search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக நிர்வாகி கொலை"

    • தி.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பேரிகை ஊராட்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 38). இவர் தி.மு.க. முன்னாள் நிர்வாகி.

    இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    தொழில்அதிபரும், உறவினருமான கர்நாடகா மாநிலம் அனிகிரிப் பள்ளியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கார்த்திக்கின் உறவினருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (30) என்கிற இளைஞருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததது.

    இந்த நிலையில் கார்த்திக் தனது உறவினர்  வீட்டுக்கு சென்று விட்டு நேற்று மாலை 5 மணி அளவில் பேரிகைக்கு திரும்பும்போது ஓசூர் அடுத்த சூலகுண்டா என்னும் கிராமத்தில் உள்ள ஏரிக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது கார்த்திக்கை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பிரதாப் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். உடனே பிரதாப் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்து துடிதுடித்து கொண்டிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பேரிகை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக் உடலை மீட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை சம்பவம் குறித்து தகலவறிந்த மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தங்கராஜ் மற்றும் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமையிலும் என 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் கொலையாளிகள் 3 பேரும் கர்நாடகா மாநிலத்தில் பதுக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படை தனிப்படையினர் விசாரணைக்காக பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர்.

    தி.மு.க. நிர்வாகி நிலத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திடீரென அந்த கும்பல் ஆராமுதனின் கார் மீது வெடிகுண்டுகளை வீசியதும் இதில் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கி ஓட்டை விழுந்தது.
    • கொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    ஈரோடு:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ஆரா முதன் (வயது 54). இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். தற்போது காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

    இந்நிலையில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் உள்ள பெருமாள் கோயில் எதிரே காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக நேற்று இரவு தனது காரில் ஆராமுதன் சென்றார்.

    பின்னர் காரில் இருந்து இறங்கிய ஆராமுதன் அவருடன் வந்த 2 பேருடன் சாலை ஓரத்தில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது காரில் வேகமாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென ஆராமுதனை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டினர். மேலும் அவரது காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆராமுதனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆராமுதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 4 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்ற த்தில் இக்கொலை தொட ர்பாக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஓட்டேரி பிரிவு டி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 22), மண்ணிவாக்கம் கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த சத்தியசீலன் (20), திருப்பூர் மாவட்டம் அவிநாசி ராக்கியபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்த சம்பத்குமார் (20), அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேர் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து சரணடைந்த 5 பேரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • வழக்கமாக எம்.கே.புரம் பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணி செல்வது வழக்கம்.
    • தொழில் போட்டியா அல்லது சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் தெற்கு சண்முகநாதபுரம் எம்.கே.புரத்தை சேர்ந்தவர் பெரியாம்பிள்ளை மகன் திருமுருகன் (வயது 45). இவருக்கு திருமணமாகி மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 10 வருடங்களாக 77-வது வட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வந்தார்.

    திருமுருகன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக அவர் கோர்ட்டு வழக்கு விசாரணைகளில் ஆஜராகி வந்தார். எப்போதும் 4 முதல் 5 பேருடன் வெளியில் சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். வழக்கமாக எம்.கே.புரம் பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணி செல்வது வழக்கம். அதேபோல் நேற்றும் வாகனங்களில் போலீசார் ரோந்து சென்றுவிட்டு திரும்பினர்.

    இதற்கிடையே அந்த பகுதிக்கு ஏற்கனவே வந்து பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது. இதனை சற்றும் எதிர்பாராத திருமுருகன் அவர்களின் பிடியில் இருந்து வீட்டுக்குள் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டி சாய்த்தது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் அந்த கும்பல் தப்பிவிட்டது. அப்போது அங்கு திருமுருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தெற்குவாசல் காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் 3 பேரை பிடித்துள்ளனர். தொழில் போட்டியா அல்லது சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தி.மு.க. வட்டச் செயலாளர் நள்ளிரவில் 5 பேர் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×