search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி.எஸ்.இ. பள்ளி"

    முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சன்ட் பரிசு வழங்கினார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கா ன்கடை அருகே அமை ந்துள்ள வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டா டப்பட்டது. விழாவை முன்னிட்டு மாணவர்க ளுக்கு ஓவியம் வரைதல், வர்ணம் தீட்டுதல், தனிப்பா டல் போட்டி, கதை சொல்லு தல், கவிதை படித்தல், நடனம், மாறுவேடப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் பள்ளி குறித்து வினாடி வினா போட்டியும் நடை பெற்றது.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 91 மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சன்ட் சான்றி தழ்களையும் பதக்கங்க ளையும் வழங்கினார். மாவட்ட மற்றும் மாநில அளவில் கராத்தே, செஸ், நீச்சல் மற்றும் நடனம் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை புரிந்த மாணவர்கள் அஸ்லின், அப்ரிஜா, அமீ ஹாரிஸ், ரேஷ்னா ராணி, ரெக்ஸிகா, தர்ஷிகா மற்றும் அதிதி சந்திசேகர் ஆகியோ ருக்கு கேடயம் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் அணிவிக்க ப்பட்டது. பள்ளி செயலாளர் டாக்டர் கிளா ரிசா வின்சென்ட் குழந்தை கள் தின விழாவையொட்டி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    முடிவில் ஆசிரியர் அஷ்ராபா ஜாஸ்மின் நன்றி கூறினார். நிகழ்வுகளை ஆசிரியர் ஜெகின் பிரிட்டோ தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை நிர்வாகி டெல்பின் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
    • விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மணவாளக்குறிச்சி :

    கூட்டுமங்கலம் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தாளாளர் ரெஜீஷ் கிருஷ்ணன் மற்றும் முதல்வர் தங்கசுவாமி முன்னிலை வகித்தனர்.

    நாகர்கோவில் அய்யப்பா மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் அஞ்சனா, ஏ.டி.எஸ்.பி.க்கள் சகாயஜோஸ், மதியழகன், டி.எஸ்.பி. நாராயணன், தனியார் பள்ளி டி.இ.ஒ. முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். பெங்களூரூ தனியார் நிறுவன டைரக்டர் அஷ்வின் ராம்நாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பத்மஸ்ரீ, ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் பொன்னுலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூவலிங்கம், துணை தலைவர் கிரி, சட்ட ஆலோசகர் பிரேம்ஜித் கவுதம், அஜய்குமார், சாய்கு மார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • அப்துல்கலாம் வேடமணிந்து வந்த பிளஸ்-1 மாணவன் தீபக் லியோ ரோச் தேசியகொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
    • மாணவர்களுக்கு முதல் 3 பரிசுகள் பள்ளி தலைவரால் வழங்கப்பட்டது.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் செயல்பட்டு வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்க லாம் பிறந்த நாள் கொண்டா டப்பட்டது. பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முது நிலை முதல்வர் முன்னிலை வகித்தார்.சிறுவயதில் தமிழ் வழி கல்வி பயின்று விண்வெளி துறையில் சாதனைகள் படைத்த அப்து ல்கலாமின் பொன்மொழிகள், கவிதை, சிறப்புரை துணுக்கு முதலான பல நிகழ்ச்சிகள் காலை கூடுகையில் நடை பெற்றன. அப்துல்கலாம் வேடமணிந்து வந்த பிளஸ்-1 மாணவன் தீபக் லியோ ரோச் தேசியகொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். அப்துல்கலாம் போல் வேடமணிந்து வந்த மாண வர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு முதல் 3 பரிசுகள் பள்ளி தலைவரால் வழங்கப்பட்டது.

    இந்தியாவின் ஏவுகணை யின் நாயகன் அப்துல்க லாமின் படைப்புகளை நினைவு கூறும் வகையில் மழலையர்களின் படைப்பு களான ராக்கெட் கண்காட்சி மழலையர்களால் விளக்க வுரையுடன் நடத்தப்பட்டது. மேலும் மழலையர்களால் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் பங்கேற்பு
    • மாணவர் கூட்டமைப்பு தலைவர்களின் பொறுப்புகளை தெளிவுபட விளக்கினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான் கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர் கூட்டமைப்பு தலைவர்களின் பதவி ஏற்பு விழா வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் முன்னிலை வகித்தார். ஸ்போர்ட்ஸ் கேப்டன் மாணவர் ஆதில் பெலிக்ஸ் கடவுள் வாழ்த்து கூறினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துசிவம் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை விவரித்தார். மாணவி மெலிட்டா விக்டி வரவேற்றார்.

    புதிதாக பதவியேற்றுக் கொண்ட மாணவர் கூட்டமைப்பு தலைவர்களுக்கு பள்ளித் தலைவர் நாஞ்சில் வின்சென்ட் பதவி பட்டைகளை அணிவித்தார். செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் பேட்ஜ்களையும் அணிவித்தார்.

    பின்பு முதல்வர் பீட்டர் ஆண்டனி புதிதாக பதவியேற்ற மாணவ- மாணவிகளுக்கு ஆக்கபூர்வமான அறிவுரைகளையும் மாணவர் கூட்டமைப்பு தலைவர்களின் பொறுப்புகளையும், கடமைகளையும் தெளிவுபட விளக்கினார்.

    மாணவர் கூட்டமைப்பு தலைவர் லிரிஷ் மற்றும் தலைவி வித்யா சரோஜினி சிறப்புரையாற்றினார்கள். மாணவி ஆம் கிரிஸ்ட் நன்றி கூறினார். ஆசிரியர் ஜெகன் பிரிட்டோ நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி டெல்பின், உடற்கல்வி ஆசிரியர் ஆண்டனி, இடைநிலை கல்வி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில் இண்டர்நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் பரிசுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அமைப்பினை சேர்ந்தவர்கள் மாணவர்களை வரவேற்று பாராட்டினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் பள்ளி மாணவர்களான ஆகாஷ்குமார், நகுலேஷ் ஆகியோர் தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில் இண்டர்நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவன் ஆகாஷ்குமார் 17 வயதுக்குட்பட்டோருக்கான தனித்திறமை சிலம்பத்திலும், சண்டை சிலம்ப போட்டியிலும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மாணவன் நகுலேஷ் 12 வயதிற்குட்பட்டோருக்கான தனித்திறமை சிலம்ப போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

    பல்வேறு பதக்கங்களை பெற்று நாடு திரும்பிய மாணவர்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அமைப்பினை சேர்ந்தவர்கள் வரவேற்று பாராட்டினர்.

    பள்ளியின் சார்பில் மாணவர்களை பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், அருள்ஜோதி, பள்ளி பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் பிரமோதினி மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று பாராட்டினர். 

    ×