search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக இளைஞர் அணி மாநாடு"

    • சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
    • 310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். 310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும். அதனை இறுதியாக சேலத்தில் தலைவரிடம் கொடுப்போம். 85 லட்சம் கையெழுத்துகள் நீட் தேர்வை விலக்க கோரி வாங்கி உள்ளோம். மாநாட்டின் போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம். பின்னர் நேரடியாக நானே குடியரசுத் தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறேன். ராமர் கோவில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால்தான் அதில் திமுக-விற்கு உடன்பாடு இல்லை" என்றார்.

    • நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இன்று இந்தியாவுக்கான முன்னோடித் திட்டங்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.
    • திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதமே உள்ள நிலையில் தி.மு.க.வில் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    வாக்குச்சாவடி வாரியாக பணியாற்ற கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.

    தமிழ்நாடு முழுவதும் பாக முகவர்கள் கூட்டத்தை மண்டல அளவில் கூட்டி அவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வந்தார்.

    இதைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப அணியினர் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் இதை மிகப்பிரமாண்டமாக நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் அரங்கில் இளைஞரணி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி சுமார் 50 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ள நிலையில் இதை மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க இருக்கிறார். இந்த கையெழுத்து பட்டியல் அதன் பிறகு மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.

    இந்த நிலையில் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலை தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தை பிறந்தாள் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கி உள்ளோம்.

    தமிழ்நாடெங்கும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியெனப் பொங்கட்டும். அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும்.

    "நான்தான் எல்லாம்" என்ற சர்வாதிகாரப் போக்கு அகல, கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் ஆட்சி ஒன்றிய அளவில் அமைய வேண்டும். அதற்கு தி.மு.க. இளைஞர் அணியின் சேலம் மாநாட்டில் நாம் எழுப்பும் மாநில உரிமை மீட்பு முழக்கம் டெல்லி வரை அதிரட்டும்.

    கவனச் சிதறல்களுக்கு இடம் கொடுக்காமல் மாநாட்டின் மைய நோக்கத்தை முன்னெடுப்போம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    தொண்டர்களுக்கு பொங்கல்-தமிழர் திருநாள் வாழ்த்து கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு எதிர்கொண்ட மிச்சாங் மழை-வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது. கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் டெல்லியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், வீடுகளை இழந்த குடும்பத்தினர், படகுகள் சேதமான மீனவர்கள், உயிரிழப்புகளை எதிர்கொண்டவர்களின் குடும்பத்தினர், பயிர்கள் பாதிக்கப்பட்ட உழவர்கள், தொழில் முடங்கிய வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவித்து வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு.

    முதலமைச்சர் என்கிற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் இந்தப் பணிகளை மேற்கொண்ட வேளையில், தி.மு.க.வின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களின் துயர் துடைக்கும் கைகளாகச் செயல்பட்டீர்கள்.

    பொருளாதாரப் பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்த தமிழ்நாட்டை இரண்டரை ஆண்டுகளில் மிகுந்த பாடு பட்டுச் சமதளத்திற்குக் கொண்டு வந்து, சிகரத்தை நோக்கிப் பயணிக்கச் செய்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி.

    மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.

    தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.

    எழுச்சிமிகுந்த இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வரத் தயாராகியுள்ள நிலையில், இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்துவதே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும்.

    திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும்.

    எப்போதும் பொங்கல் அன்று கழகத் தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொது மக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண் டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.

    அனைவரது இல்லங்களிலும் 'சமத்துவப் பொங்கல்' எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மாநாட்டில் உதயநிதி என்ன பேசப்போகிறார் என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் உற்று நோக்க உள்ளனர்.
    • பாராளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந்தேதி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    மாநாட்டுக்கான பணிகளில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்த மாநாட்டில் 'நீட் விலக்கு' கோரி நடத்தப்பட்டு வந்த கையெழுத்து இயக்கத்தின் நகல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.

