என் மலர்
செய்திகள்
- காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்த அனுமதி
- தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நாளை மறுநாள் (டிச.9) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். முதலில் புதுச்சேரியில் தவெக ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், புதுச்சேரி அரசு அதற்கு அனுமதி மறுத்தது. ரோடு ஷோக்கு பதில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் எனக் கூறியது. இதனையடுத்து பொதுக்கூட்டம் நடத்த தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டநிலையில், பொதுக்கூட்ட பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர் தவெகவினர்.
இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது புதுச்சேரி அரசு. அதில் முக்கியமாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளளது.
முக்கியக் கட்டுப்பாடுகள் பின்வருமாறு:
- புதுச்சேரியை சேர்ந்த 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி
- அனுமதி பெறுபவர்களுக்கு 'கியூ-ஆர்' கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பாஸ் வழங்கக் கூடாது.
- முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குப் பாஸ் வழங்கக் கூடாது.
- பொதுமக்களுக்குக் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்.
- பாதுகாப்புக்காக மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கையாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
- தொண்டர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரிந்து நிற்கத் தனித்தனித் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
- நாற்காலிகள் போட அனுமதி இல்லை. மேடையும் அமைக்கக் கூடாது.
என பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தவெகவினர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
- வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்
- விரைவில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகும்
வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்தான் நடிகர் ரஜினி. ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகி இந்தாண்டோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன. இதற்கு பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த திரைசாதனையை கொண்டாடும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி, அவரது 'படையப்பா' படம் மீண்டும் திரையரங்குகளில் புதிய பொலிவுடன் திரையிடப்படுகிறது.
இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினி பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோவும் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்துள்ளார். விரைவில் வீடியோ வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
- கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் எனக்கூறி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 3 வழக்கு.
- சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி இருந்தார்கள்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதானசவுதா முன்பு பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது.
இதில், கலந்துகொள்ள ஆர்.சி.பி. ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி இருந்தார்கள். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் எனக்கூறி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவாகின.
இந்த விவகாரத்தில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார். ஆனால் அரசின் அலட்சியமே 11 பேர் சாவுக்கு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்," ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம். சின்னசாமி மைதானத்தின் பெயரைப் பாதுகாப்போம், மாற்றாக ஒரு புதிய கிரிக்கெட் மைதானத்தையும் கட்டுவோம்" என்றார்.
- அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார்
- நாடக வடிவில் நகர்கிறது படம்.
கட்டுமான நிறுவனம் ஒன்றில் முதன்மை பொறியாளராக பணியாற்றுகிறார் படத்தின் நாயகி சாக்ஷி அகர்வால் (சாரா). சாராவுக்கும், அங்கு பணியாற்றும் மற்றொரு பொறியாளர் விஜய் விஷ்வாவுக்கும் காதல் மலர்கிறது. காதலுக்கு சாராவின் பெற்றோரும் ஒப்புதல் அளித்தனர். இச்சூழலில் கட்டிடங்களுக்கு கலப்பட மணல் அனுப்பி ஏமாற்றும் வெட்டுக்கிளிக்கும் (மிரட்டல் செல்வா) சாராவுக்கும் பகை ஏற்படுகிறது.
இவர்களுக்கு மத்தியில் கட்டுமான நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருப்பவர் ரோபோ சங்கர். காசுக்காக எதையும் செய்பவர். அவருடைய நண்பன் யோகிபாபு. இவர்களின் அனைவரின் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி, மதிக்கப்படாமல் அந்த இடத்தை சுற்றி கொண்டிருக்கும் ஒரு நபர் செல்லக்குட்டி. இவர்கள் அனைவரும் வெட்டுக்கிளிக்கு உதவியாக சாரவைக் கடத்த முயல்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்னால் செல்லக்குட்டி சாராவையும், அவளது காதலரையும் கடத்துகிறார். செல்லக்குட்டி ஏன் சாராவை கடத்தவேண்டும்? கல்யாணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.
நடிப்பு
தனக்கான ரோலில் கட்சிதமாக நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால். விஜய் விஷ்வா, சில காட்சிகளோடு காணாமல் போகிறார். படத்தின் இயக்குநர் செல்லக்குட்டி, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரையே மிஞ்சுகிறார் என பார்வையாளர்கள் விமர்சனம் செய்வதற்கு ஏற்றார்போல ஓவர்டோஸ் நடிப்பு. அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். யோகி பாபு, ரோபோ சங்கர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோரின் காமெடி பரவாயில்லை. ஆனால் ஆபாச வசனங்களை தவிர்த்திருக்கலாம். இறுதியாக நாடக வடிவில் நகர்கிறது படம்.
இயக்கம்
