search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே ராகவேந்திரா பிருந்தாவனத்தில் 351-வது ஆராதனை விழா - நாளை மறுநாள் தொடங்குகிறது
    X

    கன்னியாகுமரி அருகே ராகவேந்திரா பிருந்தாவனத்தில் 351-வது ஆராதனை விழா - நாளை மறுநாள் தொடங்குகிறது

    • மகாதானபுரம் ராகவேந்திரா பிருந்தா வனத்தில் 26-வது ஆண்டு ஆராதனை விழா நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. 14-ந்தேதி வரை 3 நாட்கள் விழா நடக்கிறது.
    • விழா நாட்களில் காலையில் அபிஷேக ஆராதனை மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனையும் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தில் காரியசித்தி ஸ்ரீ ராகவேந் திரா மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது.

    இங்கு ஸ்ரீராகவேந்தி ரரின் 351-வது ஆராதனை மற்றும் மகாதானபுரம் ராகவேந்திரா பிருந்தா வனத்தில் 26-வது ஆண்டு ஆராதனை விழா நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. 14-ந்தேதி வரை 3 நாட்கள் விழா நடக்கிறது.

    விழா நாட்களில் காலையில் அபிஷேக ஆராதனை மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனையும் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. 6.30 மணிக்கு ஸ்ரீராகவேந்திரா பக்தர்கள் வழங்கும் பக்தி பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு ஸ்வஸ்தி தீபா ராதனை நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மகாதானபுரம் காரியசித்தி ஸ்ரீ ராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனத்தின் தலைவர் ஏ.ராகவேந்திரா மோகன் மற்றும் ராகவேந்திரா பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×