என் மலர்tooltip icon
    • 1967 வரை கங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, பிறகு வர முடிந்ததா?
    • எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது.

    திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அண்மைய காலமாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இதனிடையே சில நாட்களுக்கு முன்பு பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ""தி.மு.க. கூட்டணியில் நாங்கள் சுமூகமாகத்தான் இருக்கிறோம். எந்தவிதமான இழுபறியும் இல்லை. காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடும், ஆட்சியில் பங்கு போன்றவை குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் விருப்பம். நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்கும் அளவிற்கு தி.மு.க. தலைவருக்கு பெரிய மனது உள்ளது. அதேபோல் ஆட்சியில் பங்கு தரும் மனசும் அவருக்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் திட்டவட்டமாக பேசியுள்ளார்.

    புதுக்கோட்டையில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்துகொண்டு உயிரை வாங்குகிறார்கள். 100 இடங்களில் வென்று கலைஞர் முதல்வராக இருந்தாரே, ஆட்சியில் பங்கு கொடுத்தாரா? 150 இடங்களில் திமுக ஜெயிக்கும் போது எப்படி கொடுக்கும்?

    நீங்கள் வேண்டுமென்பதை கேளுங்கள்; செய்து தருகிறோம்; எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது 1967 வரை கங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, பிறகு வர முடிந்ததா? திமுகவை வெல்ல ஒருவர் பிறந்து வர வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
    • இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஐசிசி நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின், நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தடையானது ஐசிசி அல்லது பிசிசிஐ விதித்தது அல்ல என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை காவல்துறையினரால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்தது.

    இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடை விதிக்கப்பட்டதாக பெரும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

    இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பைத் தொடரின் மற்ற போட்டிகளுக்கும் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் தற்போது விசில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, "இன்றைக்கு சேப்பாக்கத்தில விசிலுக்கு தடை பண்ணுவாங்க. நாளைக்கு கண்டக்டருக்கு விசிலுக்கு பதிலா வேற கொடுப்பாங்க... அப்பறமா போலீஸ்கிட்ட இருந்து விசில் எல்லாம் பிடுங்கிவாங்க... ஆனா எங்க பசங்க விசில் இல்லாம கையாலே விசில் அடிப்பாங்க" என்று தெரிவித்தார். 

    • மேற்குக்கரையில் யூதக் குடிமக்கள் நிலம் வாங்குவதற்குப் இருந்த தடையை இஸ்ரேல் நீக்க உள்ளது.
    • மதத் தலங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் இஸ்ரேலிய அதிகாரிகள் பெறுவர்.

    பாலஸ்தீன நாட்டின் முக்கியப் பகுதியான மேற்கு கரை 1967 முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதி தங்களுக்கே சொந்தம் என இஸ்ரேல் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி வருகிறது.

    அங்கு பூர்வீமாக உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றும் நோக்கில் இஸ்ரேல் மக்களின் திட்டமிட்ட குடியேற்றம் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில் பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரையில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மேலும் விரிவுபடுத்த இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன்படி, மேற்குக்கரையில் யூதக் குடிமக்கள் நிலம் வாங்குவதற்குப் இருந்த தடையை இஸ்ரேல் நீக்க உள்ளது.

    இதுவரை யூதக் குடியேற்றவாசிகள் கட்டுமானங்களுக்கு உள்ளூர் நகராட்சி மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் ஆகிய இருவரிடமும் அனுமதி பெற வேண்டியிருந்தது. இனி இஸ்ரேலிய அதிகாரிகளிடம் மட்டும் அனுமதி பெற்றால் போதுமானது.

    பாலஸ்தீனக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் சில மதத் தலங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் இஸ்ரேலிய அதிகாரிகள் பெறுவர்.

    இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்த நடவடிக்கை இஸ்ரேலிய மண்ணில் எங்களது வேர்களை ஆழமாக்கும் மற்றும் பாலஸ்தீன நாடு என்ற கருத்தாக்கத்தைப் சிதைக்கும். மேற்குக்கரை நாட்டின் இதயம் போன்றது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

    இது மேற்குக்கரையை இஸ்ரேலுடன் முழுமையாக இணைத்துக்கொள்ளும் முயற்சி என பாலஸ்தீன நிர்வாகம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பல சர்வதேச அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெறிவித்துள்ளன.  

