search icon
என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    • ஆவி வடேகர் என்ற அந்த பயனர் வெளியிட்ட வீடியோ மணாலி பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.
    • வைரலான வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது பல பெண்களின் கனவாகவே இருக்கிறது. வயது கடந்தாலும் அவர்களின் ஆசைகள் நிறைவேறுவதற்காகவும், சினிமா வாய்ப்புக்காகவும் தவம் கிடக்கின்றனர்.

    அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த பெண் ஒருவர் சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தின் அழகிய மலை பகுதிக்கு தனது மகனுடன் சுற்றுலா சென்ற போது ஸ்ரீதேவியின் பாடலுக்கு அவரை போன்றே நடனம் ஆடி தனது தீராத பாலிவுட் கனவை தீர்த்து கொண்டதாக அவரது மகன் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    ஆவி வடேகர் என்ற அந்த பயனர் வெளியிட்ட வீடியோ மணாலி பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், ஆவி வடேகரின் தாயார் 1989-ம் ஆண்டு யாஷ்சோப்ராவின் 'சாந்தினி' திரைப்படத்தில் ஸ்ரீதேவி மற்றும் ரிஷிகபூர் ஆகியோர் நடனம் ஆடிய 'தேரே மேரே...' பாடலுக்கு ஸ்ரீதேவி போலவே நடனம் ஆடும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ தனது தாய்க்கு மறக்க முடியாத தருணம் ஆக இருந்ததாக குறிப்பிட்டுள்ள ஆவி வடேகர் தனது பதிவில், வயது என்பது உங்கள் கனவை நிறைவு செய்வதற்கான ஒரு எண் என்று அதற்கு சொல்லுங்கள் என பதிவிட்டுள்ளார். வைரலான இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.


    • இதுவரை 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது.
    • மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடைபெற இருக் கிறது.

    அரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை வாக்குப்பதிவு நடை பெறவில்லை. அரியானா வில் உள்ள 10 தொகுதிக்கு வருகிற 25-ந்தேதியும், பஞ்சாப்பின் 13 இடங்கள் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகள் ஆகியவற்றுக்கு ஜூன் 1-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது.

    இந்த 3 மாநிலங்களும் இளைஞர்களை அதிக அளவில் பாதுகாப்பு படைகளுக்கு அனுப்புவதில் முன்னணி வகிக்கின்றது. பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேச மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் ஓட்டுகளை கவர காங்கிரஸ் புதிய வியூகம் அமைத்துள்ளது.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்ப்பதற்காக 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    இதன்படி 17½ வயது முதல் 21 வயது வரை கொண்ட இளைஞர்கள் 4 ஆண்டு களுக்கு ஒப்பந் தத்தில் முப்படை அணிக்கு தேர்வு செய்யப் படுவார்கள். அவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் மேலும் 15 ஆண்டு களுக்கு பணியில் வைத்து கொள்ளப் படுவார்கள். மற்றவர்கள் 4 ஆண்டுடன் பணியில் இருந்து விடுவிக்கப் படுவார்கள்.

    இந்த திட்டம் விமர் சனத்துக்கு உள்ளானது. அக்னிபாத் திட்டம் முடி வுக்கு கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. பழைய ஆள் சேர்ப்பு முறை மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் உறுதி அளித்தது.

    அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரசார் இந்த 3 மாநிலங்களிலும் வீடு, வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்து வரு கிறார்கள். இளம் வாக்காளர்களை கவரும் வகையில் இந்த தேர்தல் வியூகம் அமைக்கப் பட்டுள்ளது. அக்னிபாத்தை நீக்குவது உள்பட கட்சியின் 25 உத்தரவாதங்களை விளக்கி தீவிர பிரசாரத்தை இளைஞர் காங்கிரஸ் மேற் கொண்டுள்ளது.

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. சீனிவாஸ் கூறும்போது, `இளைஞர் களுக்கு நீதி கிடைக்க வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்கிறோம்.

    நாம் எங்கு சென்றாலும் வேலையில்லா திண்டாட்டம் தான் மிகப் பெரிய பிரச்சினை. நாங்கள் 30 லட்சம் அரசு வேலைகளை வழங்குவதாக வாக்குறுதிஅளித்து காலக் கெடு வகுத்துள்ளோம். இந்த நேரத்தில் இளைஞர்கள் சிறந்த எதிர் காலத்துக்காக எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்றார்.

