search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • தனிப்பட்ட உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு.
    • அவ்வாறு செய்வது நாளடைவில் நம்பிக்கையை கெடுத்துவிடும்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது தனியுரிமையை மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    போட்டி நடைபெறும் போதும், பயிற்சியின் போதும் சக வீரர்கள் மற்றும் நண்பர்களுடன் மேற்கொள்ளும் உரையாடல்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பதிவு செய்து ஒளிபரப்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    தனது தனிப்பட்ட விஷயங்களை பதிவு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ள போதிலும், அந்நிறுவனம் தொடர்ந்து அவ்வாறு செய்வது நாளடைவில் நம்பிக்கையை கெடுத்துவிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் ஊடுருவல்கள் அதிகரித்துவிட்டன. பயிற்சின் போதோ அல்லது போட்டியின் போதோ நாங்கள் சக வீரர்கள மற்றும் நண்பர்களுடன் மேற்கொள்ளும் தனிப்பட்ட உரையாடல்கள் கூட பதிவு செய்யப்படுகின்றன."

    "எனது உரையாடல்களை பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இடம் கேட்டுக் கொண்ட பிறகும், அவை ஒளிபரப்பப்பட்டன. பிரத்யேக தரவுகளை பெறுவது, பார்வையாளர்களை அதிகப்படுத்திக் கொள்வது போன்ற விஷங்களில் மட்டுமே ஆர்வம் காட்டும் செயல்களால் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் இடையே உள்ள நம்பிக்கையை ஒருநாள் உடைத்துவிடும். நல்ல உணர்வு மேலோங்கட்டும்," என்று தெரிவித்துள்ளார்.


    • ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் அடித்துள்ளார்.
    • பும்ரா 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த வருட ஐபிஎல் சீசன் சிறப்பாக அமையவில்லை. 14 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ், அதற்கு பின் தொடரந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. என்றபோதிலும் அதன் உத்வேகத்தை தொடர்ந்து எடுத்துச்செல்ல முடியவில்லை. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் பதவிதான். அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதால் அணியில் இரு பிரிவு உண்டானதாக கூறப்பட்டது.

    மேலும் ஹர்திக் பாண்ட்யா இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. ஒட்டுமொத்தமாக கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்துள்ளது.

    ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். இவரது ஸ்கோரில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும்.

    திலக் வர்மா 13 போட்டிகளில் விளையாடி 416 ரன்கள் அடித்துள்ளார். இவரது ஸ்கோரில் 3 அரைசதம் அடங்கும். சூர்யகுமார் யாதவ் 11 போட்டிகளில் விளையாடி 345 ரன்கள் அடித்துள்ளார். இஷான் கிஷன் 320 ரன்களும், டிம் டேவிட் 241 ரன்களும் சேர்த்தனர்.

    பந்து வீச்சில் பும்ரா 13 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த சீசனில் இதுவரை பஞ்சாப் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் 13 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

    சாவ்லா மற்றும் கோயேட்சே தலா 13 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 11 விக்கெட்டுகளும், நுவான் துஷாரா 8 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் கடந்த முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. 2022-ல் கடைசி இடத்தை பிடித்தது. 2021-ல் ஐந்தாவது இடத்தையும், 2020-ல் முதல் இடத்தையும், 2019-ல் முதல் இடத்தையும், 2018-ல் ஐந்தாவது இடத்தையும், 2017-ல் முதல் இடத்தையும், 2015-ல் 2-வது இடத்தையும், 2014-ல் ஐந்தாவது இடத்தையும், 2013-ல் 2-வது இடத்தையும், 2012-ல் 3-வது இடத்தையும், 2011-ல் 3-வது இடத்தையும், 2010-ல் முதல் இடத்தையும், 2009-ல் 7-வது இடத்தையும், 2008-ல் ஐந்தாவது இடத்தையும் பிடித்திருந்தது.

    • ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கீழ் ரோகித் சர்மா விளையாட விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
    • அடுத்த சீசனில் வெறு அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. மும்பை இந்தியன்ஸ் அணியின் அசைக்க முடியாத வீரராகவும், கேப்டனாகவும் திகழ்ந்தார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    இதனால் ரோகித் சர்மா விரும்பும் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டனாக்கியது.

    இது ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இந்த தொடருக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என யூகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில்தான் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த நிலையில், நேற்று வான்கடே மைதானத்தில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது.

    முதலில் விளையாடிய லக்னோ 214 ரன்கள் குவித்தது, பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 196 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    This could be Rohit Sharma's last walk back in a Mumbai jersey. There are strong indications that he won't play under Hardik Pandya.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 38 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழந்து ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது வான்கடே மைதானத்தில் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்த ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கைத்தட்டினர்.