இயக்குநர் செல்லகுட்டி, தான் சொல்ல நினைத்த கதையில் எப்படியோ பாதியை சொல்லிவிட்டார். பவர் ஸ்டார், நடிப்பு அரக்கன் என அனைத்து கோமாளிகளையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் செல்லகுட்டி, இயக்குநராக வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரு நடிகராக நிச்சயம் டிரெண்டாக வாய்ப்புள்ளது.
இசை
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மன் குமார் கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியுள்ளார். படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் இயக்குநரின் கதையை சிதைக்காத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மாலை 'ஹாப்பி ராஜ்' படத்தின் First Look போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மான் ஹாப்பி ராஜ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- அரசுப்பள்ளிக்கு அருகே மதுபான விடுதியுடன் கூடிய 'மனமகிழ் மன்றம்'
- தவெக தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு, சுயஒழுக்கம் என்பது மிக அவசியம்
தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, தவெக தொண்டர் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அரசுப்பள்ளிக்கு அருகே மதுபான விடுதியுடன் கூடிய 'மனமகிழ் மன்றம்' அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி தருமபுரி மற்றும் பாலக்கோட்டில் உள்ள தவெகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியை சுற்றி போலீசார் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனையும் மீறி தவெகவினர் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட முயன்றுள்ளனர்.
அப்போது பலரும் கேட் ஏறிகுதித்து மனமகிழ் மன்றம் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு தவெகவினரை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த காவலர் ஒருவரின் கையை தவெக தொண்டர் ஒருவர் கடித்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே தவெக தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு, சுயஒழுக்கம் என்பது மிக அவசியம் என பல அரசியல் கட்சி தலைவர்களும் கூறிவரும் நிலையில், இச்சம்பவம் மீண்டும் அவர்களின் ஒழுக்க கட்டுப்பாடுகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
- பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம்.
- உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம்.
தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும், வளர்ச்சியின் ஒளி பெருகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்.
பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம்.
உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம்.
இவைதான் நமது திராவிட மாடல் பேசும் மதுரைக்கான வளர்ச்சி அரசியல்..
எய்ம்ஸ் வராது; மெட்ரோ ரெயில் தராது; கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும் பா.ஜ.க. பேசும் …….. அரசியல்.
தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும்! வளர்ச்சியின் ஒளி பெருகும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்து செய்தது.
- பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டது.
இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 4 நாட்களாக விமான சேவைகளை நிறைவேற்றுவதில் சொதப்பி வருகிறது. மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வருகிறது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்துசெய்தது. சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.
இதைதொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமான கட்டணம் தானாகவே திருப்பிச் செலுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது.
டிசம்பர் 5 முதல் 15ம் தேதி வரை பயணிகள் டிக்கெட் ரத்து செய்தல் அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டது.
இந்நிலையில், இண்டிகோ விமான சேவைகள் வரும் டிச.10ம் தேதிக்குள் வழக்கம்போல இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சேவைகள் முழுமையாக சரியாக 2026 பிப்.10 வரை ஆகும் என முன்னர் தெரிவித்திருந்த நிலையில், விரைவில் சரியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் சுமார் 650 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்
- தொடர் பேருந்து விபத்துகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர் பகுதியில் உள்ள வளைவில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது. திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும், மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்த தனியார் பேருந்தும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் தென்காசியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பயணிகள் உடல் நசுங்கி இறந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து கடந்த 31-ம் தேதி காரைக்குடி அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இப்பேருந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
தொடர் பேருந்து விபத்துகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
- மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.
- அடுத்த மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும்.
வாடா ரமேஷ் எப்படிடா இருக்கே?
நான் நல்லா இருக்கேன் சுரேஷ். நீ எப்படி இருக்கே?
நான் இந்த வாரம் வெளிநாட்டுக்கு போகப் போறேண்டா. நீ எங்கேயும் போகலையாடா ரமேஷ்.
இல்லைடா சுரேஷ். நான் இந்தியாவை விட்டு தாண்டலைடா.
ஆமா, நீ தான் ஒரு செய்தி சேனல் ஆச்சே. எங்க இந்த ஆண்டு நடந்த முக்கியான செய்திகளை சுருக்கமா சொல்லு கேட்போம்.
எனக்கு தெரிந்ததைச் சொல்றேன். கேட்டுக்கோ.
முதல்ல ஜனவரியில் நடந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி பத்தி சொல்றேன்.
மகா கும்பமேளா 144 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட விழாதான் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா.