    • பாகிஸ்தானுக்கு ஆட்டா (மாவு), மின்சாரம் தேவை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் வளையல்கள் கூட இல்லை என்பது எங்களுக்குத் தெரியாது.
    • பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்கிறர்கள். பாகிஸ்தான் வளையம் அணியவில்லை என்றால், இந்தியா அணிய வைக்கும்.

    பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சிம்லாவில் உள்ள குலுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது கங்கனா ரனாவத் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்கு ஆட்டா (மாவு), மின்சாரம் தேவை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் வளையல்கள் கூட இல்லை என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் (பரூக் அப்துல்லா மற்றும் மணி சங்கர் அய்யர் பாகிஸ்தான் அணுஆயுதத்தை பயன்படுத்தும் எனக் கூறியதை சுட்டிக்காட்டி) பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்கிறர்கள். பாகிஸ்தான் வளையம் அணியவில்லை என்றால், இந்தியா அணிய வைக்கும்.

    பயந்துபோன பிரதமர் தலைமையில் ஸ்திரமற்ற மற்றும் பலவீனமான காங்கிரஸ் ஆட்சியை இந்தியா விரும்பவில்லை. மோடியின் கரத்தை வலுப்படுத்த பா.ஜனதாவுக்கு வாக்களியுங்கள். அதை தவிர்த்து மற்ற பட்டன்களை அழுத்தினால், உங்களுடைய வாக்கு வீண் என்பதாகிவிடும்

    இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பது குறித்து மத்திய பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்திருந்தார்.

    அது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா பதில் அளிக்கையில் "பாதுகாப்பு மந்திரி அதைச் சொன்னால், மேலே செல்லுங்கள். நாங்கள் யார் நிறுத்துவது? ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் (பாகிஸ்தான்) வளையல் அணியவில்லை. அவர்களிடம் அணுகுண்டுகள் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக அந்த அணுகுண்டு நம் மீது விழும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. உள்ளது மற்றும் இருக்கும். இந்தியாவின் வளர்ந்து வரும் சக்தி, கௌரவம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை இந்தியாவில் சேர விரும்புவதற்கு வழிவகுக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    மணி சங்கர் அய்யர் "பாகிஸ்தானும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. எனவே, அந்நாட்டுக்கு இந்தியா மரியாதை அளிக்க வேண்டும். அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனென்றால், பாகிஸ்தானிடமும் அணுகுண்டு இருக்கிறது. அப்படி மரியாதை அளிக்காவிட்டால், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டை பயன்படுத்துவது பற்றி பரிசீலிப்பார்கள். பாகிஸ்தானில் யாராவது பைத்தியக்கார மனிதர் பதவிக்கு வந்து, அணுகுண்டை பயன்படுத்தினால், அது நல்லதல்ல. அது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.

    • கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
    • மண்டி தொகுதியில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    சிம்லா:

    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

    இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் நடக்கிறது. இதில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

    இந்நிலையில், இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    ஏற்கனவே பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.
    • இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் 2014-ம் ஆண்டில்தான் கிடைத்தது என பேசினார்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பின், இந்தியா மட்டும் ஏன் இந்து தேசம் என அறிவிக்கப்படவில்லை.

    ஆங்கிலேயர்கள், மொகலாயர்களின் மோசமான ஆட்சியைப் பார்த்த நம் முன்னோர், பின்னர் காங்கிரசின் தவறான ஆட்சியைப் பார்த்துள்ளனர்.

    2014-ம் ஆண்டில்தான் சனாதன சுதந்திரம், மத சுதந்திரம், சிந்திக்கும் சுதந்திரம், இந்து தேசத்தை இந்து தேசமாக ஆக்குவதற்கான சுதந்திரம் உள்ளிட்டவை கிடைத்துள்ளது. அதுதான் உண்மையான சுதந்திரம் என தெரிவித்தார்.

    கங்கனா ரனாவத்தின் இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    • இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன.
    • இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    தர்மசாலா:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இன்னும் 13 ஆட்டங்களே மீதமுள்ளன. இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன.

    அடுத்த சுற்று வாய்ப்புக்கு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி

    பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிபிடித்து புதிய சரித்திரம் படைத்த பஞ்சாப் அணி தர்மசாலாவில் அரங்கேறிய கடந்த லீக் ஆட்டத்தில் 28 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது.

    தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங் (315 ரன்), பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன், ரபடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார்.

    தங்களது உள்ளூர் மைதானங்களான முல்லாப்பூரில் 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 4 தோல்வியும், தர்மசாலாவில் ஒன்றில் ஆடி அதில் தோல்வியும் கண்டுள்ள பஞ்சாப் அணி சொந்த மைதானத்தில் தங்களது பரிதாப நிலையை மாற்ற முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    பெங்களூர் அணி

    இதேபோல் பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.

    முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி கண்டு பெருத்த சரிவை சந்தித்த பெங்களூரு அணி கடந்த 3 ஆட்டங்களில் வரிசையாக ஐதராபாத் மற்றும் குஜராத்தை 2 முறை அடுத்தடுத்து வீழ்த்திய உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 542 ரன்கள்), கேப்டன் டுபிளிஸ்சிஸ் (352), தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், வில் ஜாக்சும், பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்து கட்டும்.

    எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார் அல்லது ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ரபடா.

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள் அல்லது ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ளார்
    • இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்

    இமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், கங்கனா தன்னை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

    நேற்று கங்கனா மண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "நான் ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, மணிப்பூர் என நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எனக்கு வியப்புதான். ஏனெனில், அந்த அளவுக்கு மக்கள் என்மீது அன்பு பொழிந்து வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சனுக்குப் பிறகு, இந்தத் துறையில் யாருக்காவது இவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது என்றால், அது எனக்குத்தான். இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்" என்று பேசியுள்ளார்.

    இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கங்கனாவை கலாய்த்து வருகின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இமாச்சல் பிரதேசத்தில் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுடன் சந்திப்பு.
    • பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளர் கங்கனா ரனாவத்.

    பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், கங்கனா ரனாவத் இன்று திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை தர்மஷாலாவில் சந்தித்தார்.

    இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    அதில், " இன்று நான் தர்மசாலாவில் தலாய் லாமாவை சந்தித்தேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும்.

    அவர் இமாச்சல பிரதேசத்தில் இருப்பதை ரசிப்பதாகவும், பாரதத்தை முற்றிலும் நேசிக்கிறேன் என்றும் அவரது புனிதர் கூறினார்.

    அத்தகைய பாக்கியம்.. அத்தகைய மரியாதை.." என்றார்.

    • கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநில மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான பிரதிபா சிங் போட்டியிடுகிறார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரதிபா சிங் போடடியிடுகிறார். இவரது மகன் விக்ரமாதித்யா சிங் இமாச்சல பிரதேச மாநில மந்திரியாக இருந்து வருகிறார்.

    தனது தாயாருக்காக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் விக்ரமாதித்யா சிங். இந்த நிலையில் கங்கனா ரனாவத் சர்ச்சைகளின் ராணி என விக்ரமாதித்யா சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விக்ரமாதித்யா சிங் கூறியதாவது:-

    கங்கனா ரனாவத் சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் சர்ச்சைகளின் ராணி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர் அவ்வப்போது பேசியது தேர்தலில் கேள்வி எழுப்பப்படாது என்று நினைத்தால், அதன்பின் அவருக்கு ஜெய் ஸ்ரீராம்.

    பிரச்சனைகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்படும். அதற்கு அவர் பதில் அளித்தாக வேண்டும். குறிப்பாக இமாச்சல பிரதேச மாநலித்தின் மண்டி தொகுதி மக்களுக்கு.

    இவ்வாறு விக்ரமாதித்யா தெரிவித்துள்ளார்.

    மாட்டிறைச்சி சாப்பிடுவதாக கங்கனா ரனாவத்திற்கு எதிராக எழும்பிய குற்றச்சாட்டு குறித்து கூறுகையில் "கடவுள் ராமர் அவருக்கு அருளாசி வழங்கட்டும். இந்த மாநில மக்களவை பற்றி ஏதும் தெரியாத அவர் வெற்றிப்பெற போவதில்லை. ஆகையால் அவர் தேவ் பூமியில் இருந்து திரும்புவார்" என்றார்.

    ஆனால், கங்கனா ரனாவத், முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்றார்.

    • நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்த அவர் 100 நாட்களில் பயணத்தை முடித்துள்ளார்.
    • தனது பயணத்தின் போது சந்தித்த பல்வேறு சவால்களையும் வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

    நாட்டின் ஒரு பகுதியில் இருந்து தொலைதூரத்தில் உள்ள மற்றொரு இடத்திற்கு மக்கள் பல்வேறு போக்குவரத்து முறைகளில் பயணம் செய்து வருகிறார்கள். சிலர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன முறைகளிலும் தங்களது பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

    அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலியில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரு வாலிபர் ஸ்கேட்டிங் போர்டில் பயணம் செய்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. தொழில் முறை ஸ்கேட்டிங் போர்டு வீரரான ரித்திக் கிராட்ஸெல் என்பவர் கடந்த ஜனவரி 7-ந்தேதி தனது முதல் நாள் பயணத்தை தொடங்கி உள்ளார்.

    தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்த அவர் 100 நாட்களில் பயணத்தை முடித்துள்ளார். கடந்த 1-ந் தேதி கன்னியாகுமரியில் அவரது பயணம் முடிவுக்கு வந்துள்ளது. தனது பயணத்தின் போது சந்தித்த பல்வேறு சவால்களையும் வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

    அதில், ஒரு சில இடங்களில் கூகுள் மேப் வேலை செய்யாதது, தேசிய நெடுஞ்சாலைகளில் அடர்ந்த மூடுபனி போன்றவை சவாலாக அமைந்ததாக கூறி உள்ளார். இந்த வீடியோக்கள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.



    • சன்னி தியோல் தொகுதி மக்கமே செல்லவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
    • கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதிநிதியை நியமித்தாக கூறப்படும் அறிவிப்பை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர்.

    பா.ஜனதா கட்சி இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இத்தொகுதியின் எம்.பி.யாக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் பிரதிபா சிங் இருந்து வருகிறார். இவர் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இன்னும் இந்த தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் பிரதிபா சிங் மகனும், இமாச்சல பிரதேச மாநில மந்திரியுமான விக்ரமாத்தியா சிங், நடிகரும் எம்.பி.யுமான சன்னி தியோல் உடன் கங்கனா ரனாவத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார்.

    சன்னி தியோல் பாராளுமன்றத்திற்கும், பாராளுமன்ற தொகுதிக்கும் செல்வதில்லை என விமர்சனம் வைக்கப்படுகிறது. சன்னி தியோல் தனது தொகுதி கூட்டத்திற்கா தனக்குப்பதிலாக தனது பிரதிநிதியை நியமித்ததாக கூறப்படும் அறிவிப்பை விக்ரமாத்தியா சிங் வெளியிட்டுள்ளார்.

    இதை வெளியிட்டு விக்ரமாதித்யா "அதேபோன்ற நிலை மண்டி தொகுதிக்கும் உருவாகிவிடக் கூடாது என நான் கடவுள் ராமரிடம் வேண்டிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் வாக்களிப்பதற்கு முன்னதாக இதை நினைத்து பார்க்க வேண்டும் என்றார்.

    • பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்
    • இமாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து ஜூன் 1-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது

    இமாச்சலப் பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேருக்கும் வரும் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.

    அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் 6 பேர் கட்சி மாறி வாக்களித்ததால் குறைந்த எம்எல்ஏக்களை (25) கொண்ட பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    இதனால், பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    சுதிர் ஷர்மா, இந்தர் தத் லக்ஷன்பால், ரவி தாக்கூர், சேதன்யா ஷர்மா ராஜிந்தர் ராணா, தேவிந்தர் குமார் புட்டோ ஆகிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 6 பேர் சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் 6 பேரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    இமாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து ஜூன் 1-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதனிடையே, பாஜகவை ஆதரிப்பதாக கூறி, சுயேட்சை எம்எல்ஏக்கள் ஹோஷியார் சிங், ஆஷிஷ் ஷர்மா, கே.எல். தாக்கூர் ஆகிய மூவரும் ஷிம்லாவில் சட்டப்பேரவை செயலாளர் யஷ்பால் ஷர்மாவை சந்தித்து, ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.

    இதனால் 9 சட்டப்பேரவை உறுப்பினர்களின் இடங்கள் காலியாக உள்ளது. இதனால் சட்டப்பேரவையின் பலம் தற்போது 68-ல் இருந்து 59 ஆக குறைந்துள்ளது. இதில், ஆளும் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் உள்பட 34 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. பாஜக, 25 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. எனவே, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×