என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் தமிழக அரசு பஸ் மீது கல்வீச்சு
Byமாலை மலர்8 Jan 2019 7:41 AM GMT (Updated: 8 Jan 2019 7:41 AM GMT)
புதுவையில் தமிழக அரசு பஸ் மீது மர்ம கும்பல் கற்களை வீசிவிட்டு தப்பி ஓடினர். அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. #Bharatbandh
புதுச்சேரி:
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. அதே வேளையில் தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
அதுபோல் இன்று காலை 7.30 மணியளவில் புதுவையில் இருந்து தமிழக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றது.
புதுவை- கடலூர் சாலையில் நைனார் மண்டபத்தில் சென்றபோது, ஒரு மர்ம கும்பல் அந்த பஸ் மீது சரமாரியாக கற்களை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டது.
இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.
இதையடுத்து அந்த பஸ் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பஸ் மீது கற்களை வீசிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Bharatbandh
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. அதே வேளையில் தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
அதுபோல் இன்று காலை 7.30 மணியளவில் புதுவையில் இருந்து தமிழக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றது.
புதுவை- கடலூர் சாலையில் நைனார் மண்டபத்தில் சென்றபோது, ஒரு மர்ம கும்பல் அந்த பஸ் மீது சரமாரியாக கற்களை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டது.
இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.
இதையடுத்து அந்த பஸ் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பஸ் மீது கற்களை வீசிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Bharatbandh
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X