search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "randeep singh surjewala"

    • எந்த ஒரு மதமும் இழிவுபடுத்தப்படுவதை வன்மையாக கண்டிப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
    • பாஜகவின் இந்த நடவடிக்கை நாட்டை ஏமாற்றும் முயற்சி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    சிறுபான்மையினரைப் பற்றியும், முகமது நபி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் டெல்லி பாஜக ஊடகத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துத் மதங்களையும் பாஜக மதிப்பதாகவும், எந்த ஒரு மதமும் இழிவுபடுத்தப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மதத்தையும் இழிவுப்படுத்துபவர்களை பாஜக ஊக்குவிக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    பாஜகவின் இந்த நடவடிக்கை நாட்டை ஏமாற்றும் முயற்சி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, பாஜக கருத்து அப்பட்டமான போலியான பாசாங்கு என்றும், இது வெளிப்படையான கேலிக்கூத்து என்றும், நாட்டை கட்டுப்படுத்துவதற்கான மற்றொரு முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.

    மத்திய பாஜக அரசு மதவன்முறை, பிளவுபடுத்தும் பழமைவாதம் மற்றும் வாக்கு வங்கி அரசியலைப் பாதுகாப்பதற்காக வெறுப்பை வளர்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பஞ்சாப் மந்திரி சித்துவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கவேண்டும் என உள்துறைக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. #Congress #Sidhu #CISF #RajnathSingh
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர்.

    இந்நிலையில், பஞ்சாப் மந்திரியான நவ்ஜோத் சிங் சித்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. 

    இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:



    காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்ய நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபில் பிரசாரம் செய்யும்போது அந்த மாநில போலீசார் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    ஆனால், சித்து இந்தியா முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்துள்ளன.
    எனவே, சித்துவுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #Congress #Sidhu #CISF #RajnathSingh
    ×