search icon
என் மலர்tooltip icon

    மத்திய பட்ஜெட்-2024

    • 2025-26-ம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • வருமான வரி ரிட்டன்ஸ் 2013-ம் ஆண்டில் 90 நாட்கள் இருந்த நிலையில் அது 10 நாளாக குறைந்து உள்ளது.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்ந்துள்ளது. மாலத்தீவு விவகாரத்தை தொடர்ந்து லட்சத்தீவு சுற்றுலாவுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார காரிடார் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

    வருமான வரி ரிட்டன்ஸ் 2013-ம் ஆண்டில் 90 நாட்கள் இருந்த நிலையில் அது 10 நாளாக குறைந்து உள்ளது. கூடுதலாக செலுத்திய வருமான வரியை திரும்ப தரும் காலம் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • லட்சத்தீவில் சுற்றுலா உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    • 2024-25-ல் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரெயில் சேவை கொண்டு வரப்படும். இந்தியாவில் அன்னிய முதலீடுகள் 596 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. லட்சத்தீவில் சுற்றுலா உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜெய்சவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் உடன் ஜெய் அனுசந்தான் (ஆராய்ச்சி) என்பதே மோடி அரசின் குறிக்கோள். 40 ஆயிரம் சாதாரண ரெயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்துக்கு உயர்த்தப்படும். ஆன்மீக சுற்றுலாவிற்கான திட்டங்கள் கொண்டு வருவதால் உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். 2023-24-ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவு ரூ.44.90 லட்சம் கோடியாகும். ஜூலையில் நாட்டின் வளர்ச்சிக்காக விரிவான திட்டங்கள் அறிவிக்கப்படும்.

    2024-25-ல் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும். மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீன் வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • தொழில்நுட்பத்துறை சார்ந்த இளைஞர்களுக்கு இது பொற்காலம்.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சுய உதவி குழு கடன் உள்ளிட்ட மகளிர் நலத்திட்டங்கள் மூலம் 1 கோடி பெண்கள் லட்சாதிபதி ஆகியுள்ளனர். வேளாண் துறையில் அரசு மற்றும் தனியார் துறைகள் கூடுதல் முதலீடு செய்வது ஊக்குவிக்கப்படும்.

    மீன் வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. யூரியாவை தொடர்ந்து டி.ஏ.பி. உரங்களிலும் நானோ தொழில்நுட்பம் கொண்டு வரப்படும்.

    ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.

    தொழில்நுட்பத்துறை சார்ந்த இளைஞர்களுக்கு இது பொற்காலம். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது.
    • கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. வளர்ச்சியின் பலன்கள் ஏழைகளை அடையத் தொடங்கியுள்ளது. எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது.

    சமூக நீதி அரசியல் கட்சிகளின் கோஷமாக உள்ள நிலையில் சிறந்த நிர்வாகத்தின் மூலம் அதை செயல்படுத்தி வருகிறோம்.

    யாருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மதசார்பின்மையை மக்களுக்கான அரசின் திட்டங்கள் மூலம் மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர். மக்கள் மீண்டும் பெரும்பான்மையுடன் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். வீடுகளுக்கு குடிநீர், அனைவருக்கும் வீடு, குறைந்த விலையில் கியாஸ் சிலிண்டர் என பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமனின் 6-வது பட்ஜெட் இது
    • பா.ஜ.க.வின் 10-ஆண்டு கால பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பேசினார்

    2024 ஜூன் 16 அன்று பாராளுமன்றத்தின் 17-வது மக்களவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது. ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையில் 543 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் வெளியிடப்படும்.

    நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக தனது உரையில், 10 ஆண்டு கால பா.ஜ.க. அரசின் பொருளாதார சாதனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

    தற்போது அரசின் செலவு - ரூ.44.90 லட்சம் கோடி, வரி வருவாய் மதிப்பீடு - ரூ.27.56 லட்சம் கோடி, நிதி பற்றாக்குறை - 5.8 சதவீதம் என உள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய நிதியமைச்சரின் உரையின் சிறப்பம்சங்கள்:

    * வரும் 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டி தரப்படும்.

    * வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு வழிவகை செய்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்

    * நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

    * பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்று நோயை தடுக்க தடுப்பூசி வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது

    * ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்

    * அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

    * தொழில் தொடங்க, வட்டியில்லா கடன் வழங்க ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நிதியம் அமைக்கப்படும்

    * பால் உற்பத்தியை அதிகரிக்க புது திட்டம் கொண்டு வரப்பட உள்ளது

    • எங்கள் அரசு யாரையும் ஒதுக்காத அனைவரையும் அரவணைக்கும் அரசாக செயல்படுகிறது.
    • மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் அடைகின்றனர்.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சமூக நீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம்.

    ஊழல் ஒழிப்பையும், வாரிசு அரசியலையும் எதிர்த்து பணியாற்றி வருகிறோம். எங்கள் அரசு யாரையும் ஒதுக்காத அனைவரையும் அரவணைக்கும் அரசாக செயல்படுகிறது.