கும்பமேளாவில் சில வகைகள் உள்ளன. ஆர்த் கும்பமேளா 6 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். பூர்ண கும்பமேளா 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். மகா கும்பமேளா ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இது 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவதுதான் மகா கும்பமேளா.
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி மாதம் 13-ம் தேதி தொடங்கியது.
45 நாட்கள் கோலாகலமாக நடந்த மகா கும்பமேளா பிர்ப்ரவரி 26-ம் தேதியுடன் சிறப்பாக நிறைவடைந்தது.
உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
பிரயாக்ராஜ் மாவட்டம் சார்பில் ரூ.2,100 கோடியும், உத்தர பிரதேச மாநில அரசு ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்து பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜனவரி 29-ம் தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.
கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடியைத் தாண்டியது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.

கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அப்போதைய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.
இனி அடுத்த மகா கும்பமேளா 2169-ம் ஆண்டுதான் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது என கூறினான் சுரேஷ்.
பரவால்லடா, இவ்வளவு தகவல் சொல்லுவேன்னு நான் நினைக்கலடா. உண்மையிலேயே நீ ஒரு மினி செய்தி சேனல் தாண்டா.
என் மூஞ்சிக்கு நேரா என்னைப் புகழாதடா, எனக்கு பிடிக்காது ஓகேவா என பேச்சை நிறைவு செய்தான்.
- அவர் சிறந்த மனிதர். ஆனால், அவர் ஆட்சியை அவ்வாறு கூற முடியவில்லை.
- முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் என யாராக இருந்தாலும் தீர்ப்பை அவமதித்தவர்கள், தவறு செய்தவர்களாகவே கருதப்படுவர்.
மதுரை தொண்டி சாலையில் வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில், ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து உத்தங்குடியில் நடைபெற்ற அரசு நநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஒரு லட்சத்து 211 பயனாளிகளுக்கு 174 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.
மேலும், 3 ஆயிரத்து 65 கோடி ரூபாயில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விழாவில் பேசிய அவர், அனைத்து மதத்தினரும் அங்காளி, பங்காளியாக பழகும் மண்ணில் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபமே ஒளிரும் என தெரிவித்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சரை நினைத்தால் வருத்தமாக உள்ளது. நான் அவரை பலகோணங்களில் பார்த்துள்ளேன். என்னை பொறுத்தவரை அவர் சிறந்த மனிதர். ஆனால், அவர் ஆட்சியை அவ்வாறு கூற முடியவில்லை. அவர்கள் வேண்டுமானால் அங்காளி, பங்காளியாக இருக்கலாம்.
நாங்கள் இஸ்லாமியர்களோடு மாமன், மச்சானாகத்தான் பழகுகிறோம். இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பையே நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். தீர்ப்புக்கு பின் 144 தடை உத்தரவு என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் என யாராக இருந்தாலும் தீர்ப்பை அவமதித்தவர்கள், தவறு செய்தவர்களாகவே கருதப்படுவர்.
தீபம் ஏற்றுவதால் எந்த இஸ்லாமிய பெருமக்களுக்கும் வருத்தம் இல்லை. இதற்கு எதிராக வழக்குகளும் இல்லை. தீபாவளிக்கு பிறகு பெரும்பான்மையான மக்களால் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் மக்களை சந்தோஷப்படுத்துவதை விட்டுவிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலை கணக்கில்கொண்டு அங்காளி, பங்காளி என்ற வார்த்தையை வாக்குவங்கிக்காக முதலமைச்சர் பயன்படுத்துகிறார் என்பதை பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கிறேன்." என தெரிவித்தார்.
- ஒரு ஆண்டில் அதிக கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்ற ஆண்டாக 2025-ம் ஆண்டு பார்க்கப்படுகிறது.
- 2022-ல் 9 வீரர்களும், 2023-ல் 18 வீரர்களும் ஓய்வு பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் 2025-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஒட்டு மொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற வீரர்கள் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
அதன்படி ஒரு ஆண்டில் அதிக கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்ற ஆண்டாக 2025-ம் ஆண்டு பார்க்கப்படுகிறது. 2015-ல் 11 வீரர்களும், 2021-ல் சுமார் 10-15 வீரர்களும் 2022-ல் 9 வீரர்களும், 2023 இல் 18 வீரர்களும் ஓய்வு பெற்றுள்ளனர்.
2024 ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து குறைந்தபட்சம் ஒரு வடிவத்தில் (டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20) ஓய்வு பெற்ற வீரர்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளது. இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையாக இருந்த நிலையில் 2025-ல் 28 வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களின் நாடு மற்றும் ஓய்வு பெற்ற வடிவங்கள் மற்றும் அவர்கள் விளையாடிய போட்டிகள் உட்பட தகவல்கள்.
ரிஷி தவான் (இந்தியா) - வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஓய்வு (ஓடிஐ & டி20ஐ) - ஜனவரி.

