என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • பிடிரான் நிறுவனத்தின் புதிய பேஸ்பாட்ஸ் என்கோர் இயர்பட்ஸ் பில்ட்-இன் ட்ரூடாக் ENC தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
    • பிடிரான் பேஸ்பாட்ஸ் என்கோர் மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 50 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    பிடிரான் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பேஸ்பாட்ஸ் என்கோர் ட்ரூ வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்தது. கடந்த பிப்ரவரி மாத வாக்கில் பேஸ்பட்ஸ் ஜென் மாடலை தொடர்ந்து புதிய இயர்பட்ஸ் அறிமுகமாகி இருக்கிறது. புதிய பேஸ்பாட்ஸ் என்கோர் மாடல் நீண்ட நேர பயன்பாடுகளுக்கு ஏற்ப சவுகரிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய இயர்பட்ஸ்-இல் மேம்பட்ட நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் உள்ளது. இது 90 சதவீத பேக்கிரவுண்ட் சத்தத்தை குறைக்கிறது. இதன் மூலம் அதிக சத்தமுள்ள பகுதிகளிலும் தெளிவான ஆடியோவை கேட்க முடியும். இத்துடன் பில்ட்-இன் ட்ரூடாக் ENC தொழில்நுட்பம் மற்றும் நான்கு மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன.

     

    இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், சார்ஜிங் கேஸ் உள்பட 50 மணி நேரத்திற்கான பேக்கப் கிடைக்கும். இதில் ப்ளூடூத் 5.3, டச் கண்ட்ரோல்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளது.

    பிடிரான் பேஸ்பாட்ஸ் என்கோர் அம்சங்கள்:

    10mm டைனமிக் பாஸ் பூஸ்ட் டிரைவர்கள் ட்ரூசோனிக்

    ப்ளூடூத் 5.3, 1-ஸ்டெப் பேரிங் மற்றும் ஆட்டோ ரி-கனெக்ட்

    குவாட் மைக், ENC ட்ரூடாக் தொழில்நுட்பம்

    லோ லேடன்சி ஆடியோ, வீடியோ சின்க், ஸ்டீரியோ மற்றும் மோனோ பட்

    அதிகபட்சம் 50 மணி நேர பேட்டரி பேக்கப்

    பத்து நிமிட சார்ஜிங்கில் 200 நிமிடங்கள் பயன்படுத்தும் வசதி

    400 எம்ஏஹெச் பேட்டரி

    டைப் சி சார்ஜிங் கேஸ்

    டச் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட்

    IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    பிடிரான் பேஸ்பாட்ஸ் என்கோர் மாடல் மிட்நைட் பிளாக், நியான் புளூ மற்றும் கிராஃபைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக குறுகிய காலக்கட்டத்திற்கு பிடிரான் பேஸ்பாட்ஸ் என்கோர் மாடல் ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் இதன் விலை ரூ. 1199 என மாறிவிடும்.

    • கடலில் காணாமல் போன ஆப்பிள் வாட்ச் மாடல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
    • கடல்நீரில் மூழ்கி இருந்த ஆப்பிள் வாட்ச் மீட்கப்படும் போதும் சீராக இயங்கும் நிலையில் இருந்தது.

    ஆப்பிள் வாட்ச் மாடல்கள் எப்படி பயனர் உயிரை காப்பாற்றுகின்றன என்பதை கூறும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறியுள்ளன. தற்போது கடலில் காணாமல் போன ஆப்பிள் வாட்ச் மாடல் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வெற்றிகரமாக மீட்கப்பட்ட நிலையில் ஆப்பிள் வாட்ச் முன்பு இருந்ததை போன்றே சீராக இயங்கியது.

    பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனரியோவில் பாய்மர கப்பலில் பயணம் செய்த ஜெஃபர்சன் ரோச்சா, கடலில் இறங்கி நீந்த திட்டமிட்டார். கடலில் மகிழ்ச்சியாக நீந்திய ரோச்சா, தனது ஆப்பிள் வாட்ச்-ஐ தவறுதலாக கடலில் தொலைத்துவிட்டார். அவர் கடலில் தொலைத்த ஆப்பிள் வாட்ச் மாடல் ஃபைண்ட் மை (Find Me) எனும் அம்சம் கொண்டிருந்தது. எனினும், அது எந்த ஆப்பிள் வாட்ச் மாடல் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

     

    கடலில் ஆப்பிள் வாட்ச் தவறவிட்டதை அறிந்து கொண்ட ரோச்சா உடனடியாக படகில் ஏறி ஆப்பிள் வாட்ச் ஆஃப் ஆவதற்குள் அதனை 'ஃபைண்ட் மை' அம்சம் மூலம் தேட துவங்கினார். ஃபைண்ட் மை ஆப் மூலம் தேட துவங்கியதும், ஆப்பிள் வாட்ச் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. பின் காணாமல் போன மறுநாள் அவருக்கு நோட்டிஃபிகேஷன் அலர்ட் கிடைத்துள்ளது.

    அதில் ஆப்பிள் வாட்ச் ஆக்டிவேட் ஆகி இருப்பதாக தகவல் இருந்தது. உடனே லாஸ்ட் மோட்-ஐ ஆக்டிவேட் செய்த ரோச்சா, தனது தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டார். தேடல் முயற்சிக்கு பலன் அளிக்காத நிலையில், வேறு யாரேனும் அதனை கண்டெடுத்தால் தன்னை தொடர்பு கொள்வர் என்றும் ரோச்சா நம்பினார்.

     

    இவரது நம்பிக்கை வீண் போகவில்லை. இன்ஸ்டாகிராமில் இருந்து ரோச்சாவை 16 வயது சிறுமி ஒருவர் தொடர்பு கொண்டு ஆப்பிள் வாட்ச் தன்னிடம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஆப்பிள் வாட்ச்-ஐ 50 வயது ஓட்டுனர் கண்டெடுத்தார் என்பதை ரோச்சா, அந்த சிறுமியின் மூலம் அறிந்து கொண்டார்.

    இவரது வாட்ச்-ஐ கண்டெடுத்த ஓட்டுனர் பெனோனி அண்டோனியோ ஃபிஹோ மக்கள் தொலைக்கும் பொருட்களை கண்டெடுத்தால், அதனை அவர்களிடம் சேர்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் மீட்டெடுத்த ரோச்சாவின் ஆப்பிள் வாட்ச் அதன் முந்தைய நிலையிலேயே சீராக இயங்கியது.

    ஆப்பிள் நிறுவனம் சீரிஸ் 2-வை தொடர்ந்து அறிமுகம் செய்த அனைத்து மாடல்களிலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்கி வருகிறது. இது ஆப்பிள் வாட்ச் அதிகபட்சம் 50 மீட்டர்கள் வரையிலான நீரில் மூழ்கினாலும் சீராக இயங்கும் வசதியை கொண்டுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் அதிகபட்சம் 100 மீட்டர்கள் ஆழத்தில் விழுந்தலும் சீராக இயங்கும்.

    காணாமல் போன ஆப்பிள் வாட்ச்-ஐ மீட்பது எப்படி?

    - ஐபோனில் ஆப்பிள் வாட்ச் செயலியை திறக்கவும்.

