search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகவேந்திரா"

    • முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. கடந்த 2-ம் தேதி வெளியிட்டது.
    • ஷிமோகாவில் கீதா சிவராஜ்குமார் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

    பெங்களூரு:

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்மந்திரி பங்காரப்பாவின் மகளும், பிரபல நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.


    இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி பா.ஜ.க. 195 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பிரதமர் மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், பா.ஜ.க. இன்று 72 பேர் கொண்ட 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மகன் ராகவேந்திரா போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் இரு முன்னாள் முதல் மந்திரிகளின் வாரிசுகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • மகாதானபுரம் ராகவேந்திரா பிருந்தா வனத்தில் 26-வது ஆண்டு ஆராதனை விழா நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. 14-ந்தேதி வரை 3 நாட்கள் விழா நடக்கிறது.
    • விழா நாட்களில் காலையில் அபிஷேக ஆராதனை மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனையும் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தில் காரியசித்தி ஸ்ரீ ராகவேந் திரா மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது.

    இங்கு ஸ்ரீராகவேந்தி ரரின் 351-வது ஆராதனை மற்றும் மகாதானபுரம் ராகவேந்திரா பிருந்தா வனத்தில் 26-வது ஆண்டு ஆராதனை விழா நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. 14-ந்தேதி வரை 3 நாட்கள் விழா நடக்கிறது.

    விழா நாட்களில் காலையில் அபிஷேக ஆராதனை மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனையும் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. 6.30 மணிக்கு ஸ்ரீராகவேந்திரா பக்தர்கள் வழங்கும் பக்தி பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு ஸ்வஸ்தி தீபா ராதனை நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மகாதானபுரம் காரியசித்தி ஸ்ரீ ராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனத்தின் தலைவர் ஏ.ராகவேந்திரா மோகன் மற்றும் ராகவேந்திரா பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    • என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டு விட்டேன்.
    • சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷத்தில் 10% கூட எனக்கு கிடைக்கவில்லை.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அதன்பின்னர் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாவது:

    எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும், எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ஸ்ரீராகவேந்திரர், பாபா படங்கள்தான். இந்த இரு படங்கள் வந்த பின்னர் தான் அனைவருக்கும் இவர்கள் இருவரையும் தெரிய வந்தது. எனக்கு மிகவும் சந்தோஷமாக விஷயம், என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் நான் இன்னும் நடிகராக இருக்கிறேன்.

    இமயமலையில் இயற்கையாகவே அமைந்துள்ள குகைகள் சொர்க்கம் போல் காட்சியளிக்கும்.குகைகளில் சில மூலிகைகள் கிடைக்கும். அதனை சாப்பிட்டதால் ஒரு வாரத்திற்கான புத்துணர்ச்சி அதிகமாக கிடைக்கும். கங்கை நதி ஏன் புனிதம் என்றால், மூலிகைகள் எல்லாம் அதில் கலக்கிறது. அங்கே உள்ள சித்தர்கள் அதில் குளிப்பதால் அந்த நதி பவித்ரமானது.

    சிறுவயதில் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காப்பை விடவும், வயது முதிர்ந்த பின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சொத்துகளை விட்டுச் செல்வதை விடவும், நோயாளியாக இருந்திடக் கூடாது. இது அனைவருக்கும் துன்பம்.

    அதேபோல் நம் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல உபதேசங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதை கேட்க வேண்டும். நல்ல சிந்தனைகளுக்காக புத்தகங்களை வாசிக்க வேண்டும். மனிதர்கள் கடந்த காலங்களையும், எதிர்காலத்தையும் நினைத்து கவலைக் கொள்வர். ஆனால் குழந்தைகள் அப்படியல்ல. வலிகளில் இருந்து வெளிவர நிகழ் காலத்தில் சிந்தனையை வைக்க வேண்டும்.

    வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.

    இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

    ஸ்ரீ ராகவேந்திரா சரணம் என்று சொல்லி மனம் உருகி வழிபாடு செய்பவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நாடெங்கும் இருந்து வரும் பக்தர்களுக்கு ராகவேந்திரர் தனது பிருந்தாவனத்தில் யோக சமாதி நிலையில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ ராகவேந்திரா என்ற சொல்லுக்கே நமக்கு கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.

    ஸ்ரீ - ஸ்ரீ பிரஹலாதன்
    ரா - ராமரை நேரில் பார்த்தவர்
    க - கண்கண்ட தெய்வம்
    வே- வேண்டியதை தருபவர்
    ந் - மந்திராலய மஹான்
    தி - திருப்பதி வேங்கடாஜலபதியின் அருளை பெற்றவர்
    ரா - மஹான்களில் ராஜாதி ராஜா

    என் மனம் வருந்துகிறது என்று சொன்னபோது "ஸ்ரீ ராகவேந்திரா" உங்களது நாமம் என்னை அமைதிப்படுத்துகிறது. 
    ×