search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டுக்கு 4 லட்சம் பேரை திரட்ட திட்டம்
    X

    தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டுக்கு 4 லட்சம் பேரை திரட்ட திட்டம்

    • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.
    • கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை மாலையில் அன்பகத்தில் நடைபெறும் இளைஞர் அணி அமைப்பாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்குகிறார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி சேலத்தில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது.

    இந்த மாநாட்டில் 4 லட்சம் பேரை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் டி.சர்ட் வழங்கப்படுகிறது.

    இந்த டி.சர்ட்டுகள் முன்கூட்டியே அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

    அவர்கள் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் மூலம் வினியோகிப்பார்கள். தொலை தூர மாவட்டங்களில் இருந்து முன்கூட்டியே வருபவர்கள் தங்குவதற்காக தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக நாளை (26-ந்தேதி) சென்னை அக்கார்டு ஓட்டலில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை மாலையில் அன்பகத்தில் நடைபெறும் இளைஞர் அணி அமைப்பாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்குகிறார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    இளைஞர் அணி மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    Next Story
    ×