    • மகள் ஒரு நபருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருப்பதை அவரது தாய் கவனித்துள்ளார்.
    • குடும்பத்தினர் தடுத்தும் கேட்காத அந்தப் பெண், வருணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மைசூரு ரோடு பகுதியில் பிபிஏ பட்டதாரியான 23 வயது இளம்பெண் ஒருவர் தனது தாய் தந்தை மற்றும் இளைய சகோதரி உடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் 49 வயதுடைய அந்த தாய், தனது மூத்த மகள் மீது பெங்களூரு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் போலீசாரையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, வேலை தேடுவதற்காக கூறி, தனது தந்தையிடம் கேட்டு ஒரு ஸ்மார்ட்போனை அந்தப் பெண் வாங்கியுள்ளார்.

    ஒரு மாதத்திற்கு முன்பு, மகள் ஒரு நபருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருப்பதை அவரது தாய் கவனித்துள்ளார். மகளின் மொபைல் போனை வாங்கிச் சோதித்தபோது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    தனது தாய் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரது அந்தரங்க உறுப்புகளைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, வருண் என்ற நபருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளது தெரியவந்தது.

    மேலும், தனது தாயின் அக்கா (பெரியம்மா) குளித்துக்கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதே நபருக்கு அனுப்பியுள்ளார்.

    மொபைல் சாட்களை ஆராய்ந்தபோது வருண் என்ற அந்த நபரே இது போன்ற புகைப்படங்களை அனுப்புமாறு அப்பெண்ணைத் தூண்டியது தெரியவந்தது.

    குடும்பத்தினர் தடுத்தும் கேட்காத அந்தப் பெண், கடந்த வாரம் வருணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    இந்நிலையில் தனது மகள் குறித்தும், புகைப்படங்கள் குறித்தும் அச்சத்தில் இருந்த தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

    வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள வருணையும், அப்பெண்ணையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.
    • தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.

    மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் பால்காவாடா பகுதியில் பால்காட் என்ற கிராமம் அமைந்துள்ளது.

    கடந்த 1980 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் இருந்து ரூ.100 மதிப்புள்ள கோதுமை திருடு போனது.

    கோதுமையை திருடியதாக சலீம் மற்றும் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.

    தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.

    மறுபுறம் மாநில அளவிலான நீண்ட கால வழக்குகளளில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணிகளை மத்தியப் பிரதேச காவல்துறை தீவிரப்படுத்தியது.

    இந்நிலையில் சலீமின் முன்னாள் கூட்டாளி ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சலீமை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.  

    அர்ஜுன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடையே வெற்றி பெற்றுள்ளது. மேலும் இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

    'ஜெய் ஹிந்த்', 'தாயின் மணிக்கொடி', 'வேதம்', 'ஏழுமலை' உள்ளிட்ட பல படங்களை அர்ஜூன் இயக்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தனது மகள் ஐஸ்வர்யாவை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து 'சொல்லிவிடவா' என்ற படத்தை இயக்கி இருந்தார்.

    இதனை தொடர்ந்து, தற்போது 'சீதா பயணம்' என்ற புதிய படத்தை அர்ஜூன் இயக்கியுள்ளார். இதில் நிரஞ்சன் மற்றும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

    மேலும் கதை மற்றும் திரைக்கதை எழுதுவதோடு மட்டுமல்லாமல், அர்ஜுன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினத்தில் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான சீதா பயணம் படத்தின் டிரெய்லரும் கவனம் பெற்றது.

    காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள சீதா பயணம் படத்திற்கு தணிக்கை வாரியம் "U" சான்றிதழ் வழங்கியுள்ளது. இதை படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • இது போர்ச்சுக்கல் அதிபர் தேர்தல் வரலாற்றில் 1976-க்குப் பிறகு ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகளாகக் கருதப்படுகிறது.
    • இவர் தற்போதைய அதிபர் மார்செலோ ரிபெலோ டி சூசா-வின் பின்னோடியாக பொறுப்பேற்பார்.

