search icon
என் மலர்tooltip icon

    மத்திய பட்ஜெட்-2024

    • இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.
    • விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் படித்து வருகிறார்.

    அதில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:

    * இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு, அவர்கள் சம்பாதிப்பதும் சிறப்பாகி உள்ளது.

    * பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் அனைத்து பகுதிகளும் துடிப்புடன் பங்காற்றி வருகின்றன.

    * அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடையும்.

    * கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா
    • புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

    வரும் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பல முக்கிய அம்சங்களை குறித்து உறுப்பினர்களிடையே தெரிவித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 2 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன.

    வீடுகளில் சூரிய மின் தகடுகள் பதிக்கப்பட்டும் திட்டம் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும்.

    அங்கன்வாடிகளுக்கு போஷன் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    மீன்வளத்துறைக்காக தனி துறை அமைக்கப்பட்டதில் 2013-14லிருந்து கடல் உணவு ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது.

    இவ்வாறு நிதியமைச்சர் கூறினார்.

    • விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
    • அனைவருக்கும் வீடு, குடிநீர், மின்சாரம், இலவச எரிவாயு சிலிண்டர் என பல திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் படித்து வருகிறார்.

    அதில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:

    அனைத்து சமூகத்தினரையும், அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு சமூக நீதி என்பது வெறும் வெற்று அரசியல் முழக்கமாக மட்டுமே இருந்தது.

    விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    அனைவருக்கும் வீடு, குடிநீர், மின்சாரம், இலவச எரிவாயு சிலிண்டர் என பல திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன.

    மிகப்பெரும்பான்மையுடன் பாஜக அரசுக்கு மீண்டும் மக்களின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    2.3 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு சிறு கடன் வழங்கப்பட்டுள்ளது.

    • அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்திருப்பது குறித்து விரிவான விசாரணை செய்ய வேண்டும்.
    • அதானி குழும மோசடி விவகாரத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஏற்கனவே 2 நாட்கள் முடங்கி இருந்தன. இன்று 3-வது நாளாக இரு அவைகளும் முடங்கின.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    2-வது நாளான கடந்த 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அதானி குழும விவகாரத்தால் 2-ந்தேதியும், 3-ந்தேதியும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இரு அவைகளும் முடங்கியது.

    அமெரிக்காவை. சேர்ந்த ஹிண்டன் பார்க் நிறுவனம் கடந்த 24-ந்தேதி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பங்கு சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையை முடக்கி இருந்தனர்.

    இந்த நிலையில் அதானி குழும விவகாரத்தால் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும், எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

    அதானி குழும முறைகேடு குறித்து கூட்டுக்குழு விசாரணை நடத்த கோரி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கம் மற்றும் கோஷங்களையும் எழுப்பினார்கள்.

    இந்த போராட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மகுவா மைத்ரா உள்ளிட்ட எம்.பி.க்கள், சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத் உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் கலந்து கொண்ட னர்.

    அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்திருப்பது குறித்து விரிவான விசாரணை செய்ய வேண்டும். ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசுடமை வங்கிகள் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பது பற்றியும், கடன் வழங்கி இருப்பது குறித்தும் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பது குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

    பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி குழும விவகாரத்தை கிளப்பினார்கள்.

    அதானி குழுமத்தின் மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை. இதனால் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து 2 மணி வரை அவையை ஒத்தி வைத்தார்.

    மேல்சபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. அதானி குழும முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.

    எதிர்க்கட்சிகள் கோரிக்கையை துணை ஜனாதிபதியும், அவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் ஏற்க மறுத்தார். இதனால் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    அதானி குழும மோசடி விவகாரத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஏற்கனவே 2 நாட்கள் முடங்கி இருந்தன. இன்று 3-வது நாளாக இரு அவைகளும் முடங்கின.

    • அனைத்து தரப்பினருக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
    • விவசாயத்துறையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.

    பெங்களூரு

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மத்திய பட்ஜெட் குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசின் தவறான ஆட்சி நிர்வாகம் மற்றும் கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. நாட்டின் முதுகெலும்பு என்று நாம் போற்றும் விவசாயிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலையின்மை அதிகரித்துவிட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் விவசாயத்துறையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.

    அதாவது விவசாயத்துறைக்கு ரூ.8 ஆயிரத்து 468 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு ஆதரவு விலை, அறிவியலுக்கு மாறான பயிர் காப்பீட்டு திட்டம், வெள்ளம், வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி பற்றாக்குறை போன்றவை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக அதிகரிப்பதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கவில்லை.

    பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.23 ஆயிரம் கோடி தேவை. ஆனால் மத்திய அரசு ரூ.5,300 கோடி வழங்குவதாக கூறியுள்ளது. இதில் 40 சதவீத கமிஷனை கழித்தால் ரூ.3 ஆயிரம் கோடி தான் கிடைக்கும். மேலும் பத்ரா திட்டம் குறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிவடையும் வரை இந்த நிதியை செலவு செய்ய முடியாது. உணவு மானியம், நரேகா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மானியம் குறைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.மத்திய அரசு கர்நாடகத்தை முழுமையாக நிராகரித்துவிட்டது.

    நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பது இந்த பட்ஜெட் காட்டுகிறது. இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த திட்டங்களும் இல்லை. ஆதரவு விலை பற்றி கூறவில்லை. சிறுதானியங்களில் ராகியும் ஒன்று என்று கூறியுள்ளனர். அரசியல் நோக்கத்தில் தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது" என்றார்.

    கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறும்போது, "மத்திய பட்ஜெட் வளர்ச்சியை மையமாக வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரெயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தினருக்கு வருமான வரியில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

    ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கூறுகையில், "பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தேசிய திட்டமாக அறிவித்து விரைவாக பணிகளை தொடங்க வேண்டும். இப்போது எந்த திட்டத்தை அறிவித்தாலும், அது தேர்தலுக்கு பிறகே அமலுக்கு வரும். இந்த விஷயத்தில் அடுத்து கர்நாடகத்தில் புதிதாக அமையும் அரசின் பங்கும் முக்கியமானது. சில ரெயில்வே திட்டங்கள் கடந்த 25 ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றன. அதை நிறைவேற்ற மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. பா.ஜனதா தலைவர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அறிவிக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு அதை மறந்து விடுகிறார்கள். மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது" என்றார்.

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவில், "மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட், எதிர்காலத்தை மனதில் வைத்தும், ரூ.380 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலர்) பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையிலும் அமைந்துள்ளது. நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல் அனைத்து தரப்பினருக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு ஜன்தன் திட்டத்தை தொடங்கியது.
    • கிராமப்புற பெண்களை 1 லட்சம் சுய உதவிக்குழுக்களாக திரட்டி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது

    புதுடெல்லி :

    நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரும் வங்கி கணக்குகளை கையாளும் நோக்கில் கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு ஜன்தன் திட்டத்தை தொடங்கியது.

    பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஜன்தன் திட்டம் குறித்தும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ஜன்தன் திட்டத்தின் கீழ் இதுவரை 47.8 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் கிராமப்புற பெண்களை 1 லட்சம் சுய உதவிக்குழுக்களாக திரட்டி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது' என தெரிவித்தார்.

    பசுமை வளர்ச்சி முயற்சிகள் கார்பன் தீவிரத்தை குறைக்கவும், பசுமையான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
    • பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் குறித்து அவர் விரிவாக விளக்கினார்.

    புதுடெல்லி :

    பாராளுமன்றத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

    இதில் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் குறித்து அவர் விரிவாக விளக்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதன் மூலம் இந்த தொற்றுநோய் காலத்தில் யாரும் பசியாக இருக்கவில்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது.

    பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ரூ.2 லட்சம் கோடி செலவில் ஜனவரி 1 முதல் அரசு செயல்படுத்துகிறது.

    பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியைப் பெருக்க, விவசாயிகளுக்கான விளை பொருட்களுக்கு விலை ஆதரவு மற்றும் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளை நோக்கி திரும்பும் நடவடிக்கைகளின் பின்னணியில், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சி பல ஆண்டுகளாக உற்சாகமாக உள்ளது.

    வேளாண் துறையில் தனியார் முதலீடு நிதியாண்டில் 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடநிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

    சென்னை:

    மத்திய பட்ஜெட் அறிவிப்பு குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடநிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் "தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம், இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New regime (புதிய முறைக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, Old regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும்.

    ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் மத்திய பட்ஜெட் அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது.

    மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது.

    மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும். நகர்ப்புர கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது.

    பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை (Unit cost) உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசு இத்திட்டத்தின்கீழ். உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும்.

    மத்திய அரசின் திட்டங்கள் Results based financing என்ற ஒரு புதிய வழிமுறைப்படி தொடக்க முயற்சியாக (pilot basis) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கோவிட் பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில் மத்திய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது மத்திய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

    நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மம்தா குற்றச்சாட்டு
    • வருமான வரி வரம்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் யாருக்கும் உதவாது.

    போல்பூர்:

    மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:-

    இந்த பட்ஜெட் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அல்ல, முற்றிலும் சந்தர்ப்பவாதம், மக்கள் விரோதமானது மற்றும் ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட். ஒரு வகுப்பினருக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பயனளிக்கும். நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காண இந்த பட்ஜெட் உதவாது. 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

    வருமான வரி வரம்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் யாருக்கும் உதவாது. இந்த பட்ஜெட்டில் நம்பிக்கை தரும் அம்சங்கள் இல்லை. இது ஒரு இருண்ட பட்ஜெட். எனக்கு அரை மணி நேரம் கொடுங்கள், ஏழைகளுக்கான பட்ஜெட்டை எப்படி தயாரிப்பது என்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    • இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எந்த நிவாரணமும் இல்லை.
    • வேலையில்லா திண்டாட்டத்தை போக்க உறுதியான திட்டம் எதுவும் இல்லை.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு மீண்டும் டெல்லி மக்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டினார்.

    கடந்த ஆண்டு 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரி செலுத்திய போதிலும், மத்திய பட்ஜெட்டில் டெல்லிக்கு 325 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றார் கெஜ்ரிவால்.

    இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எந்த நிவாரணமும் இல்லை. மாறாக, இந்த பட்ஜெட் பணவீக்கத்தை அதிகரிக்கும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்க உறுதியான திட்டம் எதுவும் இல்லை. கல்விக்கான பட்ஜெட்டை 2.64 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகக் குறைப்பது துரதிர்ஷ்டவசமானது. சுகாதார பட்ஜெட்டை 2.2 சதவீதத்தில் இருந்து 1.98 சதவீதமாக குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

    • தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது.
    • கிச்சன் சிம்னிகளுக்கான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    மத்திய பட்ஜெட்டில் தங்கம், சிகரெட் மீதான இறக்குமதி வரி கூடுதலாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்படும் தேசிய பேரிடர் நிவாரண நிதி வரி 16 சதவீதம் அதிகரிக்கப்படும்.

    தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது. கிச்சன் சிம்னிகளுக்கான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    கூடுதல் வரி விதிப்பு காரணமாக சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலை உயர்கிறது. ஏற்கனவே தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பதால் வரும் நாட்களில் தங்கம், வெள்ளி விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது.

    • அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்.
    • விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயனடைவர்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

    மேலும் பிரதமர் மோடி கூறியதாவது:- அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட். விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயனடைவர். புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் என கூறியுள்ளார்.

    ×