search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் மறியல்"

    • சந்தையை சுற்றியும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், சந்தைக்குள் பொதுமக்கள் வருவதில்லை.
    • திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் தென்னம்பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் சந்தை பகுதிகளில் ரோட்டோரம் வியாபாரிகள் காய்கறி கடைகளை அமைக்க கூடாது எனவும், இதனை கண்டித்தும் இன்று அதிகாலை 4மணி முதல் உழவர் சந்தையின் கேட்டை மூடிவிட்டு தென்னம்பாளையம் சந்தை முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    தென்னம்பாளையம் உழவர் சந்தையில் முறையாக பதிவு செய்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் சந்தையை சுற்றியும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், சந்தைக்குள் பொதுமக்கள் வருவதில்லை.

    சாலையோரம் இருக்கும் கடைகளில் காய்கறி வாங்கி விட்டு செல்கிறார்கள். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் போது 2 நாட்கள் கடைகள் அமைக்காமல் இருக்கிறார்கள். இதன் பின்னர் மீண்டும் கடைகளை அமைத்து வியாபாரத்தை தொடங்கி வருகிறார்கள். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சாலையோர வியாபாரிகள் கூறுகையில், உழவர் சந்தைக்கு 100 மீட்டருக்கு அப்பால் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் , விவசாயிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் கடைகள் அமைத்து வரக்கூடிய நிலையில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலும் , மோதல் சூழ்நிலையை உருவாக்கி சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகள் செயல்படுவதாக சாலையோர வியாபாரிகள் குற்றம் சாட்டினர். இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

    • நெல்லினை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டுவந்தனர்.
    • விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    விழுப்புரம்:

    செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக நெல் அறுவடை தொடங்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லினை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டுவந்தனர். அதன்படி நேற்று 4,600 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆனால் அந்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. இது குறித்து கமிட்டி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலை செய்கின்ற எடை போடும், சுமை தூக்கும் தொழிலாளர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூட்டை மாற்ற மாட்டோம் என பணிகளை புறக்கணித்து உள்ளனர். இதனால் நேற்று கொண்டு வரப்பட்ட 4600 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தினமும் மழை பெய்து வருவதாலும், ஈ-நாம் திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாலும் இப்பிரச்சனையில் சமூக தீர்வு ஏற்படும் வரை தங்களது விளைபொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு நேற்று இரவு தான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் எதிரில் வைக்கப்பட்டது. இதனை அறியாத விவசாயிகள் கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலான நெல் மூட்டைகளை விற்பனைக்கு இன்றும் கொண்டு வந்திருந்தனர். அதிகாலையில் வந்த டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்டவைகளை உள்ளே அனுமதிக்காததால் அவர்கள் இதனை கண்டித்து நெல்மூட்டை கொண்டு வந்த வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் செஞ்சி - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து மற்றும் செஞ்சி போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கமிட்டி கேட்டை திறந்து நெல் மூட்டைகளை உள்ளே அனுமதித்ததால் சாலை மறியல் முடிவுக்கு வந்தது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த சாலை மறியலால் ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்தன. இதனைத் தொடர்ந்து இன்று கொள்முதல் செய்யப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை. இது போன்ற செயல்கள் மறைமுகமாக வெளி வியாபாரிகளை ஊக்குவிக்கும் செயலாக உள்ளதென விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • நெல் கொள்முதல் நிலையத்தினை திறக்க வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சாலைமறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் அடுத்த ஆலஞ்சேரி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ஆலஞ்சேரி, தோட்டநாவல், ரெட்டமங்கலம், மலைக்காலனி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல் பயிரினை விற்பனை செய்து வருகின்றனர்.

    தற்போது நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என நம்பிக்கையுடன் விவசாயிகள் ஆலஞ்சேரி கிராமத்தில் தங்களது நெல் பயிரினை கொட்டி வைத்து அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்காக காத்திருந்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை திறக்க வலியுறுத்தி ஆலஞ்சேரி- நெல்வாய் கூட்ரோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சாலைமறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை
    • டிரான்ஸ்பார்மர் பழுதால் மின்சார விநியோகம் துண்டிப்பு

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் கிராமத்தில் திப்பம்மாள் நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதியில் டிரான்ஸ்பாரம் ஒன்று கடந்த 20 நாட்களாக பழுதானதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீர் இல்லாமல் முற்றிலும் காய்ந்து போகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    மறியல்

    மேலும் தற்போது கோடை காலம் என்பதால் 20 நாட்களாக மின்சாரம் இல்லாத காரணத்தால் தண்ணீர் இல்லாமல் நெல் பயிர்கள் கத்திரிக்காய், செடிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் முற்றிலும் காய்ந்து போனதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    மேலும் நகைகளை அடகு வைத்து விவசாயிகள் விவசாயம் செய்து வரும் நிலையில் 20 நாட்களாக பழுதான டிரான்ஸ்பார்மரை மின்சாரத்துறை அதிகாரிகள் சரி செய்யாமல் தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் வேதனையுடன் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் மின்சாரத்துறை அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சரி செய்யவில்லை என்றால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட போவதாக விவசாயிகள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • விவசாயிகளின் திடீர் போராட்டத்தால் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது.

    கடந்த ஆண்டு கரும்பு, பச்சரிசி, பாசிபருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், மஞ்சள் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, ரவை, கோதுமை மற்றும் மஞ்சப்பை என 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

    கடந்த ஆண்டை போலவே குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவது குறித்து அரசு அறிவிக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தி மேலூர் பகுதி விவசாயிகள் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் இன்று திடீரென மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகளில் பலர் கரும்புடன் போராட்டத்தில் பங்கேற்றனர். விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தால் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    செங்கம்:

    செங்கம் டவுன் பகுதியில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் செங்கத்தை அடுத்த மண்மலை பகுதியில் இருந்து குயிலம் கூட்ரோடு வரை புறவழிச்சாலை திட்டத்திற்கு விவசாயம் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருவண்ணாமலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்கம் போலீசார் சம் பவ இடத்துக்கு வந்து மறிய லில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×