என் மலர்
செய்திகள்
- தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன்.
- பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது நல்லது தான்.
ஆலந்தூர்:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு கோவையில் இருந்து, சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்ஜெட்டில் முத்தான 30 அறிவிப்பு என்று சொல்லி இருக்கிறார்கள். பட்ஜெட்டை முழுமையாக படித்து விட்டு, பதில் சொல்கிறேன். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் எல்லா அறிவிப்புகளையும், அமல்படுத்த முடியுமா? தேர்தல் முடிந்து புதிய அரசு அமைத்த பின் அமல்படுத்த முடியுமா? என்ற கேள்விகள் உள்ளன. தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது நடக்கின்ற, ஒரு பட்ஜெட்டை செயல்படுத்தும், அரசாக இருக்க வேண்டும்.
தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது. அது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும்.
வருகின்ற ஆட்சி, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் தான் எஜமானார்கள். தேர்தல் முடிவுகள் வரட்டும், பார்க்கலாம். உண்மையிலேயே அதுபோன்ற ஒரு சூழல் வருகிறதா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஈசா மையத்தில் இருந்து அழைக்கப்பட்டவர்கள் முதல் வரிசையில் இருந்தோம். மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், எல்.முருகன், முன்னாள் அமைச்சர் வேலுமணி, புதுச்சேரி மந்திரிகள் எல்லோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துபேசினேன்.
பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது நல்லது தான். அதனால் தமிழ்நாட்டிற்கு நல்லது நடந்தால் வரவேற்போம். பிரதமர் வருவது தவறு இல்லை. அதே நேரத்தில் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றார்.
- சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது.
- சாய் அபயங்கர் இசையமைத்த டியூட், பல்டி ஆல்பங்கள் ரசிகர்களை கவர்ந்தன.
சாய் அபயங்கர், பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு - ஹரிணி தம்பதியின் மகன் ஆவார். சுயாதீன இசைக்கலைஞரான சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'கட்சி சேர' மற்றும் 'ஆச கூட' பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது.
இதையடுத்து அவர் இசையமைத்த டியூட், பல்டி ஆல்பங்கள் ரசிகர்களை கவர்ந்தன. இதனால் பல பெரிய நடிகர்களின் படங்களுக்கு தற்போது சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் வைத்து சாய் அபயங்கரிடம் தன மகளுக்கு நடிகை தேவயானி வாய்ப்பு கேட்டுள்ளார்.
மேடையில் சாய் அபயங்கரிடம் பேசிய தேவயானி, "முதலில் சாய் அபயங்கரின் அம்மா - அப்பாவின் ரசிகை நான். இப்போது சாய் அபயங்கரின் ரசிகை. என் மகளும் அவரின் ரசிகை தான். என் மகள் இனியா நன்றாக பாடுவாள். அவளுக்கு உங்களுடன் பாட வேண்டும் என்பது தான் கனவு. எதாவது வாய்ப்பு இருந்தால் என் மகளுக்கு கொடுங்கள்" என்று தெரிவித்தார்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விலை சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் குறைந்து காணப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 440-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 320-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வார தொடக்கம் முதல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560
16-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,520
15-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480
14-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480
13-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-02-2026- ஒரு கிராம் ரூ.265
16-02-2026- ஒரு கிராம் ரூ.265
15-02-2026- ஒரு கிராம் ரூ.280
14-02-2026- ஒரு கிராம் ரூ.280
13-02-2026- ஒரு கிராம் ரூ.280
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- கடும் குளிரிலும், பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும் தடையின்றி இயங்கும் திறன் இதற்கு உண்டு.
- H125 சிவில் ஹெலிகாப்டருடன் சேர்த்து, இதன் ராணுவ வடிவமான H125M ரகமும் இங்குத் தயாரிக்கப்படும்.
டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
முதற்கட்டமாக மும்பை வந்திறங்கிய மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். மும்பையில் உள்ள லோக் பவனில் மோடியும், மேக்ரானும் இருநாட்டு உறவு குறித்து விவாதித்தனர்.
முன்னதாக, கர்நாடகாவின் வேமகலில், டாடா நிறுவனம், ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் H125 ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான அசெம்பிளி லைனை மோடியும், மேக்ரானும் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய மோடி, இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பு வாய்ந்தவை. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி வரை பறக்கும் திறன் கொண்ட உலகின் ஒரே ஹெலிகாப்டரை இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து இந்தியாவில் தயாரிக்கவுள்ளன என்பதை நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்" என்றார்.

