search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாப் மந்திரி"

    • வக்கீலான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில் கல்வி மந்திரியாக உள்ளார்.
    • ஹர்ஜோத் சிங் பெயின்சுக்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ஜோதி யாதவுடன் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ். வக்கீலான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில் கல்வி மந்திரியாக உள்ளார். 32 வயதான ஹர்ஜோத் சிங் பெயின்சுக்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ஜோதி யாதவுடன் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவில் நேற்று திருமணம் நடந்தது. அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த ஜோதி யாதவ் தற்போது பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ்.
    • மணப்பெண்ணான ஜோதி யாதவ், பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்

    சண்டிகார்:

    பஞ்சாப் மாநிலம், ரூப்கர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ். தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில் கல்வி மந்திரியாக உள்ளார். அங்குள்ள கம்பீர்பூர் கிராமத்தை சேர்ந்த 32 வயதான பெயின்ஸ் வக்கீல் ஆவார். கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சாஹ்னேவால் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி ஆனார். ஆம் ஆத்மியின் இளைஞர் பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். இவருக்கு தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணப்பெண்ணான ஜோதி யாதவ், பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார். இவர் அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இம்மாத இறுதியில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    1988-ம் ஆண்டு சாலையில் சண்டையிட்டு முதியவரை தாக்கிய வழக்கில் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத்சிங் சித்து குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. #NavjotSinghSidhu
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து, கடந்த 1988-ம் ஆண்டு
    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள சாலையில் குர்னம் சிங், என்பவருடன் ஏற்பட்ட சண்டையில், அவரது தலையில், நவ்ஜோத் சிங் சித்து பலமாக தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த, குர்னம் சிங், சில நாட்களுக்கு பின் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த பாட்டியாலா கோர்ட், சித்துவை விடுவித்தது. இருப்பினும், மேல்முறையீடு செய்யப்பட்டதில் அரியானா ஐகோர்ட் 2007-ம் ஆண்டு, சித்துவை குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும்,ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து சித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், எஸ்.கே கவுல் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கப்பட்டதாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து சித்து விடுவிக்கப்பட்டார்.

    அதே வேளையில், கொடூரமாக தாக்கப்பட்டதாக அவர் மீது உள்ள வழக்கில் சித்து குற்றவாளி என நீதிபதிகள் அறிவித்தனர்.  
    அவருக்கான தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

    முன்னதாக, கடந்த மாதம் 14-ம் தேதி வழக்கு விசாரணையின் போது, “சித்துவுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை” என பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
    ×