    மத்திய அரசுக்கு அனுப்ப இருக்கும் இந்த கையெழுத்து பிரதிக்காக மொத்தம் 50 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் பெறப்பட்டு வருகிறது.

    இன்னும் 2 மாதத்தில் பாராளுமன்ற தேர்தலுகான தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் சேலம் இளைஞரணி மாநாடு மிக முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்த மாநாட்டில் உதயநிதி என்ன பேசப்போகிறார் என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் உற்று நோக்க உள்ளனர்.


    ஏனென்றால் அண்மையில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து விட்டு வந்துள்ளதால் இந்த மாநாட்டில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசுவாரா? அல்லது பொதுவாக மத்திய அரசை குறை கூறுவாரா? என்பதை பார்க்க வேண்டும்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.

    அதற்கு முன்னோட்டமாக இளைஞரணி மாநாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்துவதால் இந்த மாநாடு மிக முக்கியத்துவம் அடைந்துள்ளது.

    உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. இளைஞரணி செயலாளராகி அமைச்சரான பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாநாட்டை நடத்த தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.

    மூத்த அமைச்சரான கே.என்.நேரு களத்தில் இறங்கி மாநாட்டு பணிகளை கவனித்து வருகிறார்.

    தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சம் பேர் மாநாட்டில் திரள்வார்கள் என்பதால் அவர்கள் தங்கி செல்வதற்கு வசதியாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகள் தங்குவதற்கு திருமண மண்டபங்கள், ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    வெளியூர்களில் இருந்து வரும் கட்சித் தொண்டர்கள் ஒருநாள் முன்னதாகவே வந்து தங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசு விழாக்களில் இப்போதே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிகழ்ச்சிகளுக்கு மூத்த அமைச்சர்கள் வந்திருந்தாலும், அதில் உதயநிதி ஸ்டாலின்தான் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.

    தென் மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின் போதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்று வந்த நிகழ்வுதான் முன்னிலைப்படுத்தப்பட்டது.

    அந்த வகையில் பார்க்கும் போது தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    சேலம் மாநாட்டுக்கு பிறகு முக்கிய பொறுப்புகள் உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைக்கும் போது அவரது அரசியல் அந்தஸ்து மேலும் உயரும் என்று மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • மாநாடு தொடர்பாக தமிழகம் முழுவதும் பைக் பேரணி நடத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்தார்.
    • மாநிலத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் பொறுப்பாளர்களையும் நியமித்தார்.

    தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டுக்கு இன்னும் இரண்டு வாரமே இருக்கிறது. அதற்குள் பேரணிக்குள் நடந்த சில தில்லாலங்கடி வேலைகளை சின்னவர் காதில் சிலர் போட்டு உள்ளதால் கொதிப்படைந்துள்ளார். மாநாடு முடியட்டும் எல்லாம் வச்சுக்கிறேன் என்று கடும் கோபத்தில் இருக்கிறாராம். மாநாடு தொடர்பாக தமிழகம் முழுவதும் பைக் பேரணி நடத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்தார்.

    இதற்காக மாநிலத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் பொறுப்பாளர்களையும் நியமித்தார். இந்த பேரணிக்கான செலவுகளையும் ஏற்றுக்கொண்ட உதயநிதி பேரணி செலவுக்காக பொறுப்பாளர்கள் மூலம் நிதி வழங்கி இருக்கிறார்.

    ஆனால் அந்த நிதி கீழ் மட்டம் வரை செல்லவில்லை என்று புகார் அளித்துள்ளார்கள். சின்னவர் கொடுத்த நிதியை தின்னவர் யார்? இதை கண்டு பிடித்து கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் உடன் பிறப்புகளின் கோரிக்கை.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.
    • தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி (டிசம்பர்) நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டை மிகப் பிரமாண்டமாக நடத்த தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    இதற்காக சேலத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் 5 லட்சம் பேரை திரட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து இருந்து எவ்வளவு பேர் வருவார்கள், எத்தனை கார், பஸ், வேன்கள் வரும் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.