H125 ஹெலிகாப்டர்:
நேற்று தொடங்கப்பட்ட ஆலையின் அசெம்பிளி லைனில் தயாரிக்கப்பட்ட முதல் ஹெலிகாப்டர் 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் ஆண்டுக்கு 10 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும், இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 500 ஹெலிகாப்டர்களைத் தயாரிப்பதே இலக்காகும்.
H125 ஹெலிகாப்டர், ஒரு விமானி மற்றும் 6 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
இது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 662 கி.மீ பயணிக்க முடியும்.
இமயமலையின் கடும் குளிரிலும், ராஜஸ்தான் பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும் தடையின்றி இயங்கும் திறன் இதற்கு உண்டு.
மீட்புப் பணிகள், மருத்துவ அவசரநிலைகள், தீயணைப்பு மற்றும் சுற்றுலா எனப் பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்படும்.
H125 சிவில் ஹெலிகாப்டருடன் சேர்த்து, இதன் ராணுவ வடிவமான H125M ரகமும் இங்குத் தயாரிக்கப்படும்.
H125M ரக ஹெலிகாட்பரில் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகளைப் பொருத்த முடியும்.
எதிரிகளின் ரேடார் கண்களில் சிக்காமல் இருக்க, தரையோடு தரையாக மிகத் தாழ்வாகப் பறக்கும் திறன் கொண்டது.
இந்திய எல்லைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது பிரான்ஸ், பிரேசில், கத்தார், இந்தோனேசியா உட்பட சுமார் 35க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவத்தில் 400க்கும் மேற்பட்ட H125 ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.
- அவரது வலது கண்ணில் 85 சதவீதம் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- இம்ரான் கானுக்கு அவர் விரும்பும் தனிப்பட்ட மருத்துவர்கள் மூலம் உயர்தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது வலது கண்ணில் 85 சதவீதம் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இம்ரான்கானின் உடல்நிலை பாதிப்பால் கவலையடைந்துள்ள இந்தியாவின் கபில்தேவ், சுனில் கவாஸ்கர், கங்குலி, ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல், ஆலன் பார்டர், இங்கிலாந்தின் நாசர் உசேன் உள்பட 14 முன்னாள் கேப்டன்கள் ஒருங்கிணைந்து பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், இம்ரான் கானுக்கு அவர் விரும்பும் தனிப்பட்ட மருத்துவர்கள் மூலம் உயர்தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், அவரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
- இந்த ஆண்டுக்கான தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.
- வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாகவும், அவர் 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் 40 நாட்கள் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் இருந்து 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பதுடன், விரதம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களில் ஈடுபடுவர்.
இதனையொட்டி, நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியில் உலகம் அமைதியாக இருக்க வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பின்னர், கிறிஸ்தவர்களின் நெற்றியில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தை அற்புதராஜ், பரிசுத்தராஜ் உள்ளிட்ட பாதிரியார்கள் சாம்பல் பூசி 40 நாள் தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.
- போதிய தூக்கம் இல்லாமல் போனால் உடலில் சோர்வு காணப்படும்.
- கல்வியில் இவர்கள் சக மாணவர்களைவிட சிறந்து விளங்கினார்கள்.
நன்றாக தூங்கி எழும்போது உடலில் ஒருவித புத்துணர்வு கிடைக்கும். அதே வேளையில், போதிய தூக்கம் இல்லாமல் போனால் உடலில் சோர்வு காணப்படும்.
இதுசம்பந்தமாக சர்வதேச அமைப்பு ஒன்று இளம் வயது ஆண், பெண்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், தூங்கச்செல்லும் நேரம், விழிக்கும் நேரம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 3 குழுக்களாக பிரித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு முடிவில், குறைந்தபட்சம் 7 மணி நேரத்திற்கு மேலாக தூங்கிய குழுவில் இருந்தவர்களின் உடல் நிலை மிகவும் சிறப்பாக இருந்ததும், இவர்களின் இதய துடிப்பு மிகவும் சீராக இருந்ததும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் அன்றாட வாழ்வில் படிப்பு, புதிய சொற்களின் அர்த்தம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை சுலபமாக எதிர் கொண்டவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இத்துடன், கல்வியில் இவர்கள் சக மாணவர்களைவிட சிறந்து விளங்கினார்கள்.
எனவே, இளம் வயதினர் போதிய உடல் மற்றும் மன வளர்ச்சியை இயற்கையாக பெற இளம் வயது பருவத்தில் எக்காரணம் கொண்டும் தூக்கத்தை இழக்காமல் போதிய நேரத்தை தூக்கத்திற்கு ஒதுக்கி நன்கு தூங்கி எழ வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
- மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் விஜயின் கடைசி படம் என கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இப்படம் ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் இதுவரை வெளியாகாமல் உள்ளது.