    இதை பார்க்கும்போது அவருக்கு பிரியாவிடை கொடுப்பதுபோல் இருந்தது. இதனால் நேற்று விளையாடிய போட்டிதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடிய கடைசி போட்டி என பார்க்கப்படுகிறது.

    நேற்றைய போட்டி முடிவடைந்த பின் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீடா அம்பானியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக்கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டது சமூக வலைதளத்தில் வைரலாகியது.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா, மும்பை அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சியாளர்களில் ஒருவருமான அபிஷேக் நாயருடன் பேசிய வீடியோவை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த வாரம் வெளியிட்டது.

    அந்த வீடியோவில், ரோகித் சர்மாவும், அபிஷேக் நாயரும் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. சில ரசிகர்கள் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோகித் சர்மா பேசுவதை மட்டும் தனியாக பிரித்து எடுத்தனர். அதில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி பேசி இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த சர்ச்சை வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நீக்கிவிட்டது.

    இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார். ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது. எனவே ஆடியோவை ஆப் செய்யுங்கள் என தெரிவித்தார். இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ரோகித் சர்மா ஒரு சதமடித்தார் மும்பை தோற்றது.
    • இஷான் கிஷன் மொத்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியும் பவர் பிளே ஓவர்களை தாண்டவில்லை.

    மும்பை:

    17-வது ஐ.பி.எல். தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வரை கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த சீசனில் 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்விக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்ட்யா முக்கிய காரணம் என கருத்துக்கள்  வந்த வண்ணம் உள்ளது. 

    இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி களற்றிவிட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோர் ஒரு படத்தில் நடித்திருந்தால் அது வெற்றி பெறுமா என்பதை என்னிடம் சொல்லுங்கள்? கண்டிப்பாக கிடையாது. நீங்கள் அதற்கு நன்றாக செயல்பட வேண்டும். உங்களுக்கு நல்ல கதை வேண்டும். அதேபோல நட்சத்திர வீரர்கள் ஒன்றாக சேர்ந்தால் மட்டும் போதாது. நன்றாக செயல்பட வேண்டும்.

     ரோகித் சர்மா ஒரு சதமடித்தார். ஆனால் அந்த போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது. மற்ற போட்டிகளில் அவருடைய செயல்பாடுகள் எங்கே? இஷான் கிஷன் மொத்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியும் பவர் பிளே ஓவர்களை தாண்டவில்லை. தற்போதைய நிலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே முக்கியமானவர்களாக இருக்கின்றனர். எனவே அவர்களை தவிர்த்து அடுத்த வருடம் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் மற்ற அனைத்து வீரர்களையும் மும்பை கழற்றி விட வேண்டும்.

    இவ்வாறு சேவாக் கூறினார்.

    • லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது.
    • இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் பெருத்த தடுமாற்றத்தை சந்தித்ததுடன் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை முதல் அணியாக பறிகொடுத்தது.

    அந்த அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் மாற்றத்தால் வீரர்கள் இடையே ஏற்பட்ட புகைச்சல் அந்த அணியின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் திலக் வர்மா (3 அரைசதம் உள்பட 416 ரன்), ரோகித் சர்மா (ஒருசதம் உள்பட 349 ரன்), சூர்யகுமார் யாதவ் (1 சதம், 3 அரைசதம் உள்பட 345 ரன்), இஷான் கிஷன் (306 ரன்), டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பியுஷ் சாவ்லா, நுவன் துஷாரா ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் (-0.787) மிகவும் பின்தங்கி இருக்கும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விட்டது. லக்னோ தனது கடைசி 3 ஆட்டங்களில் கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது பெருத்த சரிவாக அமைந்தது.

    வெற்றியுடன் விடைபெறுவது யார்?

    லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (3 அரைசதத்துடன் 465 ரன்), நிகோலஸ் பூரன் (2 அரைசதத்துடன் 424 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (1 சதம், 2 அரைசதத்துடன் 360 ரன்), குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் நவீன் உல்-ஹக், யாஷ் தாக்குர், மொசின் கான், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடும் இரு அணிகளும் வெற்றியுடன் விடைபெறுவதுடன், புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்),நேஹல் வதேரா, டிம் டேவிட், பியுஷ் சாவ்லா, ஜெரால்டு கோட்ஜீ, ஜஸ்பிரித் பும்ரா, நுவன் துஷாரா.

    லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், குருணல் பாண்ட்யா, ஆயுஷ் பதோனி, அர்ஷத் கான் அல்லது மொசின் கான், யுத்விர் சிங், ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • நான் பேட்டிங் செய்ய வரும் முன்னர் அவரது பந்து வீச்சு வீடியோவை 100 முறை பார்த்து விட்டுதான் பேட்டிங் செய்ய வருவேன்.
    • அவர் ஒரு மிரட்டலான பந்து வீச்சாளராக இருந்தார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா துபாயில் உள்ள எப் எம் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

    அதில், நீங்கள் சந்தித்ததில் கடினமான பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரை கூறினார்.