    மாநாட்டுக்கு வருபவர்கள் ஒருநாள் முன்னதாகவே வந்து தங்கி கொள்ள திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி காண்பிக்க தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை தியாகராயர் நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட துணைப் பொதுச் செயலாளர்கள் 72 மாவட்டக் கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில் தி.மு.க. இளைஞரணி மாநாடு டிசம்பர் 17-ந்தேதி நடைபெற உள்ளதால் இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடிக்க ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் இளைஞரணி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம் என்று கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

    ஞரணியினர், மாணவரணியினர் மற்றும் கழகத்தின் பிற அணியினர் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் வாகன வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.


    தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.2) பற்றிய விவரங்களை மாவட்டச் செயலாளர்கள், அவ்வப் போது சரிபார்த்து அவர்களின் பணி விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். நாம் கை காட்டு பவரே பிரதமர் ஆக வேண்டும் என்றால் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.

    இந்த தேர்தலில் போட்டியிட பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுப்பவருக்கே வாய்ப்பு வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இவர்தான் வேட்பாளர் என்று இதுவரை முடிவு செய்யவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டமும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் மகளிர் வாக்கு நமக்குதான் என்பதில் சந்தேகம் இல்லை.

    தேர்தலில் கூட்டணி விஷயத்தை தலைமை பார்த்துக் கொள்ளும். தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக பாடுபட வேண்டும்.

    இவ்வாறு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

    சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநாடு ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று மாலையில் நடைபெறும் இளைஞரணி அமைப்பளர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி நிர்வாகிகளுக்கு எடுத்து கூற உள்ளார்.

    • மாநாட்டில் 4 லட்சம் பேரை திரட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
    • கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி (டிசம்பர்) நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டை மிகப் பிரமாண்டமாக நடத்த தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    இதற்காக சேலத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் 4 லட்சம் பேரை திரட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து இருந்து எவ்வளவு பேர் வருவார்கள், எத்தனை கார், பஸ், வேன்கள் வரும் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    மாநாட்டுக்கு வருபவர்கள் ஒருநாள் முன்னதாகவே வந்து தங்கி கொள்ள திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி காண்பிக்க தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை தியாகராயர் நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட துணைப் பொதுச் செயலாளர்கள் 72 மாவட்டக் கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில் தி.மு.க. இளைஞரணி மாநாடு டிசம்பர் 17-ந்தேதி நடைபெற உள்ளதால் இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடிக்க ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் இளைஞரணி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம் என்று கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

    இளைஞரணியினர், மாணவரணியினர் மற்றும் கழகத்தின் பிற அணியினர் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் வாகன வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.2) பற்றிய விவரங்களை மாவட்டச் செயலாளர்கள், அவ்வப்போது சரி பார்த்து அவர்களின் பணி விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று மாலையில் நடைபெறும் இளைஞரணி அமைப்பளர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி நிர்வாகிகளுக்கு எடுத்து கூற உள்ளார்.

    • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.
    • கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை மாலையில் அன்பகத்தில் நடைபெறும் இளைஞர் அணி அமைப்பாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்குகிறார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி சேலத்தில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது.

    இந்த மாநாட்டில் 4 லட்சம் பேரை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் டி.சர்ட் வழங்கப்படுகிறது.

    இந்த டி.சர்ட்டுகள் முன்கூட்டியே அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

    அவர்கள் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் மூலம் வினியோகிப்பார்கள். தொலை தூர மாவட்டங்களில் இருந்து முன்கூட்டியே வருபவர்கள் தங்குவதற்காக தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக நாளை (26-ந்தேதி) சென்னை அக்கார்டு ஓட்டலில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை மாலையில் அன்பகத்தில் நடைபெறும் இளைஞர் அணி அமைப்பாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்குகிறார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    இளைஞர் அணி மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    • மேடையில் இருக்க கூடிய உண்மையான முதல் செயல்வீரர் யார்? அது நம்முடைய முதன்மை செயலாளர் நேரு.
    • உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய இளைஞர் அணியே சாட்சி.