டெஸ்ட்: விளையாடியதில்லை.
ஒருநாள்: 3 போட்டிகள், 1 ரன், சராசரி 1.00, 4 விக்கெட்டுகள், சராசரி 41.25
டி20: 1 போட்டி, 1 ரன், சராசரி 1.00, 1 விக்கெட், சராசரி 14.00
மார்ட்டின் குப்டில் (நியூசிலாந்து) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜனவரி 8.

டெஸ்ட்: 47 போட்டிகள், 2,586 ரன்கள், சராசரி 29.00
ஒருநாள்: 198 போட்டிகள், 7,346 ரன்கள், சராசரி 42.00
டி20: 122 போட்டிகள், 3,531 ரன்கள், சராசரி 31.00
வருண் ஆரோன் (இந்தியா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜனவரி 10.

டெஸ்ட்: 9 போட்டிகள், 18 விக்கெட்டுகள், சராசரி 52.61
ஒருநாள்: 9 போட்டிகள், 11 விக்கெட்டுகள், சராசரி 38.09
டி20: விளையாடியதில்லை.
தமீம் இக்பால் (வங்கதேசம்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு- ஜனவரி 10.

டெஸ்ட்: 70 போட்டிகள், 5,134 ரன்கள், சராசரி 39.00
ஒருநாள்: 243 போட்டிகள், 8,357 ரன்கள், சராசரி 37.00
டி20: 78 போட்டிகள், 1,758 ரன்கள், சராசரி 24.00
ஷபூர் சத்ரான் (ஆப்கானிஸ்தான்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜனவரி 31.

டெஸ்ட்: விளையாடியதில்லை.
ஒருநாள்: 44 போட்டிகள், 43 விக்கெட்டுகள், சராசரி 36.93
டி20: 30 போட்டிகள், 34 விக்கெட்டுகள், சராசரி 23.21
ரித்திமான் சஹா (இந்தியா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - பிப்ரவரி 1.

டெஸ்ட்: 40 போட்டிகள், 1,353 ரன்கள், சராசரி 29.00
ஒருநாள்: 9 போட்டிகள், 41 ரன்கள், சராசரி 14.00
டி20: விளையாடியதில்லை
மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ஆஸ்திரேலியா) - ஓடிஐ - பிப்ரவரி 6.

டெஸ்ட்: விளையாடியதில்லை
ஒருநாள்: 70 போட்டிகள், 1,485 ரன்கள், சராசரி 27.00, 49 விக்கெட்டுகள்
டி20: 59 போட்டிகள், 940 ரன்கள், சராசரி 28.00, 30 விக்கெட்டுகள்
டிமுத் கருணாரத்னே (இலங்கை) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - பிப்ரவரி.

