search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுமத்தூரில் ரூ.15 லட்சம் செலவில் புதிய நியாய விலை கடை கட்டிடம்
    X

    குறுமத்தூரில் ரூ.15 லட்சம் செலவில் புதிய நியாய விலை கடை கட்டிடம்

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

    நாகர்கோவில் :

    குறுமத்தூரில் ஒய்-73 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட குறுமத்தூர் நியாய விலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

    அதனடிப்படையில் புதிய கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதன் பணிகள் நிறைவு பெற்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், களியக்காவிளை பேரூராட்சி மன்ற தலைவருமான சுரேஷ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் ஸ்டான்லி, ஜோஸ்வா, சுரேஷ்குமார், வசந்தா, விபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் களியக்காவிளை பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் பென்னட், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சலீம், செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×