search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன்"

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சுமார் 3.75 லட்சம் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். #InternationalYogaDay2018 #Yoga #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பிரதமராக மோடி பதவியேற்ற பின்பு யோகா பயிற்சி மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகமானது. அதன் பிறகு சர்வதேச யோகா தினம் உருவாக்கப்பட்டு உலக நாடுகள் அனைத்தும் யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் சர்வதேச யோகா தினமான இன்று குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி நடந்தது.

    குமரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள் என 460-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இன்று யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இப்பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சுமார் 3¾ லட்சம் பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். பள்ளி, கல்லூரிகளின் வரவேற்பு அறை, விளையாட்டு மைதானம், கருத்தரங்கு கூடம் ஆகியவற்றில் இப்பயிற்சி நடைபெற்றது.

    நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடந்த யோகா பயிற்சியில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார். இதனை ஈஷா யோகா மையத்தினர் நடத்தினர். இதில் ஈஷா யோகா மையத்தின் யோகேந்திரன், கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-



    இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு யோகா பயிற்சியும், அதன் பலனும் உலக நாடுகள் முழுவதும் பரவியது. யோகா மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. இது மனதிற்கும், உடலுக்கும் தெம்பு தரும் பயிற்சி ஆகும். இதனை மேற்கொண்டால் மக்கள் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழலாம்.

    இந்தியாவில் சித்தர்களும், ரிஷிகளும் மேற்கொண்ட இந்த பயிற்சி இன்று உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பெருமை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பட வேண்டுமானால் நாட்டு மக்களின் ஆரோக்கியம் முக்கியம். அதனை யோகா பயிற்சி நமக்கு அளிக்கிறது.

    சிறிய நாடான மொராக்கோவில் சுமார் 36 ஆயிரம் மக்களே வசிக்கிறார்கள். நாகர்கோவில் நகரை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு. இங்குள்ள மக்கள் அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுபோல அர்ஜென்டினா நாட்டிலும் மக்கள் யோகா பயிற்சி செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். 170 நாடுகளில் யோகா பயிற்சி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் இன்று யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கலந்து கொண்டார். அவருடன் கல்லூரி டீன் (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள், நர்சுகள், பாரா மெடிக்கல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த யோகா பயிற்சியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார். இதில், போலீஸ் அதிகாரிகள், மகளிர் போலீசார் அனைவரும் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இதனை பிரம்மகுமாரிகள் அமைப்பு செய்திருந்தது. #InternationalYogaDay2018 #Yoga #PonRadhakrishnan
    திமுக மற்றும் காங்கிரஸ் தனித்து நின்று தேர்தலை சந்திக்க தயாரா? என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார். #PonRadhakrishnan #DMK #Congress

    சென்னை:

    பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. மிக மோசமான ஆட்சி என்றும், வரும் தேர்தலில் ராகுல் ஆட்சியை பிடிப்பார். தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜனதா வெற்றி பெற முடியாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

    இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    ஏறக்குறைய 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்து இருக்கிறது. இந்திரா ஆட்சி காலம் நெருக்கடி காலம். மன்மோகன்சிங் ஆட்சி காலம் ஊழல் நிறைந்த காலம் என்பதுதானே உண்மை.

    காமராஜர் காலத்துக்கு பிறகு ஒரு சதவீத செல்வாக்கை கூட வளர்க்க முடியவில்லையே. 40 சதவீதமாக இருந்த செல்வாக்கு 4 சதவீதமாகவது இருக்குமா? என்ற நிலையில்தானே இருக்கிறது. என்ன காரணம்? நீங்கள் சாதனை செய்து இருந்தால் மக்கள் உங்களை தோளில் தூக்கி வைத்து ஆடி இருப்பார்களே. அடுத்தவர் தோளில் ஏற உங்களை அலைய விட்டிருக்க மாட்டார்களே.

    50 ஆண்டுகளாக செய்து வைத்த தவறுகளை சரி செய்து வருகிறோம். 4 ஆண்டில் என்னென்ன சாதித்தோம் என்பதை இரண்டு இரண்டு வரிகளாக 17 பக்கங்களில் அச்சிட்டு அத்தனை எம்.பி.க்களிடமும் மோடி தந்திருக்கிறார். இந்த துணிச்சல் அவரிடம் இருக்கிறது. இதை மக்களிடம் விளக்குவோம். மக்கள் பதில் சொல்வர்கள்.


    காங்கிரஸ் செய்த தவறுகளையும், பொருளாதார சுமைகளையும் சீர்படுத்தி வருகிறோம். எங்காவது ஊழல் நடந்தது என்று சுட்டிக்காட்ட முடியுமா?