    இது குறித்து ரோகித் கூறியதாவது:-

    நான் பேட்டிங் செய்ய வரும் முன்னர் அவர் பந்து வீச்சு வீடியோவை 100 முறை பார்த்து விட்டுதான் பேட்டிங் செய்ய வருவேன். அவர்தான் தென் ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்ன். அவர் கிரிக்கெட்டின் ஜாம்பவான்.

    மேலும் அவர் தனது வாழ்க்கையில் என்ன சாதித்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. நான் அவரை பலமுறை எதிர்கொண்டேன். அவரது பந்து வீச்சு வேகமாக இருக்கும். அதில் ஸ்விங்கும் செய்வார். அப்படி பந்து வீசுவது மிகவும் கடினமானது.

    அவர் ஒரு மிரட்டலான பந்து வீச்சாளராக இருந்தார். அவர் அனைத்து போட்டி, சீசனிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடுவார். அவருக்கு எதிராக விளையாடியதில் மகிழ்ச்சியாக இருந்தது.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • சிறந்த பவுலிங், பேட்டிங் என நல்ல அணியாக பாகிஸ்தான் உள்ளது.
    • ஒரு கிரிக்கெட் வீரராக சவால்களை சந்திக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானுடன் 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஐ.சி.சி. உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது. மற்றபடி இரு நாட்டு தொடருக்கு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி மத்திய அரசு அனுமதி மறுக்கிறது.

    நேரடி தொடர் என்று பார்த்தால் பாகிஸ்தான் அணி கடைசியாக 2012-13-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. அதே சமயம் இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடக்குமா என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா -பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எந்தளவுக்கு உள்ளது என தெரியவில்லை. ஆனால், ஒரு கிரிக்கெட் வீரராக சவால்களை சந்திக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

    சிறந்த பவுலிங், பேட்டிங் என நல்ல அணியாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் போட்டிகள் நடந்தால் ரசிகர்கள் அதை மிகவும் விரும்புவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.சி.சி. தொடர்களை தவிர்த்து இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு நாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று ரோகித் சர்மா சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோ வடிவில் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
    • உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா.

    டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாத துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. வீடியோ வடிவில் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி குறித்து ரசிகர்கள் கலவையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

     


    இந்த நிலையில், இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய் ஷா, இந்திய டி20 அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் ஸ்பான்சர் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.



    • டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.
    • தினேஷ் கார்த்திக் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. இப்போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.

    இதன் மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் ரோகித் சர்மாவும் மேக்ஸ்வெல்லும் 2-ம் இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் பியூஸ் சாவ்லா (15 முறை) உள்ளார்.

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.
    • இதில் 8 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.

    இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் இந்த போட்டியில் 6 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் குறைந்த ஐபிஎல் போட்டியில் 200 சிக்சர்களை விளாசி இந்திய வீரர் என்ற வராலாற்று சாதனையை சாம்சன் படைத்துள்ளார்.

    இந்த பட்டியலில் முதல் இடத்தில் டோனி இருந்தார். அவர் 165 போட்டிகளில் 200 சிக்சர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. அதனை சாம்சன் முறியடித்துள்ளார். இவர் 159 போட்டிகளிலே 200 சிக்சர்களை விளாசி அசத்தி உள்ளார்.

    இந்த வரிசையில் விராட் கோலி 180 போட்டிகளிலும் ரோகித் 185 போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னா 193 போட்டிகளிலும் 200 சிக்சர்களை விளாசி உள்ளனர்.

    • டி20 உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
    • இதன் மூலமாக 9-வது முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.

    ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த 9-வது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாள், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், கனடா, உகாண்டா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

    இந்த 20 அணிகளும் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த ஏப்ரல் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஏதேனும் மாற்றம் செய்ய நேர்ந்தால் மே 25 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5-ம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த தொடரில் ரோகித் சர்மா விளையாடுவதன் மூலமாக 9-வது முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வீரர் என்ற பெருமையை பெற உள்ளார். முதல் முறையாக கடந்த 2007-ம் ஆண்டு டோனி தலைமையிலான டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடினார். இதில், விராட் கோலி கூட விளையாடவில்லை. ரோகித் சர்மா தனது 20-வது வயதில் டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.

    அடுத்து 2009, 2010, 2012, 2014, 2016, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பண்ட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.

    மேலும், ரிசர்வ் பிளேயர்ஸாக ரிங்கு சிங், சுப்மன் கில், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

    ×