'ஜன நாயகன்' படத்தில் பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் நரேன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என்.கே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தில் நடித்துள்ள மமிதா பைஜு, விஜயுடன் பணிபுரிந்த அனுபவத்தை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். மமிதா பைஜு கூறியதாவது:- விஜய் சார் படப்பிடிப்பு தளத்திற்கு மிகவும் சரியான நேரத்தில் வருபவர். மிகவும் நிதானமான இயல்புடையவராக இருந்தாலும், அவர் மிகவும் இனிமையானவர். நாம் அவரிடம் சிறிய சிறிய விஷயங்களைச் சொன்னாலும், அவர் அவற்றை நினைவில் வைத்திருப்பார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் அவரைச் சந்தித்தாலும், அவர் திடீரென்று என்னிடம் அதைப் பற்றிக் கேட்பார்.
அவருக்குப் பிடித்த உணவுகள் பற்றியும் நான் தெரிந்துக்கொண்டேன். அவர் எப்போதும் மதிய உணவாக சால்மன் (மீன்) சாப்பிடுவார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நான் எப்போதும் அவரிடம், "சார், நீங்கள் சால்மன் (மீன்) சாப்பிட்டீர்களா?" என்று கேட்பேன், அவர் ஒவ்வொரு முறையும் புன்னகையுடன் கூறுவார்" என்றார்.
- சுமார் 2,40,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின.
- முழுமையான தீர்வை எட்ட இன்னும் பணிகள் நடப்பதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் செயலியான யூடியூப் உலகின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் தொழில்நுட்ப கோளாறால் முடங்கியது.
அமெரிக்காவில் மட்டும் சுமார் 2,40,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின. இந்தியாவில் சுமார் 19,000-க்கும் அதிகமான பயனர்கள் யூடியூப் பயன்படுத்தமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
"Something went wrong" என்று மட்டுமே திரையில் தோன்றுவதால் பயனர்கள் அவதியுற்றனர்.
56% பயனர்கள் செயலி இயங்கவில்லை என்றும், 17% பயனர்களால் இணையதளத்தில் யூடியூப் பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். யூடியூப் டிவியிலும் ஒளிபரப்பில் தடை ஏற்பட்டுள்ளது.
யூடியூப் Recommendation அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முகப்புப் பக்கம் மற்றும் தேடல் முடிவுகளில் வீடியோக்கள் தோன்றுவதில் சிக்கல் ஏற்பட்டது" என்று யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பல இடங்களில் முகப்புப் பக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள போதிலும், முழுமையான தீர்வை எட்ட இன்னும் பணிகள் நடந்து வருவதாக யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
- அமிஷ் ஷர்மா இயக்கத்தில் ஷாகித் கபூர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாக இருந்தது.
விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம் வருகிற 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையிலும், அதனைத்தொடர்ந்து திருமண வரவேற்பு மார்ச் 4-ந்தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. திருமணத்துக்கு சில நாட்களே உள்ள நிலையில், இந்தியில் முன்னணி நடிகரின் படத்தில் இருந்து ராஷ்மிகா விலகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது அமிஷ் ஷர்மா இயக்கத்தில் ஷாகித் கபூர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில் ராஷ்மிகாவின் திடீர் விலகல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தையொட்டி, இந்த விலகல் முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல இந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் தந்தை சுனில் மல்ஹோத்ரா (50) நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14 (சனிக்கிழமை) டெல்லியில் அவர் உயிர் பிரிந்ததாக சித்தார்த் மல்ஹோத்ரா நேற்று இரவு தனது இன்ஸ்டா பதிவில் அறிவித்தார்.
அவரது மறைவைத் தொடர்ந்து, சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அவரது மனைவி நடிகை கியாரா அத்வானி டெல்லிக்குச் சென்று இறுதிச் சடங்குகளை முடித்துள்ளனர்.
தனது தந்தையின் மறைவு குறித்த பதவில் சித்தார்த், "அவர் நேர்மை கொண்ட அரிய மனிதர். எதற்கும் வளைந்து கொடுக்காத விழுமியங்களுடன் வாழ்ந்தவர்.
முரட்டுத்தனம் இல்லாத ஒழுக்கம், அகந்தை இல்லாத பலம் ஆகியவை அவரிடம் இருந்தன. வாழ்க்கை அவரைச் சோதித்தபோது கூட அவர் நேர்மறையாகவே இருந்தார். அப்பா, உங்களின் நேர்மையே எனக்குக் கிடைத்த சொத்து" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சுனில் மல்ஹோத்ரா வணிகக் கடற்படை கேப்டனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா தனது குடும்பத்தினருடன் டெல்லியில் தங்கியுள்ளார். திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்குத் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.






