பெட்டி கடை- மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

ஆணைக்குளம் பஸ் நிறுத்தத்தில் பெட்டிகடை வைத்துள்ளார்.பெட்டி கடை மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் விசாரித்து தேடி வருகின்றனர்.
பெட்டி கடை- மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
Published on

விருதுநகர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் திருச்சுழி ஆணைக்குளம் பஸ் நிறுத்தத்தில் பெட்டிகடை வைத்துள்ளார்.

சம்பவத்தன்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்டிகடைக்கும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த முருகேசனின் மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்து விட்டு சென்றனர். இதில் பெட்டிகடை, மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வீரசோழன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com