    நாட்டில் 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

    மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் அடைகின்றனர். இந்திய கல்விக் கொள்கையில் தேசிய கல்விக்கொள்கை பெருமாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கல்வித்துறையில் சீர்திருத்தங்களை புதிய தேசிய கல்விக்கொள்கை மூலம் செயல்படுத்தி வருகிறோம். 10 ஆண்டுகளில் 7 ஐ.ஐ.டி.க்கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விவசாயிகள், ஏழைகள் என மக்கள் நலத்திட்டங்கள் மூலம் 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி மானியம் சென்றடைந்துள்ளது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு நாங்கள் மிக உயரிய முன்னுரிமை அளித்து வருகிறோம். சிறந்த நிர்வாகம், திட்டங்கள் மூலம் இந்திய இளைஞர்களிடையே பணித்திறனுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் 30 கோடி பெண்களுக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குறிப்பிட்ட கால அவகாசத்தில் உரிய முறையில் உயர்த்தப்பட்டு வருகிறது. 4 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    கட்டமைப்பு திட்டங்கள் மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1.1 கோடி இளைஞர்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர். சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த காலத்துக்குள் முடிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. ரூ.34 லட்சம் கோடி நேரடி மானியம் மூலம் ரூ.2.7 லட்சம் கோடி வீணாவது தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் புதிதாக 3000 ஐ.டி.ஐ.க்களை ஏற்படுத்தி உள்ளோம். திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் 54 லட்சம் இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயத்துக்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது.
    • 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விவசாயத்துக்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. 11.8 கோடி விவசாயிகள் அரசின் திட்டங்களால் நேரடியாக பலன் அடைந்துள்ளனர். ஏழைகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாக கருதி செயல்படுகிறோம்.

    சிறந்த நிர்வாகம் மற்றும் திட்டங்கள் மூலம் இந்திய இளைஞர்களிடம் பணித்திறனுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது. 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2024-25க்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார்
    • புதிய அரசு பொறுப்பேற்றதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

    இவ்வருடம் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்ததாவது:

    மத்திய பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

    வருமான வரி உச்ச வரம்பிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட வழிமுறைகளே தற்போது தொடரும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    பொருளாதார ரீதியாக மத்திய தரம் என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிர்பார்ப்பு தனி நபர் வருமானவரியில் சலுகைகள்தான்.

    ஆனால், கடந்த முறை கொண்டு வரப்பட்ட "ஓல்டு ரெஜிம், நியூ ரெஜிம்" எனும் இரண்டு திட்டங்கள் தொடர்ந்து நடைபெறப்படும் என்பது தற்போது தெளிவாகி உள்ளது.

    • இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.
    • விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    அதில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:

    * 2025 நிதியாண்டியில் உள்கட்டமைப்புகளுக்கான நிதி 11.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    * மக்கள் தொகை பெருக்கத்தின் சவால்களை எதிர்கொள்ள உயர்மட்டக் குழு அமைக்கப்படும்

    * நிதி பற்றக்காகுறை எதிர்வரும் ஆண்டில் மொத்த ஜிடிபி-யில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு

    * நடப்பாண்டில் மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள 1.3 லட்சம் கோடி வழங்கப்படும்

    * நாட்டு மக்களின் சராசரி வருமானம் அதிகரிப்பு

    * கடந்த சில வருடங்களில் நேரடி வரி வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

    * ஏற்கனவே 7 லட்சம் வரை வருமான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    * வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    * மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் சராசரி ரூ. 1.66 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

    * பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது;

    * கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது;

    * 11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது;

    * 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது;

    * திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது- நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    * மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது;

    * 2027 ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும்;

    * 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன;

    * அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்

    * ஒரே நாடு, ஒரே சந்தை , ஒரே வரி போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிக்கு உதவியாக உள்ளது;

    * முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது;

    * கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி , 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது

    * நரேந்திர மோடி பிரதமரான பிறகு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது;

    * வளர்ச்சிப் பாதையில் நாடு வெற்றி நடை போடுவதால் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் வாக்களிப்பார்கள்;

    * நாட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது;

    * ரேஷன் கடைகள் மூலம் 80கோடி மக்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுள்ளது;

    * கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்கப்பட்டுள்ளனர்-

    * வருமானவரி தாக்கல் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.

    • 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார்
    • புதிய அரசு பொறுப்பேற்றதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

    இவ்வருடம் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    நிதியமைச்சரின் பட்ஜெட் உரையின் சிறப்பம்சங்கள்:

    விக்சித் பாரத் திட்டத்தை செயல்படுத்த பல புதுமைகளும் மாற்றங்களும் அவசியப்படுகிறது.

    விக்சித் பாரத் என்பது இந்தியா, அடுத்து வரும் தசாப்தங்களில் பொருளாதார ரீதியாக, சமூக மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உலகிலேயே முன்னிலையில் இருப்பதற்கு 75-வது குடியரசு தினத்திற்கான கருப்பொருள். இதில் மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புகள் அடங்கும்.

    ஒவ்வொரு கால எல்லையில் விக்சித் பாரத் திட்டத்திற்கு மாநிலங்கள் தங்கள் இலக்குகளை எட்டுவதற்கு, ரூ.75 ஆயிரம் கோடிக்கான 50-வருட வட்டியில்லா கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிதியமைச்சர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
    • முழு பட்ஜெட் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் தாக்கல் செய்யப்படும்

    வரும் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மருத்துவ துறை குறித்து நிதியமைச்சரின் உரையின் சிறப்பம்சங்கள்:

    எங்கள் அரசு பல மருத்துவ கல்லூரிகளை திறக்க உள்ளது. தற்போது உள்ள கல்லூரிகளும் மேம்படுத்தப்படும். இதற்கென ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அதன் ஆலோசனைகள் பெறப்படும். இதன் மூலம் எதிர்கால இந்தியாவிற்கு தேவைப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கை உயரும்.

    ×