என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிற்படுத்தப்பட்டோர்"
- உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
- குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாடு தொடர்பாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட மேற்கண்ட இனமக்கள் (ஆண்/பெண்) 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும். அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தையல் தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினர், மிகப்பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த (ஆண்/ பெண்) மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக கன்னியாகுமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்கள் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்து பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்படுத்தப் பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம் சென்னைக்கு பரிந்துரை செய்யப்படும்.
பயனாளிகளுக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகளாக குழு உறுப்பினர்கள் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்டு ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைதளத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
தென்காசி:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் காஜா முகைதீன் தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளதாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
நடப்பு நிதியாண்டில் டாப்செட்கோ கழகம் மூலம் தனிநபர் கடன், கறவை மாட்டு கடன், ஆழ்துளைக் கிணறு அமைக்க கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட குறியீடுகளை எய்துவது குறித்து டாப்செட்கோ தலைவர் அறிவுரைகள் வழங்கினார்.
கூட்டத்தில் டாப்செட்கோ தலைவர் 8 பயனாளிகளுக்கு ரூ.43,832 மதிப்பில் இலவச தையல் எந்திரங்களை வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் லட்சுமணக்குமார் மற்றும் துணைப்பதிவாளர் கார்த்திக் கவுதம், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர், திட்ட மேலாளர் ராமச்சந்திரன், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் வானதி மற்றும் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்