search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுத்துறைகள் வேலை நிறுத்தம்"

    புதுவையில் தமிழக அரசு பஸ் மீது மர்ம கும்பல் கற்களை வீசிவிட்டு தப்பி ஓடினர். அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. #Bharatbandh
    புதுச்சேரி:

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. அதே வேளையில் தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

    அதுபோல் இன்று காலை 7.30 மணியளவில் புதுவையில் இருந்து தமிழக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றது.

    புதுவை- கடலூர் சாலையில் நைனார் மண்டபத்தில் சென்றபோது, ஒரு மர்ம கும்பல் அந்த பஸ் மீது சரமாரியாக கற்களை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டது.

    இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.

    இதையடுத்து அந்த பஸ் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பஸ் மீது கற்களை வீசிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Bharatbandh

    ×