    போர்ச்சுக்கல் நாட்டில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 66.8% வாக்குகள் பெற்று ஆளும் மிதவாத இடதுசாரி சோசலிச கட்சியை சேர்ந்த அந்தோனியோ ஜோஸ் செகுரோ வெற்றி பெற்றுள்ளார்.

    வலதுசாரியான Chega கட்சியின் வேட்பாளர் ஆன்ட்ரே வெஞ்சுரா 33.2% வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் செகுரோ சுமார் 3.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

    இது போர்ச்சுக்கல் அதிபர் தேர்தல் வரலாற்றில் 1976-க்குப் பிறகு ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகளாகக் கருதப்படுகிறது.

    வரும் மார்ச் 9 அன்று அந்தோனியோ ஜோஸ் செகுரோ புதிய அதிபராகப் பதவியேற்பார். இவர் தற்போதைய அதிபர் மார்செலோ ரிபெலோ டி சூசா-வின் பின்னோடியாக பொறுப்பேற்பார்.

    வலதுசாரிகள் பெரிய வித்தியாசத்தில் தோற்றபோதும் முந்தய தேர்தல்களை விட அவர்களின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இது அந்நாட்டில் வலதுசாரிகள் வலுப்பெற்று வருவதை குறிக்கிறது. 

    • இஸ்லாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது பொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
    • "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.

    அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அசாம் பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த இஸ்லாமிய வெறுப்பு வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.

    "Point Blank Shot" என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், முதல்வர் பிஸ்வா கையில் ரைபிள் துப்பாக்கியை எடுத்து குறிபார்க்கிறார், அடுத்த காட்சியில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குல்லாய், தாடி உள்ளிட்ட இஸ்லாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது பொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

    வீடியோவின் பின்னணியில் "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.

    முதல்வர் பிஸ்வா அசாம் இஸ்லாமிய சமூகம் குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துக்களை கூறியும், நடவடிக்கை எடுத்தும் வரும் சூழலில் இந்த வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இது குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வ சர்மாவின் விடியோ மியா சமூகத்தின் மீதான நேரடி வன்முறையைத் தூண்டும் அதிர்ச்சியளிக்கக்கூடிய செயல்.

    தேர்தல் லாபத்துக்காக வெறுப்புணர்வை இயல்பானதாக மாற்ற துடிக்கும் முயற்சிகள் நமது அரசமைப்புக்கான தீங்கு விளைவிக்கும். இந்த விவகாரத்தில் பாஜக தேசிய தலைமையின் மௌனம் பிளவுவாத அரசியல் மீதான அவர்களின் பற்றைத் தெளிவாக்குகிறது.

    இத்தகைய வகுப்புவாத வெறுப்புணர்வு செயல்களை எதிர்க்க மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும். இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

    நாயகியாக தனுஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பாண்டியராஜன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் அஜய் திஷான், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பூக்கி. கணேஷ் சந்திரா, சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஆவார்.

    இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இதில் நாயகியாக தனுஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பாண்டியராஜன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    2k கிட்ஸ் காதலை கூறும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் "பூக்கி" திரைப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், படத்தில் விஜய் ஆண்டனி எழுதி பாடிய 'ஜில்லே ஜூஸ்' வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது.  

    • இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைகளை ஏற்று முடிவெடுக்கப்பட்டது.
    • கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இது தொடர்பாக ஐசிசி-க்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருந்தது.

    மறுபுறம், புறக்கணித்தால் கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்தது.

    எனவே பாகிஸ்தான் தனது முடிவில் இருந்து பின் வாங்குமா? என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கிடையே நேற்று ஐசிசி குழு பாகிஸ்தான் கிரிகெட் போர்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    தொடர்ந்து பாகிஸ்தான் கிரிகெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து தனது முடிவை மாற்றிய பாகிஸ்தான் அரசு, டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியில் விளையாட தங்கள் கிரிக்கெட் அணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைகளை ஏற்று, கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி இந்தப் போட்டியில் பங்கேற்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் வரும் 15 ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி விளையாடுவது உறுதியாகி உள்ளது. 

    ×