தண்டனை) மற்றும் 128, 132, 136 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றிய தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் அந்த வாக்குச் சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தவும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    • இதுவரை 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது.
    • மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடைபெற இருக் கிறது.

    அரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை வாக்குப்பதிவு நடை பெறவில்லை. அரியானா வில் உள்ள 10 தொகுதிக்கு வருகிற 25-ந்தேதியும், பஞ்சாப்பின் 13 இடங்கள் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகள் ஆகியவற்றுக்கு ஜூன் 1-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது.

    இந்த 3 மாநிலங்களும் இளைஞர்களை அதிக அளவில் பாதுகாப்பு படைகளுக்கு அனுப்புவதில் முன்னணி வகிக்கின்றது. பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேச மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் ஓட்டுகளை கவர காங்கிரஸ் புதிய வியூகம் அமைத்துள்ளது.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்ப்பதற்காக 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    இதன்படி 17½ வயது முதல் 21 வயது வரை கொண்ட இளைஞர்கள் 4 ஆண்டு களுக்கு ஒப்பந் தத்தில் முப்படை அணிக்கு தேர்வு செய்யப் படுவார்கள். அவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் மேலும் 15 ஆண்டு களுக்கு பணியில் வைத்து கொள்ளப் படுவார்கள். மற்றவர்கள் 4 ஆண்டுடன் பணியில் இருந்து விடுவிக்கப் படுவார்கள்.

    இந்த திட்டம் விமர் சனத்துக்கு உள்ளானது. அக்னிபாத் திட்டம் முடி வுக்கு கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. பழைய ஆள் சேர்ப்பு முறை மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் உறுதி அளித்தது.

    அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரசார் இந்த 3 மாநிலங்களிலும் வீடு, வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்து வரு கிறார்கள். இளம் வாக்காளர்களை கவரும் வகையில் இந்த தேர்தல் வியூகம் அமைக்கப் பட்டுள்ளது. அக்னிபாத்தை நீக்குவது உள்பட கட்சியின் 25 உத்தரவாதங்களை விளக்கி தீவிர பிரசாரத்தை இளைஞர் காங்கிரஸ் மேற் கொண்டுள்ளது.

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. சீனிவாஸ் கூறும்போது, `இளைஞர் களுக்கு நீதி கிடைக்க வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்கிறோம்.

    நாம் எங்கு சென்றாலும் வேலையில்லா திண்டாட்டம் தான் மிகப் பெரிய பிரச்சினை. நாங்கள் 30 லட்சம் அரசு வேலைகளை வழங்குவதாக வாக்குறுதிஅளித்து காலக் கெடு வகுத்துள்ளோம். இந்த நேரத்தில் இளைஞர்கள் சிறந்த எதிர் காலத்துக்காக எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்றார்.

    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு தொகுதிகளில் 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் மே 20 ஆம் தேதி பிகார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    அதனையடுத்து மே 25 ஆம் தேதி உத்தரப் பிரதேசம், ஹரியானா, பிகார், மேற்கு வங்கம், டெல்லி, ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மங்களவைத் தொகுதிகளில் 6 ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 6 ஆம் கட்ட தேர்தலில் மொத்தம் 57 தொகுதிகளில் பலவேறு காட்சிகளை சார்ந்தும், சுயேட்சையாகவும் சுமார் 869 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில் ஜனநாயக சீர்திருந்த சங்கம் இன்று (மே 16) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைப் படி 6 ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் பெரிய காட்சிகளை சேர்த்த 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் 141 வேட்பாளர்கள் மீது கடுமையாக குற்ற வழக்குகள் உள்ளன.

     

    இதில் மொத்தமாக 56 பாஜக வேட்பாளர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் 25 காங்கிரஸ் வேட்பாளர்களில் 8 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜவாதி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சி வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மேலும் 869 பேரில் 366 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. பாஜகவில் 48 பேரும், காங்கிரஸில் 20 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 

    • எம்.எல்.ஏ. சிவக்குமார் தாக்கப்பட்டதை கண்ட ஆதரவாளர்கள் கூட்டாக சேர்ந்து வாக்களிக்க வந்தவரை தாக்கினர்.
    • பாதுகாப்புக்கு வந்த போலீசார் மோதல் சம்பவத்தை தடுத்து, பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    அப்போது அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவக்குமார் வாக்களிக்க வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்குப்பதிவு செய்ய முயன்றதாக தெரகிறது. அப்போது, வரிசையில் சென்று வாக்களிக்க செல்வதை சுட்டிக்காட்டிய வாக்காளரை எம்.எல்.ஏ. கன்னத்தில் அறைய, பதிலடியாக எம்.எல்.ஏ.வை திருப்பி அடித்துள்ளார் வாக்காளர்.