    ராகுலுக்கு புகழ்பாடி இருப்பதுபோல் உருவகப்படுத்தி எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் எங்கள் செல்வாக்கைப் பற்றி பேசுவதற்கு முன்பு உங்கள் நிலைமைகளை யோசித்து பாருங்கள். யாருடைய தோளிலாவது ஏறினால் தான் நடக்க முடியும் என்ற பரிதாப நிலையில்தானே காங்கிரசும், தி.மு.க.வும் இருக்கிறது.

    சவாரி குதிரையை மாற்றக்கூடிய அல்லது சுமக்கும் தோள்களை மாற்றக்கூடிய சிந்தனையில்தானே திருநாவுக்கரசர் இருக்கிறார்.

    நாங்கள் சவால்விட்டு சொல்கிறோம். தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. எல்லா கட்சிகளும் தனித்து மோதிப்பார்க்க தயாரா?

    அத்தனை தவறுகளையும் செய்து வைத்து பழியை எங்கள் மீது சுமத்த பார்க்கிறீர்கள். மக்களும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

    தூத்துக்குடியில் 13 உயிர்கள் பலியாக யார் காரணம்? செத்தாலும் விடாது கருப்பு என்பது போல தி.மு.க.வும், காங்கிரசும் செய்து வைத்த துரோகங்கள்தான் இப்படி மக்களை வதைக்கிறது.


    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்தியில் சம்பந்தப்பட்ட துறைகளில் பொறுப்பு வகித்த மன்மோகன் சிங், அ.ராசா, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் 5 வி‌ஷயங்களில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். முதலில் அதற்கு பதில் சொல்லட்டும். 13 பேர் பலியாக காரணமாகி விட்டோமே என்று வருந்தி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

    தினமும் 390 டன் காப்பர் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் 900 டன் உற்பத்தி செய்யப்பட்டது. எப்படி ஆண்டுக்கு 70 ஆயிரம் டன் உற்பத்திக்கு அனுமதித்து விட்டு 1 லட்சத்து 63 ஆயிரம் டன் உற்பத்தி செய்ய அனுமதித்தது யார்? அதை கண்டு கொள்ளாமல் இருந்தது யார்? அதற்கு பதில் சொல்லுங்கள்.

    நண்பர் திருமாவளவன் பா.ஜனதா ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் ரூ.15 கோடி நன்கொடை பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதுபற்றி எனக்கு தெரியாது.

    ஆனால் ஒருவேளை பெற்றிருந்தாலும் அது அவரது வார்த்தைப்படி தேர்தல் நன்கொடைதானே. காங்கிரசை போல் கையூட்டு பெறவில்லையே. கையூட்டு வாங்கி மக்களுக்கு துரோகம் செய்ய யாரையும் அனுமதிக்க வில்லையே.

    ஆனால் நான் துணிச்சலாக சொல்வேன் 1998 தேர்தல் காலத்தில் எனக்கு கொடுத்தனுப்பிய தேர்தல் நிதியை திருப்பி அனுப்பியவன் நான்.

    ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத் தோடு கூட்டு சேர்ந்து வரும் இந்த கட்சிகளின் முகமூடி தேர்தல் நேரத்தில் கிழிந்து போகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #DMK #Congress

    சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகரை சந்தித்தேன் என்று விழுப்புரத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #SVeShekher #BJP #PonRadhakrishnan
    விழுப்புரம்:

    நடிகர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் தனது பேஸ்புக்கில் பெண் பத்திரிகையாளர் குறித்து தவறாக சித்தரித்து கருத்து வெளியிட்டிருந்தார். அவரின் கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ்.வி.சேகர் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதையொட்டி அவரை கைது செய்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர். கைது நடவடிக்கைக்கு பயந்து எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டார். அவர் தலைமறைவாகி 24 நாட்கள் ஆகிறது.

    இந்நிலையில் சென்னை தி.நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பதுபோல் வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் விழுப்புரத்துக்கு இன்று காலை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் எஸ்.வி.சேகரை சந்தித்தீர்களா? அவரை ஏன் இன்னும் போலீசார் கைது செய்யவில்லையே என்று நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-


    நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றேன். அப்போது எஸ்.வி.சேகர் வெளியே வந்தார். அப்போது அவர் என்னை பார்த்து கும்பிட்டார்.

    எஸ்.வி.சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை. அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று போலீசாரிடம் கேளுங்கள்.

    கேள்வி:- ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என கூறப்படுகிறதே?

    பதில்:- பாரதிய ஜனதா எந்தவித கட்சியுடனும் கூட்டணிக்காக ஏங்கவில்லை.

    கேள்வி:- கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்படுமா?

    பதில்:-கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்படி ஏற்பட்டால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SVeShekher #BJP #PonRadhakrishnan
    ×