    - ஆல் வாட்சஸ் ஆப்ஷனில் மை வாட்ச் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    - வாட்ச் அருகில் உள்ள இன்ஃபோ பட்டனை கிளிக் செய்து, ஃபைண்ட் மை ஆப்பிள் வாட்ச் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    - ஐபோனில் ஃபைண்ட் மை ஆப்-இல் வாட்ச் லொகேஷனை பார்க்க அதற்கான ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

    - ஆப்பிள் வாட்ச் அருகாமையில் இருப்பதை காண்பித்தால், உடனே பிளே சவுண்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    Photo Courtesy: Arquivo Pessoal

    • வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருப்பதாக நீண்ட காலமாக கூறப்படும் அம்சமாக டெக்ஸ்ட் எடிட்டர் உள்ளது.
    • வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் டெக்ஸ்ட் எடிட்டர் அம்சம் டெஸ்டிங் செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

    வாட்ஸ்அப் செயலியில் டெக்ஸ்ட் எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த அம்சம் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பீட்டா டெஸ்டர்களில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு இந்த அம்சம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    எனினும், முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது. தற்போது டெஸ்டிங்கில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டர் அம்சம் விரைவில் அனைவருக்குமான அப்டேட்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். டெக்ஸ்ட் எடிட்டர் மட்டுமின்றி எடிட் மெசேஞ்ச் அம்சத்தையும் வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

     

    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு வரும் WABetainfo, புதிய அம்சம் கொண்டு பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஜிஃப் உள்ளிட்டவைகளை டூல்ஸ் மற்றும் ஃபாண்ட்களை எடிட் செய்ய முடியும் என தெரிவித்து இருக்கிறது. தற்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.23.7.17 வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ஃபாண்ட்களிடையே எளிதில் ஸ்விட்ச் செய்ய முடியும். ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருந்த போதிலும், தற்போது எளிதில் விரும்பிய ஃபாண்ட்களை தேர்வு செய்துவிட முடியும். இத்துடன் டெக்ஸ்ட் அலைன்மெண்ட் வசதியின் மூலம் டெக்ஸ்ட்-ஐ இடதுபுறம், வலதுபுறம் மற்றும் நடுவில் வைத்துக் கொள்ள முடியும்.

    டெக்ஸ்ட் பின்னணியில் உள்ள பேக்கிரவுண்ட் நிறத்தை பயனர்கள் புதிய அம்சம் கொண்டு மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் மிகமுக்கிய டெக்ஸ்ட்-ஐ நிறம் கொண்டு வித்தியாசப்படுத்தி காண்பிக்க முடியும். அடுத்து வரும் சில வாரங்களில் புதிய டெக்ஸ்ட் எடிட் அம்சம் பலருக்கும் வழங்கப்பட இருப்பதாக WABetainfo தெரிவித்து இருக்கிறது.

    இதே போன்ற அம்சம் ஐஒஎஸ் சாதனங்களிலும் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. எனினும், ஐஒஎஸ் பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: WABetainfo

    • நோக்கியா உருவாக்கி இருக்கும் யுஐ முற்றிலும் புதிய டைப்ஃபேஸ் மூலம் தோற்றத்தை புதிதாக கொண்டிருக்கிறது.
    • புதிய நோக்கியா பியுர் யுஐ-இல் புதிய டிசைன் கொண்ட ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளன.

    நோக்கியா சமீபத்தில் தான், தனது லோகோவை மாற்றி முற்றிலும் புதிதாக அதிநவீன தோற்றத்தை வழங்கியது. பல ஆண்டுகளுக்கு பின் நோக்கியா லோகோவில் மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நோக்கியா C32, நோக்கியா C22, நோக்கியா C12 மற்றும் நோக்கியா C12 ப்ரோ என பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை நோக்கியா பிராண்டு அறிமுகம் செய்தது.

    இந்த வரிசையில், நோக்கியா பியுர் யுஐ அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த யுஐ வர்த்தக ரீதியிலான பொருட்களில் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக இந்த யுஐ ஹெச்எம்டி உற்பத்தி செய்யும் நோக்கியா ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படாது. புதிய யுஐ தனித்துவ தோற்றம் மற்றும் மிக எளிய டிசைன் கொண்டிருக்கிறது.