டெஸ்ட்: 100 போட்டிகள், 7,222 ரன்கள், சராசரி 39.00
ஒருநாள்: 50 போட்டிகள், 1,316 ரன்கள், சராசரி 31.00
டி20: 1 போட்டி, 0 ரன்கள்
ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - ஓடிஐ மட்டும் ஓய்வு - 2025 (சாம்பியன்ஸ் டிராபி பிறகு).

டெஸ்ட்: 120 போட்டிகள், 10,496 ரன்கள், சராசரி 56.00
ஒருநாள்: 164 போட்டிகள், 5,681 ரன்கள், சராசரி 43.00
டி20: 67 போட்டிகள், 1,094 ரன்கள், சராசரி 25.00
முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்) - ஓடிஐ மட்டும் ஓய்வு - 2025 (சாம்பியன்ஸ் டிராபி பிறகு).

டெஸ்ட்: 100 போட்டிகள், 6,510 ரன்கள், சராசரி 39.00
ஒருநாள்: 274 போட்டிகள், 7,795 ரன்கள், சராசரி 36.00
டி20: 102 போட்டிகள், 1,500 ரன்கள், சராசரி 20.00
மஹ்முதுல்லா (வங்கதேசம்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - 2025 (சாம்பியன்ஸ் டிராபி பிறகு).

டெஸ்ட்: 50 போட்டிகள், 2,914 ரன்கள், சராசரி 33.00
ஒருநாள்: 239 போட்டிகள், 5,689 ரன்கள், சராசரி 36.00
டி20: 143 போட்டிகள், 2,555 ரன்கள், சராசரி 23.00
ரோகித் சர்மா (இந்தியா) - டெஸ்ட் மட்டும் ஓய்வு- மே 7.

டெஸ்ட்: 67 போட்டிகள், 4,301 ரன்கள், சராசரி 41.00
ஒருநாள்: 262 போட்டிகள், 10,709 ரன்கள், சராசரி 49.00
டி20: 159 போட்டிகள், 4,231 ரன்கள், சராசரி 31.00
விராட் கோலி (இந்தியா) - டெஸ்ட் மட்டும் ஓய்வு- மே 12.

டெஸ்ட்: 123 போட்டிகள், 9,230 ரன்கள், சராசரி 47.00
ஒருநாள்: 292 போட்டிகள், 13,906 ரன்கள், சராசரி 58.00
டி20: 125 போட்டிகள், 4,188 ரன்கள், சராசரி 49.00
க்ளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) - ஓடிஐ மட்டும் ஓய்வு - ஜூன் 2.

டெஸ்ட்: 7 போட்டிகள், 339 ரன்கள், சராசரி 26.00
ஒருநாள்: 149 போட்டிகள், 3,990 ரன்கள், சராசரி 34.00, 72 விக்கெட்டுகள்
டி20: 113 போட்டிகள், 2,728 ரன்கள், சராசரி 30.00, 47 விக்கெட்டுகள்
ஹென்ரிச் க்ளாசென் (தென் ஆப்பிரிக்கா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜூன் 2.

டெஸ்ட்: 4 போட்டிகள், 104 ரன்கள், சராசரி 13.00
ஒருநாள்: 60 போட்டிகள், 2,141 ரன்கள், சராசரி 44.00
டி20: 58 போட்டிகள், 1,250 ரன்கள், சராசரி 28.00
பியூஷ் சாவ்லா (இந்தியா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜூன் 6.

டெஸ்ட்: 3 போட்டிகள், 7 விக்கெட்டுகள்
ஒருநாள்: 25 போட்டிகள், 32 விக்கெட்டுகள், சராசரி 34.00
டி20: 7 போட்டிகள், 4 விக்கெட்டுகள்
நிக்கோலஸ் பூரன் (மேற்கிந்தியத் தீவுகள்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜூன் 9.

டெஸ்ட்: விளையாடியதில்லை
ஒருநாள்: 61 போட்டிகள், 1,983 ரன்கள், சராசரி 40.00
டி20: 106 போட்டிகள், 2,275 ரன்கள், சராசரி 26.00
ஏஞ்சலோ மேத்யூஸ் (இலங்கை) - டெஸ்ட் மட்டும் ஓய்வு - ஜூன்.