    சேலம்:

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

    அதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இன்று நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இளைஞர் அணி மாநாட்டை வெற்றி பெற செய்கின்ற பொறுப்பு மற்ற மாவட்டத்தை விட சேலம் மாவட்டத்திற்கு அதிகம் உண்டு என்பதை நீங்கள் உணர வேண்டும். இது வெறும் செயல்வீரர்கள் கூட்டம் அல்ல, மாநாட்டிற்கான முன்னோட்டம். நம்முடைய இளைஞர் அணிக்கு பல்வேறு பெருமைகள் இருக்கிறது. இளைஞர் அணியின் வரலாற்றை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு பல்வேறு இயக்கங்களில் இளைஞர் அணி இருக்கிறது. பல அணிகளும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே 1980-ம் ஆண்டு முதன் முறையாக ஒரு இயக்கத்திற்கு இளைஞர் அணி என ஆரம்பித்தது தி.மு.க. தான். இதை தொடங்கி வைத்தவர் நம்முடைய கழக தலைவர் தான்.

    அதுபோல் தி.மு.க.வில் பல அணிகள் உள்ளது. அதவாது 22 அணிகள் இருக்கிறது. ஆனால் அணிகள் இருந்ததும் அதில் முதன்மையான அணி எதுவென்றால் இளைஞர் அணி என்று கலைஞரால் பலமுறை பாராட்டப்பட்டது.

    தற்போது நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்து முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அவருடைய உழைப்பு எப்படி பட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞரணி மன்றத்தை கோபாலபுரத்தில் தொடங்கிய நம்முடைய தலைவர் படிப்படியாக உழைத்து இன்று தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக, கழக தலைவராக உட்கார்ந்து இருக்கிறார் என்றால் அவருடைய உழைப்பு தான் அதற்கு காரணம். அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது நம்முடைய இளைஞரணி என்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞர் அணியினர் உழைத்தால் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.


    செயல்வீரர்கள்னா யார்? தலைவர் என்ன சொல்கிறாரோ, தலைமை என்ன சொல்கிறதோ அதை களத்தில் இறங்கி செஞ்சி முடிப்பவன் தான் உண்மையான செயல்வீரன். அதனால் தான் இந்த கூட்டத்திற்கு பெயர் செயல்வீரர்கள் கூட்டம். தன்னுடைய சுய நலன் பார்க்காமல் கட்சி நலனுக்காக தலைமை சொல்லிவிட்டது, தலைவர் சொல்லி விட்டார் என உத்தரவை ஏற்று களத்தில் இறங்கி அதை முதன் முதலில் செஞ்சி முடிக்கிறவன் தான் உண்மையான செயல்வீரன்.

    இந்த மேடையில் இருக்க கூடிய உண்மையான முதல் செயல்வீரர் யார்? அது நம்முடைய முதன்மை செயலாளர் நேரு. அவருக்கு துணை நிற்பவர்கள் தான் மாவட்ட செயலாளர்கள் 3 பேரும். இங்கு இருக்கக்கூடிய அனைவரும் உண்மையான செயல்வீரர்கள். எனவே தலைமை சொல்வதை களத்தில் இறங்கி செஞ்சி முடிப்பது நம்முடைய கடமை.

    உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய இளைஞர் அணியே சாட்சி. அதற்கு நம்முடைய தலைவரே சாட்சி. உழைப்பு என்றால் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று பாராட்டப்பட்டவர் தான் நம்முடைய தலைவர் அவர்கள்.

    14 வயதில் 1967-ம் ஆண்டு கோபாலபுரத்தில் ஒரு முடிதிருத்தும் கடையில் இளைஞர் தி.மு.க.வை தொடங்கினார்கள். அதன் பிறகு 1968-ல் சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக சென்னை முழுவதும் சைக்கிள் பிரசாரம் செய்தார். 1969-ம் ஆண்டு சென்னை மாவட்டத்தினுடைய வார்டு பிரதிநிதி, 1973-ம் ஆண்டு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை.

