search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியாய விலை கடை"

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

    நாகர்கோவில் :

    குறுமத்தூரில் ஒய்-73 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட குறுமத்தூர் நியாய விலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

    அதனடிப்படையில் புதிய கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதன் பணிகள் நிறைவு பெற்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், களியக்காவிளை பேரூராட்சி மன்ற தலைவருமான சுரேஷ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் ஸ்டான்லி, ஜோஸ்வா, சுரேஷ்குமார், வசந்தா, விபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் களியக்காவிளை பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் பென்னட், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சலீம், செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
    • எஸ்வி., புரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டது.

    உடுமலை,ஜூன்.22-

    உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் எஸ்வி., புரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட திமுக., செயலாளர் இல .பத்மநாபன் முன்னிலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் லதா என்ற காமாட்சி அய்யாவு ,ஒன்றிய செயலாளர் தங்கராஜ் ,ஒன்றிய குழுத் தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர் சங்கரன், ஐக்கிய கம்யூனிஸ்ட் மூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் ,கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    • நியாய விலை கடையை தி.மு.க. மாவட்டச் செயலாளர் திறந்து வைத்தார்.
    • 1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சி 99-வது வார்டுக்கு உட்பட்ட பாம்பன் நகரில் நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. தி.மு.க. பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சுவிதா விமல் முன்னிலை வகித்தார்.புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நியாய விலை கடையை திறந்து வைத்தார்.

    மேலும் அவர் முதியோர்களுக்கு உதவித்தொகை, 1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சிவனம்மாள், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் மதன்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தென்பழஞ்சி சுரேஷ், வட்டச்செயலாளர் சாமிவேல், பரமேஷ் பாபு, இளங்கோவன் சுந்தரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரி தாலுகா எஸ்.மாத்தூர் ஊராட்சியில் நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது.
    • இதில் கூட்டுறவு சங்கத் தலைவர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள எஸ்.மாத்தூர் ஊராட்சியில் நியாய விலை கடை திறப்பு நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா சதாசிவம் தலைமை தாங்கினார். சிங்கம்புணரி யூனியன் ஆணையாளர் லட்சுமணன் ராஜ் முன்னிலை வகித்து கடையை திறந்து வைத்தார். இதில் கூட்டுறவு சங்கத் தலைவர் துரைப்பாண்டியன், துணைத் தலைவர் ஜானகிராமன், வருவாய் ஆய்வாளர் முரளி, கிராம நிர்வாக அலுவலர் செல்வம், மன்ற துணைத் தலைவர் மனோகரன், நியாயவிலைக் கடை மேலாளர் சங்கர் மற்றும் கவுன்சிலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கிராம மக்கள் பங்கேற்றனர்.

    • நியாய விலை கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
    • ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சி கீழவரகுணராமபுரம் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலைக்கடை அமைக்கும் பணிக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.. யூனியன் சேர்மன் சிங்கராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி கிளைச்செயலாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×