search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேயிலை"

    • கடந்த கடந்த 2020-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
    • சென்னை துறைமுக பராமரிப்பு பணிக்காக ரூ.98 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    ஊட்டி 

    மீன் பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறை மத்திய இணை மந்திரி சஞ்சீவ் பல்யான் நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    நான் தற்போது தான் முதல்முறையாக நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளேன். கடந்த கடந்த 2020-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் ரூ.1,565 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை துறைமுக பராமரிப்பு பணிக்காக ரூ.98 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது முழுவதும் மத்திய அரசின் நிதி ஆகும்.

    இதேபோல் மத்திய அரசு நிதி மூலம் சென்னையில் கடல்வாழ் தாவரங்களுக்காக புதிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. கொரோனா காலகட்டத்தின் போது ஒரு லட்சத்து 75 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் உள்ள மிகப் பெரிய தொண்டு நிறுவனமாகும். மக்கள் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உழைப்பதால், அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    படுகர் இன மக்களை எஸ்.டி. பிரிவில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி தேயிலை விலை குறைவாக இருப்பதால் பாதுகாப்பு துறை மூலம் தேயிலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் செக்சன் பிரிவு பகுதியில் உள்ள 7000 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு, கழிப்பறை, கியாஸ் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். எனவே இந்த பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிர்வாக ஆலோசனை கூட்டத்தில்மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நளினி, குமார், மண்டல தலைவர் பிரவீன், மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ், கார்த்தி, ராஜேந்திரன், மற்றும் கதிர்வேல், பாலகுமார், முருகேசன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.30 கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
    • இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கோத்தகிரி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கோத்தகிரி,

    பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.30 கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கோத்தகிரி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மொரச்சன், துணை பொதுச்செயலாளர் ராஜு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் டேன்டீயை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். அப்போது கட்யினர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    உடனே குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மறியலுக்கு முயன்ற 8 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல் பந்தலூர் பஜாரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார்.

    தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 24 பேரை தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    • 60 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இளம் தண்டு மற்றும் கொழுந்துகளை கொப்புள நோய் தாக்குகிறது.

    அரவேணு

    நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. சுமார் 60 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அத்துடன் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிலவுவதால், தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது.

    இதனால் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. போதிய சூரிய வெளிச்சம் இல்லாததாலும், இளம் தண்டு மற்றும் கொழுந்துகளை கொப்புள நோய் தாக்குகிறது. இதனால் 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே தேயிலையின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்து உள்ள நிலையில், தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பும் ஏற்படுவதால் தேயிலை விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- தேயிலை செடிகளில் கொப்புள நோயை கட்டுப்படுத்த தேயிலை தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்கள் இருக்க வேண்டும். மேலும் அதன் கிளைகளை அகற்றி, தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும்.

    செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்றிவிட வேண்டும். எக்ஸோ கன்சோல் 200 மில்லி லிட்டர் மற்றும் காப்பர் ஆக்ஸி குளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும்.

    இதேபோல பிராப்பிகானாசோல் 125 மில்லி லிட்டர் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×