    1980-ம் ஆண்டு தி.மு.க. இளைஞரணி ஆரம்பிக்கும்போது 7 அமைப்பாளர்களில் ஒருவர். கடின உழைப்பால் நம்முடைய தலைவர் முதலமைச்சர் ஆகியுள்ளார்.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 9 வருடங்கள் ஆகி விட்டது. 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாக்குறுதி கொடுத்தார். இந்தியாவை 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று சொன்னார். இப்போது மீண்டும் அதே வாக்குறுதியை கொடுக்கிறார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று சொல்கிறார். ஒரு விசயத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியாக வேண்டும். ஒரு வாக்குறுதி கொடுத்தார். இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்றார். இதை மட்டும் செய்து விட்டார். என்னவென்று கேட்டால் அவர் இந்தியா பெயரை பாரத் என மாற்றி விட்டார். தன்னுடைய சொல்லை காப்பாற்றி விட்டார் என சொல்கின்றார்.

    சி.ஏ.ஜி. என்கிற அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் செலவு கணக்கை தணிக்கை செய்யும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசில் ரூ.7½ லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை எனவும், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு பணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தொடர்ந்து நம்முடைய தலைவர் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

    ஆனால் மத்திய பா.ஜனதா அரசு பதில் சொல்லாமல் அந்த சி.ஏ.ஜி. அறிக்கை தயார் செய்த அத்தனை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து விட்டார்கள்.

    நம்முடைய மாநாட்டின் பெயர் மாநில உரிமைகள் மீட்பு மாநாடு. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விட்டு கொடுத்த நம்முடைய உரிமைகள் அத்தனையும் மீட்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் இருந்து வரி வருவாயாக மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி சேர்ந்துள்ளது. அதில் ரூ.2 லட்சம் கோடி மட்டுமே திருப்பி தரப்பட்டுள்ளது. ஆனால் உத்தரபிரதேசத்தில் ரூ.3 லட்சம் கோடி வருவாய் சென்றுள்ள நிலையில் ரூ.9 லட்சம் கோடி அந்த மாநிலத்திற்கு திருப்பி கொடுத்துள்ளது.

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. செயல்வீரர்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது. சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின் தலையில் தட்டினாய், நான் பூட்டின் இதயத்தை தொட்டேன் என்று. இதில் பூட்டு என்பது தமிழ்நாடு. சுத்தியல் ஒன்றிய பா.ஜ.க. அரசு. மக்களின் இதயத்தை தொடும் சாவி தி.மு.க. என குட்டிக்கதை சொன்னார்.

    • மாநாட்டு திடலில் இனிவரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மேடை அமைப்பது தொடர்பாக விரிவாக கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
    • மாநாட்டு வழிகாட்டு குழு மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    அந்த வகையில், நேற்று காலையில் ஈரோடு மாவட்டத்திலும், மாலையில் நாமக்கல் மாவட்டத்திலும் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று கட்சி இளைஞரணி நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    பின்னர் நேற்று இரவு 9 மணியளவில் சேலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையான மல்லூர் அருகே நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. , எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    எம்.பி.க்கள் பார்த்திபன், கவுதம சிகாமணி, மேயர் ராமச்சந்திரன், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், மாநகர செயலாளர் ரகுபதி, துணை செயலாளர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை உள்பட கட்சியினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் கார்மேகம் , போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் மற்றும் அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து சேலம் வந்த அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.

    இன்று காலை சேலத்தில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கு தி.மு.க . இளைஞரணி மாநில மாநாட்டுக்காக அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான பந்தலை பார்வையிட்டார்.

    அப்போது மாநாட்டு திடலில் இனிவரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மேடை அமைப்பது தொடர்பாக விரிவாக கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மாநாட்டு வழிகாட்டு குழு மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரிய கருப்பன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

    பின்னர் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து அங்குள்ள மைதானத்தில் இளைஞரணியினர் முன்பு சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., இளைஞரணி அமைப்பாளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

    இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் முடிந்ததும், சேலத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையெட்டி மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ×