search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மிரிதி இராணி"

    • கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர் கேள்வி.
    • மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தகவலை கூறி மத்திய மந்திரி விளக்கம்.

    கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகள் இடையிலேயே கல்வியை கைவிடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இரானி அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், நாடு முழுவதும் ஆரம்ப பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்பட அனைத்து கல்வி நிலைகளிலும் பள்ளி மாணவர்கள் இடையிலேயே கல்வியை கைவிடும் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    அனைத்து கல்வி நிலையிலும் பள்ளி இடை நிற்றல் விகிதம் குறைந்து வருவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி உள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×