search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர் துறை"

    • விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தொழிலாளா்களின் பெயா், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) (பொறுப்பு) க.செந்தில்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- திருப்பூா் மாவட்டத்தில் இயங்கி வரும் உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி தொழில் நிறுவனங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், கோழிப் பண்ணைகள், பின்னலாடை நிறுவனங்கள், அரிசி ஆலைகள், வீட்டு பராமரிப்புப் பணிகள், இதர நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேலையளிப்பாா், நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வெளிமாநிலத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்கள், வேலையளிப்பவா்கள் தொழிலாளா் துறையால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் எண் ஆகியவற்றைக் கொண்டு இணையதளத்தில் தனியாக ஒரு பயனாளா் குறியீட்டு எண்ணை உருவாக்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களின் பெயா், கைப்பேசி எண், பிறந்த தேதி, ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், முகவரி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இறைச்சி, மீன் கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது.
    • எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு வருகிற 22-ந் தேதி மேற்கொள்ளப்படும்.

    விருதுநகர்

    சென்னை முதன்மை செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் வழிகாட்டு தலின்படியும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது எடைய ளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரை யிடாமல் வியாபார உப யோகத்தில் வைத்திருந்த ஒரு வியாபாரி மீதும், எடைய ளவுகள் மறுமுத்திரை யிடப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 19 மீதும், தராசின் எடையை சரிபார்க்க வியாபாரிகள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 2 வியாபாரிகள் மீதும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மறுமுத்திரையிடப்படாத 8 மின்னணு தராசுகள், 1 சி விட்ட தராசு, 2 மேசைத் தராசுகள் மற்றும் 20 இரும்பு எடைக்கற்கள் தெருவோர வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு சட்ட முறை எடையளவு சட்டத்தின் கீழ் முதல் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் கோர்ட்டு மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    இறைச்சி, மீன் கடைகளில் எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு மீண்டும் வருகிற 22-ந் தேதி மேற்கொள்ளப்படும். எனவே இறைச்சி மற்றும் மீன் கடை வணிகர்கள் எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவ டிக்கையை தவிர்க்க வேண்டும்.

    நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562 225130 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்), 1/13சி ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட கலெக்டர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.

    விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்களான தயாநிதி, உமாமகேஸ்வரன், செல்வராஜ், பாத்திமா, துர்கா, முருகன், சிவசங்கரி ஆகியோர் இணைந்து இந்த கூட்டாய்வை மேற்கொண்டனர்.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்தார்.

    • கடைகள், உணவு நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது.
    • விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் ஆணையர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமானகுடியரசு தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும். இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

    தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழிலா ளர்களிடம் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IV EE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் கையொப்பம் பெற்று, அதனை தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர்களிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

    மேற்கண்டவாறு படிவம் அனுப்பாமலும், சட்டவிதிகளை அனுசரிக்காமலும் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 38 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 24 உணவு நிறுவனங்கள், 3 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 65 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    • ஜவுளி, இனிப்பு, பட்டாசு கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 2-வது குற்றத்திற்கு நீதிமன்றம் வாயிலாக அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

    மதுரை

    சென்னை முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆனையர் அதுல் ஆனந்த் அறிவுரையின்படியும், சென்னை சட்டமுறை எடையளவுக் கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி உத்தரவின்ப டியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும் மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்களால் சட்டமுறை எடையளவுச் சட்டம், எடையளவுகள் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் திடீர் சோதனை நடத்தினர்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைக் கடைகள், இனிப்புக் கடைகள், மற்றும் நிறுவனங்கள், பட்டாசுக் கடைகளில் இந்த சோதனை நடந்தது.

    இதில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 26 நிறுவனங்களிலும், சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் 15 நிறுவனங்க ளிலும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்த ப்பட்ட நிறுவனங்களின்மீது நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.

    மேலும் பொட்டலப் பொருட்கள் விதிகளின்கீழ் உரிய காணப்படாத 9 பட்டாகக் கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    2011-ம் வருட சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின்கீழ் பொட்டலப் பொருட்களின் விவரங்களை குறிப்பிடாமல் விற்பனை செய்து வரும் சில்லரை மற்றும் மொத்த விற்பனை வணிக நிறுவனங்களின் மீது முதலாவதாக கண்டறியப்படும் முரண்பாட்டிற்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும், 2-வது முறையாக கண்டறியப்படும் முரண்பாட்டிற்கு நீதிமன்ற நடவடிக்கை தொடரவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

    தராசுகள் மற்றும் எடையளவுகளை பரிசீலனை செய்து முத்திரை ஆய்வர்களிடம் உரிய காலத்தின் முத்திரையிட்ட பின்பே வியாபாரத்திற்கு பயன்படுத்தவேண்டும்.

    முத்திரையில்லாமல் எடையளவுகள் பயன்படுத்துபவர்களுக்கு முதல்முறையாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 2-வது குற்றத்திற்கு நீதிமன்றம் வாயிலாக அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

    மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்தார்.

    • விடுமுறை அளிக்காத 43 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் ராஜ்குமார் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும் சிவகங்கைதொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள்,மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

    தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விடுமுறை ஆய்வின் போது இந்த சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களின் மீது சிவகங்கை மாவட்டத்தில் 43 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் ராஜ்குமார் தெரிவித்தார்.

    • 14 முதல், 18 வயது வரையுள்ள வளரினம் பருவத்தினரை, அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்.
    • குற்ற செயலின் அடிப்படையில், இருவேறு தண்டனையும் வழங்கப்படலாம்.

    திருப்பூர்:

    குழந்தைகள் மற்றும் வளரினம் பருவத்தினர் பணியமர்த்தப்படுவதை தடுக்கும் நோக்கில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, குழந்தை தொழிலாளர் முறை விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அரசுத்துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன் அமைப்பு, மரியாலயா தொண்டு நிறுவனம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் பங்கேற்று, உறுதிமொழி ஏற்றனர்.

    மாவட்டத்தில்குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவது தொடர்பான, விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி, துண்டு பிரசுரம் வினியோகம், விழிப்புணர்வு பதாகை வைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.குழந்தை மற்றும் வளரினம் பருவ தொழிலாளர் சட்டப்படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எவ்வகையிலும் பணியில் அமர்த்தக்கூடாது. மேலும், 14 முதல், 18 வயது வரையுள்ள வளரினம் பருவத்தினரை, அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்.குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    குற்ற செயலின் அடிப்படையில், இருவேறு தண்டனையும் வழங்கப்படலாம்.மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவ னங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும், அபாயகரமான தொழிலில், 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரையும் பணிகளில் அமர்த்த வேண்டாம் எனதொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.

    ×