டெஸ்ட்: 119 போட்டிகள், 8,214 ரன்கள், சராசரி 44.00, 33 விக்கெட்டுகள்
ஒருநாள்: 226 போட்டிகள், 5,916 ரன்கள், சராசரி 40.00, 120 விக்கெட்டுகள்
டி20: 90 போட்டிகள், 1,416 ரன்கள், சராசரி 28.00, 38 விக்கெட்டுகள்
பீட்டர் மூர் (ஜிம்பாப்வே/அயர்லாந்து) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜூலை.

டெஸ்ட்: 15 போட்டிகள், 734 ரன்கள், சராசரி 25.00
ஒருநாள்: 49 போட்டிகள், 827 ரன்கள், சராசரி 21.00
டி20: 32 போட்டிகள், 795 ரன்கள், சராசரி 22.00
ஆண்ட்ரே ரசல் (மேற்கிந்தியத் தீவுகள்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஜூலை 22.

டெஸ்ட்: 1 போட்டி, 2 ரன்கள், 1 விக்கெட்
ஒருநாள்: 56 போட்டிகள், 1,034 ரன்கள், சராசரி 27.00, 70 விக்கெட்டுகள்
டி20: 81 போட்டிகள், 955 ரன்கள், சராசரி 20.00, 53 விக்கெட்டுகள்
புஜாரா (இந்தியா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - ஆகஸ்ட் 24.

டெஸ்ட்: 103 போட்டிகள், 7,195 ரன்கள், சராசரி 44.00
ஒருநாள்: 5 போட்டிகள், 51 ரன்கள், சராசரி 10.00
டி20: விளையாடியதில்லை
மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - டி20 மட்டும் ஓய்வு - செப்டம்பர்.

டெஸ்ட்: 101 போட்டிகள், 412 விக்கெட்டுகள், சராசரி 26.64
ஒருநாள்: 121 போட்டிகள், 236 விக்கெட்டுகள், சராசரி 22.96
டி20: 65 போட்டிகள், 79 விக்கெட்டுகள், சராசரி 24.00
ஆசிப் அலி (பாகிஸ்தான்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - செப்டம்பர்.
டெஸ்ட்: விளையாடியதில்லை
ஒருநாள்: 21 போட்டிகள், 382 ரன்கள், சராசரி 25.00
டி20: 58 போட்டிகள், 577 ரன்கள், சராசரி 15.00
உஸ்மான் ஷின்வாரி (பாகிஸ்தான்) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - செப்டம்பர் 9.
டெஸ்ட்: விளையாடியதில்லை
ஒருநாள்: 17 போட்டிகள், 32 விக்கெட்டுகள், சராசரி 24.00
டி20: 16 போட்டிகள், 13 விக்கெட்டுகள், சராசரி 32.00
கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - செப்டம்பர் 29.

டெஸ்ட்: 62 போட்டிகள், 2,034 ரன்கள், சராசரி 25.00, 195 விக்கெட்டுகள், சராசரி 29.00
ஒருநாள்: 122 போட்டிகள், 1,524 ரன்கள், சராசரி 24.00, 173 விக்கெட்டுகள், சராசரி 30.00
டி20: 33 போட்டிகள், 153 ரன்கள், சராசரி 17.00, 31 விக்கெட்டுகள், சராசரி 26.71
அமித் மிஸ்ரா (இந்தியா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - செப்டம்பர் 4.

டெஸ்ட்: 22 போட்டிகள், 76 விக்கெட்டுகள், சராசரி 35.72
ஒருநாள்: 36 போட்டிகள், 64 விக்கெட்டுகள், சராசரி 23.60
டி20: 10 போட்டிகள், 16 விக்கெட்டுகள், சராசரி 14.75
கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - டி20 மட்டும் ஓய்வு - நவம்பர் 2.

டெஸ்ட்: 106 போட்டிகள், 9,279 ரன்கள், சராசரி 55.00
ஒருநாள்: 175 போட்டிகள், 7,256 ரன்கள், சராசரி 49.00
டி20: 93 போட்டிகள், 2,575 ரன்கள், சராசரி 33.00
28. மோகித் ஷர்மா (இந்தியா) - அனைத்து வடிவங்களிலும் ஓய்வு - டிசம்பர் 3.
டெஸ்ட்: விளையாடியதில்லை
ஒருநாள்: 26 போட்டிகள், 31 விக்கெட்டுகள், சராசரி 31.77
டி20: 8 போட்டிகள், 6 விக்கெட்டுகள், சராசரி 24.00