    முற்றிலும் புதிய டிசைன் பாரம்பரியம் கொண்டிருக்கும் நோக்கியா பியுர் யுஐ, நோக்கியா எதிர்காலத்தில் உருவாக்கும் புதிய சாதனங்களில் மட்டும் வழங்கப்பட இருக்கிறது. இதன் ஸ்டைல் சிறப்பாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக நோக்கியா தெரிவித்துள்ளது.

    புதிய தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கியா பியுர் யுஐ பின்னணியில் நோக்கியா பியுர் இண்டர்ஃபேஸ் பயன்படுத்தப்பட இருக்கிறது. பியுர் யுஐ-இல் புதிய ஐகான்கள், கஸ்டமைசேஷன் வசதியுடன் கிடைக்கின்றன. இவை குறிப்பிட்ட சாதனத்திற்கு ஏற்ற பயன்களை வழங்கும் என தெரிகிறது. இதில் உள்ள அனிமேஷன்கள் மென்மையாக காட்சியளிக்கின்றன. 

    • செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர் தற்போது பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன் என்ன தெரியுமா?
    • தனியார் செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் பேட்டி அளித்த மார்டின் கூப்பர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    மொபைல் போனை கண்டுபிடித்த முதல் நபர் தற்போது எந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகிறார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. செல்போன் தந்தை என்று அறியப்படும் 94 வயதான மார்டின் கூப்பர், உலகின் முதல் செல்போனை கண்டுபிடித்தவர், செல்போனில் முதல் அழைப்பை மேற்கொண்டவர் என்ற பெருமையை கொண்டிருக்கிறார்.

    தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மார்டின் கூப்பர் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார். இதில் தற்போது அவர் பயன்படுத்தி வரும் புதிய ஸ்மார்ட்போன், அதிநவீன மொபைல் போன் துறை பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

    அதன்படி மார்டின் கூப்பர் தற்போது முற்றிலும் புதிய ஐபோன், ஐபோன் 14 சீரிஸ் மாடலை பயன்படுத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்படும் முற்றிலும் புதிய ஐபோனினை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். புதிய போனினை தொடர்ச்சியாக பயன்படுத்த துவங்கும் முன், அதில் ரோட் டெஸ்ட் செய்கிறார்.

    புதிய ஐபோன் மட்டுமின்றி மார்டின் கூப்பர் ஆப்பிள் வாட்ச் ஒன்றையும் பயன்படுத்தி வருகிறார். தனது சாதனங்களை கொண்டு மின்னஞ்சல் பயன்படுத்துவது, யூடியூப் வீடியோக்களை பார்ப்பது, அன்றாட பணிகளை மேற்கொள்து மற்றும் காது கேட்கும் சாதனங்களை இயக்குவது உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருகிறார்.

    1928 டிசம்பர் மாத வாக்கில் பிறந்த மார்டின் கூப்பர், கொரிய போரில் அமெரிக்க ராணுவ அதிகாரியாக நீர்மூழ்கி கப்பலில் பணியாற்றி இருக்கிறார். பின் இந்த பணியை விட்டு வெளியேறிய மார்டின் கூப்பர் 1954 வாக்கில் மோட்டோரோலா நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். மோட்டோரோலா நிறுவனத்தில் மட்டும் 29 ஆண்டுகள் மார்டின் கூப்பர் பணியாற்றி வந்தார்.

    மோட்டோரோலா நிறுவனத்திலேயே 1973 வாக்கில், உலகின் முதல் மொபைல் போன்- மோட்டோரோலா டைனாடேக் 8000X மாடலை மார்டின் கூப்பர் உருவாக்கினார். இதை கொண்டு தான் உலகின் முதல் செல்போன் அழைப்பையும் மார்டின் கூப்பர் மேர்கொண்டார். 

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S24 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன.
    • புதிய கேலக்ஸி S24 சீரிஸ் 144Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல்.

