search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்
    X

    தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்

    • மாநாட்டு திடலில் இனிவரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மேடை அமைப்பது தொடர்பாக விரிவாக கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
    • மாநாட்டு வழிகாட்டு குழு மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    அந்த வகையில், நேற்று காலையில் ஈரோடு மாவட்டத்திலும், மாலையில் நாமக்கல் மாவட்டத்திலும் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று கட்சி இளைஞரணி நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    பின்னர் நேற்று இரவு 9 மணியளவில் சேலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையான மல்லூர் அருகே நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. , எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    எம்.பி.க்கள் பார்த்திபன், கவுதம சிகாமணி, மேயர் ராமச்சந்திரன், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், மாநகர செயலாளர் ரகுபதி, துணை செயலாளர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை உள்பட கட்சியினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் கார்மேகம் , போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் மற்றும் அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து சேலம் வந்த அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.

    இன்று காலை சேலத்தில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கு தி.மு.க . இளைஞரணி மாநில மாநாட்டுக்காக அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான பந்தலை பார்வையிட்டார்.

    அப்போது மாநாட்டு திடலில் இனிவரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மேடை அமைப்பது தொடர்பாக விரிவாக கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மாநாட்டு வழிகாட்டு குழு மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரிய கருப்பன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

    பின்னர் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து அங்குள்ள மைதானத்தில் இளைஞரணியினர் முன்பு சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., இளைஞரணி அமைப்பாளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

    இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் முடிந்ததும், சேலத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையெட்டி மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×