search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்டிக்கடை"

    • போலீசார் சோதனையில் சிக்கினார்
    • 520 பாட்டில்களை பறிமுதல்

    காவேரிப்பாக்கம்:

    ஒச்சேரி அருகே மாமண்டூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பதாக அவளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று அவளூர் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் அரசு மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த, கடையின் உரிமையாளரான மாமண்டூரை சேர்ந்த குட்டி என்பவரை கைது செய்தனர். மேலும் ரூ.67 ஆயிரம் மதிப்பிலான 520 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • ராஜபாளையம் அருகே பெட்டிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • என்ன காரணத்திற்காக வீசிச்சென்றனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் முடங்கியார்ரோடு, பி.எஸ்.கே.மாலையாபுரம் பகுதியை சேர்ந்தவர் நீராசிலிங்கம் (வயது40). தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்துள்ளார்.

    நேற்று இரவு பெட்டிக்கடையை பூட்டி விட்டு தூங்கச்சென்றார். நள்ளிரவில் வெடி சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தார். அப்போது பெட்டிக்கடை முன்புறம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியு டன் தீயை அணைத்தார்.

    பின்னர் அங்கு பார்த்த போது பாட்டிலில் திரி பொருத்தப்பட்டு கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்து பெட்டிக்கடை மீது வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் நீராசிலிங்கம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் யார்? என்ன காரணத்திற்காக வீசிச்சென்றனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்டிக்கடையில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் 

    மதுரை மாவட்டம் சிந்துபட்டியை அடுத்துள்ள கட்டத்தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 46). இவர் அதேபகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பெட்டிக்கடையை உடைத்த மர்ம நபர்கள் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பெட்டிக்கடையில் கைவரிசை காட்டியது அதே பகுதியை சேர்ந்த அஜீத் (25), விக்னேஷ் (23),தினேஷ் (21) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • அதிர்ச்சி அடைந்த அவர் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட்டார்
    • பெட்டிக்கடையை மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்த 5 பேர் சேர்ந்து ஒரு டெம்போவில் ஏற்றி சென்றது

    கன்னியாகுமரி :

    கொல்லங்கோட்டை அடுத்த மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 55). இவரது மனைவி இந்திரா மேபல் (53). இவர் மஞ்சத்தோப்பு பகுதியில் சுமார் 1 வருடமாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கடையை திறப்பதற்காக வழக்கம் போல் நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தார். அப்போது அவரது கடையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட்டார். அதில், சுமார் 12.30 மணிக்கு இந்த பெட்டிக்கடையை மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்த 5 பேர் சேர்ந்து ஒரு டெம்போவில் ஏற்றி சென்றது தெரியவந்தது. இது குறித்து இந்திரா மேபல் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
    • 130 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தன

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஈஞ்சார் மேற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 58). இவர் ஈஞ்சார் விலக்கு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    அந்தப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் இவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது 137 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    அங்கிருந்து புகையிலை பாக்கெட்டுகள், ரூ.5 ஆயிரத்து 300-யை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    சிவகாசி அருகேயுள்ள முருகையாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சிவகாசி-விஸ்வநத்தம் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் போலீசார் சோதனையிட்டபோது, 130 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சந்திரசேகரன் பாரதியார் சாலையில், பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
    • கல்லாவில் வைத்திருந்த ரூ.1000 மதிப்பிலான சில்லறை காசுகள் திருட்டு போய் இருந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் தலத்தெரு பிள்ளையார் கோவில் மேட்டில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர், பாரதியார் சாலையில், பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம் போல் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கடை உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த ரூ.1000 மதிப்பிலான சில்லறை காசுகள் திருட்டு போய் இருந்தது. இது குறித்து, சந்திரசேகரன், காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கல்லாவில் காசுகளை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • ஆணைக்குளம் பஸ் நிறுத்தத்தில் பெட்டிகடை வைத்துள்ளார்.
    • பெட்டி கடை மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் விசாரித்து தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் திருச்சுழி ஆணைக்குளம் பஸ் நிறுத்தத்தில் பெட்டிகடை வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்டிகடைக்கும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த முருகேசனின் மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்து விட்டு சென்றனர். இதில் பெட்டிகடை, மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வீரசோழன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×