    சாம்சங் நிறுவனத்தின் 2023 ஃபிளாக்ஷிப் சீரிஸ் - கேலக்ஸி S23 தலைசிறந்த அம்சங்களால் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சந்தையில் கிடைக்கும் அதிநவீன ஹார்டுவேர் கொண்டு உருவாக்கப்படு இருந்த கேலக்ஸி S23 சீரிஸ் இந்த பிரிவில் பிரபல மாடலாக உள்ளது. இந்த நிலையில், சாம்சங் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளை துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களில் முற்றிலும் புதிய ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர், அதிவேகமான ஸ்டோரேஜ் மற்றும் 144Hz டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. 2024 வாக்கில் சாம்சங் அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி S24 சீரிஸ், இந்த ஆண்டு வெளியான ஸ்மார்ட்போன்களை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும்.

     

    அந்த வகையில், இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படலாம். இந்த பிராசஸர் SM8650 எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸரை விட அதிக செயல்திறன் மற்றும் கூடுதல் அம்சங்களை இயக்கும் வசதி கொண்டிருக்கும்.

    144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே பேனல் அதிவேக கேமிங் அனுபவம், நேர்த்தியான யுஐ மற்றும் அதிவேக லோட் நேரம் என ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனுபவத்தை கேலக்ஸி S24 சீரிஸ் மாற்றியமைக்கும். புதிய கேலக்ஸி S24 சீரிசில் UFS 4.1 ஸ்டோரேஞ்ச் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க புதிய 200MP பிரைமரி கேமரா, கூடுதல் சென்சார்கள் வழங்கப்படலாம். இந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி S23 சீரிசில் இருந்ததை விட கேலக்ஸி S24 சீரிசில் அதிகளவு ஜூமிங் வசதி வழங்கப்படலாம்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடலுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த சிறப்பு சலுகை ஐபோன் 14 ரெட் நிற வேரியண்டிற்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14 மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய எண்ட்ரி லெவல் ஐபோன் மாடலை வாங்க நினைப்போருக்கு இந்த சலுகை அதிக பலனுள்ளதாக இருக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய எண்ட்ரி லெவல் ஐபோன் மாடலுக்கு ஏராளமான தள்ளுபடி மற்றும் சலுகைகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    சலுகையை பொருத்தவரை ஐபோன் 14 மாடலின் 128 ஜிபி விலை ரூ. 68 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. அறிமுகமான போது இதன் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ப்ளிப்கார்ட் தளத்தில் சமீபத்திய ஐபோன் மாடலுக்கு ரூ. 11 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    எனினும், இந்த சலுகை ஐபோன் 14 மாடலின் ரெட் நிற வேரியண்டிற்கு மட்டுமே பொருந்தும். ஐபோன் 14 ரெட் நிற வேரியண்ட் விலை ரூ. 72 ஆயிரம் ஆகும். இத்துடன் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் ஐபோன் 14 வாங்கும் போது ரூ. 4 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஐபோன் 14 அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன், ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP ட்ரூடெப்த் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏராளமான கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 மாடலில் கிராஷ் டிடெக்ஷன் மற்றும் எமர்ஜன்சி SOS அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • டெக்னோ மொபைல் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உற்பத்தி துவங்கி இருக்கிறது.
    • புதிய ஃபேண்டம் V ஃபோல்டு மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    டெக்னோ மொபைல் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது. மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ் டெக்னோ பிராண்டின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. புதிய ஃபேண்டம் V ஃபோல்டு மாடலின் உற்பத்தி நொய்டாவில் உள்ள ஆலையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்டிற்கு 24 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    பாப், ஸ்பார்க், போவா, கேமன் மற்றும் ஃபேண்டம் சீரிசின் கீழ் பல்வேறு மாடல்களில் சந்தை மற்றும் பிரிவு ஸ்மார்ட்போன்களில் முதல் முறை அம்சங்களை வழங்குவதில் டெக்னோ முன்னுரிமை அளித்து வருகிறது. மிட் முதல் பிரீமியம் பிரிவுகளில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய டெக்னோ திட்டமிட்டு வருகிறது.

     

    மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு ஆகும். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கஸ்டமைஸ் செய்யப்பட்டு, டூயல் சிம், டூயல் 5ஜி போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இதில் உள்ள பிராசஸர் 4 நானோமீட்டர் முறையில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. இது தலைசிறந்த திறன் மற்றும் குறைந்த மின்திறன் எடுத்துக் கொள்கிறது.

    டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு அம்சங்கள்:

    7.65 இன்ச் 2296x2000 பிக்சல் 2K+ 10 முதல் 120Hz LTPO AMOLED டிஸ்ப்ளே

    6.42 இன்ச் 1080x2550 பிக்சல் FHD+ 10 முதல் 120Hz LTPO AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்

    மாலி G710 MC10 GPU

    12 ஜிபி ரேம்

    256 ஜிபி, 512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஹைஒஎஸ் 13 ஃபோல்டு

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    50MP டெலிபோட்டோ கேமரா

    32MP வெளிப்புற செல்ஃபி கேமரா

    16MP உள்புற செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபேண்டம் V ஃபோல்டு ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ஏப்ரல் 11 ஆம் வெளியிட இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 77 ஆயிரத்து 777 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையில் பங்கேற்க ஏப்ரல் 12 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் நடைபெறும் விற்பனையில் கலந்து கொள்ளலாம். 

    • சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனின் புதிய மெமரி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஏற்கனவே ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி என இருவித ரேம் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டது.

    ரெட்மி நோட் 12 4ஜி, ரெட்மி 12C ஸ்மார்ட்போன்களின் வரிசையில், ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், ரெட்மி நோட்12 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது மூன்றுவித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கூடுதல் மெமரி தவிர புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனின் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     

    விலையை பொருத்தவரை ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 21 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 12 5ஜி மாடலில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 13MP செல்ஃபி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13 ஒஎஸ் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது.

     

    ரெட்மி நோட் 12 5ஜி அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ GPU

    4 ஜிபி, 6 ஜிபி LPDDR4X ரேம்

    128 ஜிபி UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    48MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    13MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • ஏசர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
    • 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் 4K ரெசல்யுஷன் கொண்டுள்ளன.

    ஏசர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய W சீரிஸ் 4K அல்ட்ரா HD QLED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் H மற்றும் S சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது புதிய W சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஏசர் W சீரிஸ் 4K அல்ட்ரா HD QLED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களில் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன அம்சங்கள் உள்ளது. 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் 3840x2160 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளன.

     

    இதில் உள்ள QLED பேனல் கச்சிதமான மற்றும் பிரகாசமான நிறங்களை வெளிப்படுத்துகிறது. ஏசர் W சீரிஸ் மாடல்கள் அசத்தலான டிசைன், ஃபிரேம்லெஸ், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே மூலம் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபுல் மோஷன் மெல்லிய வால் மவுண்ட் வழங்கப்படுகிறது. இது மெல்லிய தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

    புதிய ஏசர் டிவிக்களின் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக சூப்பர் ஆண்டி-கிளேர் தொழில்நுட்பம் உள்ளது. இது அதிக வெளிச்சமுள்ள பகுதிகளிலும் காட்சிகளை தெளிவாக பார்க்க செய்கிறது. இத்துடன் குவாண்டம் பிக்சர் தொழில்நுட்பம், 4K HDR, HDR 10+ HLG, டால்பி விஷன், 100 சதவீத கலர் வால்யூம் கொண்ட QLED வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த டிவிக்களில் 30 வாட் ஆரல் சவுண்ட் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு டிவி 11, கூகுள் ஆப்ஸ், ஃபார் ஃபீல்டு மைக், மோஷன் சென்சார் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி கொண்ட ரிமோட் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர 64-பிட் குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியுடன் மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஏசர் W சீரிஸ் 4K QLED டிவி 55 இன்ச் மாடல் ரூ. 69 ஆயிரத்து 999 என துவங்குகிறது. ஏசர் W சீரிஸ் 4K QLED டிவி 65 இன்ச் மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு புதிய டிவி மாடல்களின் விற்பனையும் ப்ளிப்கார்ட், அமேசான் உள்பட முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமராவுடன் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்திய சந்தையில் புதிய ரெட்மி 12C மற்றும் ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ரெட்மி 12C ஸ்மமார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 12C மாடலில் 6.71 இன்ச் IPS LCD பேனல், HD+ ரெசல்யுஷன், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த MIUI 13, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 5 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார், 50MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், எல்இடி ஃபிளாஷ் மற்றும் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

     

    ரெட்மி 12C அம்சங்கள்:

    6.71 இன்ச் IPS LCD பேனல், HD+ ரெசல்யுஷன்

    ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த MIUI 13

    மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்

    அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 5 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம்

    128 ஜிபி மெமரி

    ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார்

    50MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், எல்இடி ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி

    3.5mm ஹெட்போன் ஜாக்

    ரெட்மி நோட் 12 4ஜி மாடலில் 6.67 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 பிராசஸர், அட்ரினோ 610 GPU, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரெட்மி நோட் 12 4ஜி அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 பிராசஸர், அட்ரினோ 610 GPU

    8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    8MP அல்ட்ரா வைடு லென்ஸ்

    2MP மேக்ரோ கேமரா

    13MP செல்ஃபி கேமரா

    வைபை, ப்லூடூத், 3.5mm ஆடியோ ஜாக்

    யுஎஸ்பி டைப் சி

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இந்திய சந்தையில் புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மால் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிராஃபைட் கிரே, ஓசன் புளூ, மின்ட் கிரீன் மற்றும் லாவெண்டர் பர்பில் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்குகிறது.

    ரெட்மி நோட் 12 4ஜி மாடலின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லூனார் பிளாக், ஃபிராஸ்டெட் ஐஸ் புளூ மற்றும் சன்ரைஸ் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனையும் ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்குகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது.
    • புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 மாடல் ஒன்பிளஸ் ஏஸ் 2V மாடலின் ரிபிராண்ட் செய்யப்பட்ட வெர்ஷன் என தெரிகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நார்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனினை ஜூன் முதல் ஜூலை மாதத்திற்குள் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டியுவி ரெயின்லாந்து, சீனா தர சான்று மையம் (சிகியூசி), ஐஎம்டிஏ சிங்கப்பூர், இந்திய பிஐஎஸ் போன்ற சான்றுகளை பெற்று இருக்கிறது. இதில் கடைசி சான்று இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் வகையில் உள்ளது.

    சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் ஏஸ் 2V மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. அந்த வகையில், புதிய ஒன்பிளஸ் ஏஸ் 2V மாடல் ஒன்பிளஸ் நார்ட் 3 பெயரில் ரிபிராண்டு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 மாடலில் நார்ட் 2 ஸ்மார்ட்போனில் இருந்ததை விட மேம்பட்ட டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த சிப்செட் வழங்கப்படுகிறது.

     

    டியுவி ரெயின்லாந்து சான்றின் படி ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் CPH2491 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பிஐஎஸ் சான்றிலும் புதிய நார்ட் 3 ஸ்மார்ட்போன் CPH எனும் மாடல் நம்பரையே கொண்டிருக்கிறது. ஐஎம்டிஏ சிங்கப்பூரில் உள்ள ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் CPH2493 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதோடு ஒன்பிளஸ் நார்ட் 3 5ஜி எனும் பெயரை கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, ப்ளூடூத், வைபை மற்றும் என்எப்சி போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே மாடல் சிகியூசி சான்றளிக்கும் தளத்தில் 80 வாட் சார்ஜர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிஸ் நார்ட் 3 5ஜி மாடலில் 6.72 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    ×