    எம்.எல்.ஏ. சிவக்குமார் தாக்கப்பட்டதை கண்ட ஆதரவாளர்கள் கூட்டாக சேர்ந்து வாக்களிக்க வந்தவரை தாக்கினர். தேர்தல் பாதுகாப்புக்கு வந்த போலீசார் மோதல் சம்பவத்தை தடுத்து, பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் வாக்களர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆந்திராவில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    • போலீஸ் பாதுகாப்புடன் நடிகர்கள் இருவரும் வரிசையில் இன்று ஓட்டு போட்டனர்.
    • முக்கிய பிரபலங்கள் இன்று பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து போட்டு போட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஐதராபாத் ஜூப்ளிஹில்சில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    அவர்களை கண்டதும் வாக்குச்சாவடியில் நின்றிருந்த ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.

    போலீஸ் பாதுகாப்புடன் நடிகர்கள் இருவரும் வரிசையில் இன்று ஓட்டு போட்டனர். அப்போது அல்லு அர்ஜுன் கூறியதாவது:-


    அடுத்த 5 ஆண்டுகளுக்கு இன்று ஒரு முக்கியமான நாள் என்பதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தயவு செய்து உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள். இது நாட்டின் அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும்.

    ஏராளமானோர் வாக்களிக்க வருவதால் அதிக அளவில் வாக்காளர்கள் குவிந்துள்ளனர். நான் அரசியல் ரீதியாக எந்த கட்சியுடன் இணைந்திருக்கவில்லை. நான் அனைத்து கட்சிகளுக்கும் நடுநிலையாக இருக்கிறேன் என்றார்.

    தெலுங்கானா பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர். மேலும் பாஜக வேட்பாளர் மாதவிலதா அந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதேபோல முக்கிய பிரபலங்கள் இன்று பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து போட்டு போட்டனர்.

    • ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார்.
    • ஆந்திராவில் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் வாக்களித்து வருகின்றனர்.

    நான்காவது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற வருகிறது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடப்பா தொகுதியின் ஜெயமஹால் அங்கனவாடி வாக்குச் சாவடி எண் 138ல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார்.


    இத்தொகுதியில் காங்கிரஸின் ஒய்.எஸ்.சர்மிளா, தெலுங்குதேசம் கட்சியின் சாதிபிரல்லா பூபேஷ் சுப்பராமி ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யின் ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    அப்போது ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, "கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பார்த்துவிட்டீர்கள், இந்த ஆட்சியில் பலன் அடைந்ததாக நீங்கள் நினைத்தால், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் இந்த ஆட்சிக்கு வாக்களியுங்கள்.. என்று அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.



    • பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இவர், தான் இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என உறுதி அளித்தார்.
    • தொழிலாளர்களின் கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைத்துள்ளன என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 2-வது கட்ட தேர்தலின் போது கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு எப்படியும் வெற்றி பெற்று தனது வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என பாரதிய ஜனதா திட்டமிட்டு தேர்தல் பணியாற்றியது. இதற்காக முக்கிய பிரமுகர்களை களம் இறக்கியது. இதில் முக்கியமானவர் நடிகர் சுரேஷ்கோபி.

    திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இவர், தான் இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என உறுதி அளித்தார். இதனை உறுதி செய்துள்ள பாரதிய ஜனதா நிர்வாகிகள், திருச்சூர் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ்கோபி வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளனர்.

    இந்து வாக்குகள் அனைத்தும் சுரேஷ்கோபி மீது குவிந்துள்ளதாக தெரிவிக்கும் பாரதிய ஜனதா, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சுரேஷ்கோபிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. தொழிலாளர்களின் கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைத்துள்ளன என்றும் அவர்கள் நம்புகின்றனர். திருச்சூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் அவருக்கு 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை கிடைக்கும் என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜவுளி நிறுவனங்கள், செங்கல் சூளை, கெமிக்கல் தொழிற்சாலை, கல்குவாரிகள், தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
    • தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்ததோடு தோட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

    தமிழகத்தில் கட்டுமானம் தொடங்கி பெரிய உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், கோழிப்பண்ணை, ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனங்கள், நட்சத்திர விடுதிகள், செங்கல் சூளை, சாய, தோல் தொழிற்சாலை வணிக நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான ஜவுளி நிறுவனங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    ஈரோடு மாநகர் பகுதி, புறநகர் பகுதி, பெருந்துறை சிப்காட் மற்றும் மாவட்ட முழுவதும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் ஜவுளி நிறுவனங்கள், செங்கல் சூளை, கெமிக்கல் தொழிற்சாலை, கல்குவாரிகள், தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.

    முதற்கட்ட தேர்தலுக்காக சென்றவர்களே இன்னும் ஈரோடு திரும்பாத நிலையில், 3-ம் கட்ட தேர்தலையொட்டி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளதால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா மாநில தொழிலாளர்கள் ஜவுளி, உணவகங்கள் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தாளவாடி பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள், தோட்டங்களில் அவர்களின் பங்கு மிகப்பெரியது.

    தற்போது அவர்கள் ஓட்டு போடுவதற்காக தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்ததோடு தோட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் கூறும்போது,

    ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர்.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பனியன் கம்பெனிகள், செங்கல் சூளை, ஜவுளி நிறுவனங்கள் முக்கியமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் பணிக்கு வரும் வரை தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

    • காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் பழங்குடி விவசாயிகள் வசித்து வருகிறார்கள்.
    • கிராமத்தில், 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள தென்கன்னட பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட பெல்தங்கடி வட்டத்தின், பஞ்சருமலே குக்கிராமத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தக் கிராம வாக்குச்சாவடியில் மொத்தம் 111 வாக்குகள் உள்ளன. வாக்காளர்கள் அனைவரும் வருகை தந்து வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே 111 பேரும் வாக்களித்துவிட்டனர்.

    காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் பழங்குடி விவசாயிகள் வசித்து வருகிறார்கள். இந்தக் கிராமத்தில் மின்சாரம், போக்குவரத்து வசதிகள் இல்லாவிட்டாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பொழியும் நீரில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். காட்டில் 8 கி.மீ. நடந்து வந்து முடிகெரே நகரில் பஸ்சைப் பிடித்து, தாலுகா அலுவலகம் அமைந்திருக்கும் பெல்தங்கடிக்கு வரும் நிலையில் கிராம மக்கள் உள்ளனர்.

    இத்தனைக் குறைபாடுகள் இருந்தாலும், அனைவரும் தவறாமல் வாக்களித்ததற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

    இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அன்னி மலேகுடியா கூறுகையில், 'நகரங்களில் செய்யப்படும் வசதிகள் கிராமங்களில் செய்ய முடியாது என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக வாக்களிக்கும் எண்ணத்தில் மாற்றம் ஏற்படவில்லை. ஒருவேளை 500 வாக்காளர்கள் இருந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் வாக்களித்திருப்பார்கள்" என்றார். இந்தக் கிராமத்தில், 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    • பொள்ளாச்சி தொகுதியில் கடந்த தேர்தலைவிட ஒரு சதவீத வாக்கு குறைந்து 70.70-ஆக பதிவாகியுள்ளது.
    • திண்டுக்கல் தொகுதியில் கடந்த தேர்தலில் 75.24 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.99 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 34 தொகுதிகளில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

    சென்னையில் மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளில் வடசென்னையில் 60.13 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் இங்கு 64.23 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 4 சதவீதம் அளவுக்கு அங்கு வாக்குகள் குறைந்துள்ளன. தென் சென்னையில் 54.27 சதவீத ஓட்டுகளும், மத்திய சென்னையில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

    இதில் தென் சென்னையில் 3 சதவீத ஓட்டுகளும், மத்திய சென்னையில் 5 சதவீத ஓட்டுகளும் கடந்த தேர்தலைவிட குறைவாக பதிவாகியுள்ளன. திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதியில் 68.31 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

    கடந்த தேர்தலில் இங்கு 72.33 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

    காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் 71.55 சதவீத ஓட்டுகளும் ஸ்ரீபெரும்புதூரில் 60.21 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. காஞ்சிபுரத்தில் 4 சதவீதம் அளவுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சதவீத வாக்குகளும் குறைந்துள்ளன.

    அரக்கோணத்தில் கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் அளவுக்கு குறைந்து 74.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கிருஷ்ணகிரி தொகுதியில் 71.31 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் குறைவாகும்.

    தர்மபுரி பாராளுமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இங்கு 2019-ம் ஆண்டு தேர்தலிலும் 82.33 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. இருப்பினும் கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் அளவுக்கு குறைவாகவே அங்கு வாக்கு பதிவாகி உள்ளது.

    திருவண்ணாமலை தொகுதியில் கடந்த தேர்தலைவிட 5 சதவீத வாக்குகள் குறைந்து 73.88 சதவீதமும், ஆரணியில் 3 சதவீத வாக்குகள் குறைந்து 75.65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. நாமக்கல் தொகுதியில் 78.16 சதவீத வாக்குகளும், ஈரோட்டில் 70.45 சதவீத வாக்குகளும், திருப்பூரில் 70.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளது.

    இந்த 3 தொகுதிகளிலும் 3 சதவீதம் அளவுக்கு குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளன. நீலகிரி தொகுதியில் கடந்த தேர்தலில் 73.99 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.93 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    பொள்ளாச்சி தொகுதியில் கடந்த தேர்தலைவிட ஒரு சதவீத வாக்கு குறைந்து 70.70-ஆக பதிவாகியுள்ளது. திண்டுக்கல் தொகுதியில் கடந்த தேர்தலில் 75.24 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.99 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன.

    இது 5 சதவீதம் குறைவாகும். கரூர் தொகுதியில் ஒரு சதவீதம் குறைந்து 78.61-ஆக பதிவாகியுள்ளது. திருச்சியில் 2 சதவீத வாக்குகள் குறைந்து 67.45 ஆகவும், பெரம்பலூரில் 77.37 ஆகவும் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. கடலூரில் 76.48 ஆக இருந்த வாக்கு சதவீதம் 4 சதவீதம் குறைந்து 72.28 ஆக பதிவாகி இருக்கிறது.

    சிதம்பரம், மயிலாடுதுறையில் தொகுதிகளில் 2 சதவீத வாக்குகள் குறைந்து உள்ளன. சிதம்பரத்தில் 75.32 சதவீதமும் மயிலாடுதுறையில் 70.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

    நாகப்பட்டினத்தில் கடந்த தேர்தலில் 76.88 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் தற்போது 5 சதவீதம் குறைந்து 71.55 ஆக பதிவாகி உள்ளது. தஞ்சையில் 2 சதவீதம் குறைந்து 68.18 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சிவகங்கை தொகுதியில் கடந்த தேர்தலில் 69.87 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது அது 5 சதவீதம் குறைந்து 63.94 ஆக பதிவாகி உள்ளது.

    மதுரை தொகுதியிலும் 5 சதவீத வாக்குகள் குறைந்து உள்ளன. கடந்த தேர்தலில் 66.02 சதவீதமாக இருந்த வாக்குகள் தற்போது 61.92 சதவீதம் குறைந்துள்ளது. தேனி தொகுதியிலும் கடந்த தேர்தலைவிட 5 சதவீத வாக்குகள் குறைந்து 69.87 சதவீதம் பதிவாகியுள்ளன.

    விருதுநகர் தொகுதியில் 2சதவீத வாக்குகள் குறைந்து 70.17 சதவீதமாக பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில் 68.35 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது 68.18 சதவீதம் ஓட்டு போட்டுள்ளனர்.

    தூத்துக்குடியில் 69.43 ஆக இருந்த வாக்கு சதவீதம் 66.88 ஆக குறைந்துள்ளது. தென்காசியில் 71.37 ஆக இருந்த வாக்கு சதவீதம் 67.55 ஆகவும், நெல்லையில் 67.21 சதவீதமாக இருந்த வாக்குகள் 64.10 ஆகவும் குறைந்து உள்ளன. கன்னியாகுமரியில் 69.83 சதவீதமாக இருந்த வாக்குகள் 65.46 சதவீதமாக குறைந்துள்ளன.

    தமிழகத்தில் 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைவிட தற்போதைய தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலில் 73.74 சதவீத வாக்குகளும் 2019-ம் ஆண்டு 72.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் 69.46 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன. வாக்கு சதவீதம் குறைவுக்கு கொளுத்தும் வெயில், தொடர் விடுமுறை ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

    மக்கள் ஆர்வமுடன் ஓட்டு போடாமல் தவிர்த்திருப்பது அரசியல் கட்சிகள் மீதான கோபத்தை காட்டுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். இது தேர்தல் முடிவின் போது எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது. மக்களின் இந்த தேர்தல் வெறுப்பு தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    குறைவான வாக்குப்பதிவுகளில் மத்திய சென்னை, மதுரை, திண்டுக்கல், நாகப்பட்டினம், தேனி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளன. அதே நேரத்தில் 5 தொகுதிகளின் வாக்கு சதவீதம் சற்று அதிகரித்தும் காணப்படுகிறது. வேலூர் தொகுதியில் 71.32 சதவீதமாக இருந்த வாக்குகள் 73.42 ஆக உயர்ந்துள்ளது.

    விழுப்புரத்தில் 74.56 ஆக இருந்த வாக்கு சதவீதம் 76.47 ஆகவும், கள்ளக்குறிச் சியில் 78.77 சதவீதமாக இருந்தது 79.25 ஆகவும், சேலத்தில் 77.86 ஆக இருந்த சதவீதம் 78.13 ஆகவும் கோவையில் 63.86 ஆக இருந்த வாக்கு சதவீதம் 64.81 ஆகவும் அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சிக்கிமில் மொத்தம் 32 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
    • சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதி நடக்கிறது.

    காங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இம்மாநிலத்தில் 4.65 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள். காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். சிக்கிமில் இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

    இந்நிலையில், சிக்கிமில் 67.95 சதவீதம் வாக்குகள் பதிவானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதியும், பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதியும் நடைபெறுகிறது.

    ×