search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்கடை கால்வாய்"

    • திருப்பூா் மாநகராட்சி 1 -வது மண்டத்துக்குட்பட்ட 24 -வது வாா்டில் உள்ள அம்மன் வீதியில் புதிதாக சாக்கடை கால்வாயும், புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.
    • திருப்பூா் மாநகராட்சி 1 -வது மண்டத்துக்குட்பட்ட 24 -வது வாா்டில் உள்ள அம்மன் வீதியில் புதிதாக சாக்கடை கால்வாயும், புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகராட்சி 24-வது வாா்டுக்குட்பட்ட அம்மன் வீதியில் சாலையின் உயரத்துக்கு ஏற்ப சாக்கடைக் கால்வாய் பாலம் அமைக்க வேண்டும் என பாஜக., வலியுறுத்தியுள்ளது.

    இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி மேயா் தினேஷ்குமாரிடம், முன்னாள் மாமன்ற உறுப்பினா் நடராஜன் உள்ளிட்ட பாஜக., நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாநகராட்சி 1 -வது மண்டத்துக்குட்பட்ட 24 -வது வாா்டில் உள்ள அம்மன் வீதியில் புதிதாக சாக்கடை கால்வாயும், புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலமானது ஏற்கெனவே இருந்த சாலையின் மட்டத்தில் இருந்து சுமாா் ஒன்றரை அடி உயா்த்தி கட்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. சாலையின் மட்டத்துக்கு தகுந்தவாறு ஏற்கனவே பாலம் இருந்தது. இந்நிலையில், புதிய பால கட்டுமான பணியின்போது அப்பகுதி பொதுமக்கள் பாலத்தை உயா்த்தக்கூடாது என தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த வாா்டில் பல இடங்களில் இதேபோல சாலையின் உயரத்தைவிட பாலம் உயா்த்தி கட்டப்பட்டுள்ளதால், மழை காலங்களில் வீடுகளுக்குள் மழை நீா் செல்ல வாய்ப்பு உள்ளது.ஆகவே, சாலையின் உயரத்துக்கு தகுந்தவாறு பாலங்களை அமைக்க வேண்டும். மேலும், அம்மன் குறுக்கு வீதி, செல்லம்மாள் காலனி, ஜீவா வீதி உள்ளிட்ட இடங்களில் சாக்கடைகள் தூா்வாரப்படாமல் கழிவு நீா் தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, சாக்கடை கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் முதல் இடுவம்பாளையம் வரை சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சாக்கடை நீர் சாலைகளில் செல்வதால் அப்பகுதியில் உள்ள முல்லை நகர் ,அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    இது தொடர்பாக பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .தகவல் கிடைத்ததும் திருப்பூர் மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • நெடுஞ்சாலை துறை மூலமாக நிதி பெற்று அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
    • நேரில் சென்று பணி நடைபெறும் இடத்தை அருள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.

    சேலம்:

    சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 22-வது கோட்டம் சிவதாபுரத்தில் பெரு மழை காலங்களில் சேலத்தாம்பட்டி ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மழை நீர் ஒரு சொட்டு கூட ஊருக்குள் தேங்காமல் வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பிரச்சனை குறித்து பா.ம.க. அருள் எம்.எல்.ஏ. எடுத்துக் கூறினார்.

    இதையடுத்து நெடுஞ்சாலை துறை மூலமாக நிதி பெற்று அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

    ஆய்வு

    இந்த நிலையில் சித்தர் கோவில் மெயின் ரோட்டில் நடைபெற்று வரும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மிகவும் தொய்வு ஏற்பட்ட காரணத்தினால் சாக்கடை கால்வாய் அருகில் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்து உடனடியாக நேரில் சென்று பணி நடைபெறும் இடத்தை அருள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.

    நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணியினை தொடங்க வேண்டும். இல்லை என்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்க ளுடன் சேர்ந்து நானும் சாலை மறியல் ஈடுபடுவேன் கூறினார். அதன் அடிப்படையில் உடனடியாக அதிகாரிகள் பணியை தொடங்கினார்கள்.

    அப்போது அவருடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட துணைச் செயலாளர் சேகர், பகுதி செயலாளர் சமயவேல், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அருண், கோட்டச் செயலாளர் குமார், கோட்ட தலைவர் சுரேஷ், பகுதி அமைப்புச் செயலாளர் கோவிந்தன், மாணவரணி சஞ்சய், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
    • கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தற்போது சந்தியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு வாந்தியுடன், தலை சுற்றல் ஏற்பட்டது. கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    சாக்கடை கால்வாயில் கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாவின் உடலை பார்த்து அவரது கணவர், உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

    • பக்கத்து வீட்டில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார்.
    • மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குழியை பலகையால் மூடி வைத்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் குமாரனந்தபுரம் அருள்ஜோதி புரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் கனிமொழி (48). இவரது ஒரே மகன் அபிராம் (16). அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பக்கத்து வீட்டில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார். விழாவை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.

    அப்போது திருப்பூர் மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குழியை சரியாக மூடாமல் பலகையால் மூடி வைத்துள்ளனர்.

    இதனை கவனிக்காத அபிராம் பலகையில் கால் வைத்த போது தவறி சாக்கடை கால்வாயில் விழுந்தார். அப்போது திடீரென அருகில் இருந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரும் பள்ளி மாணவன் மீது விழுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பள்ளி மாணவனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பள்ளி மாணவனின் தாயார் கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய் குழியில் விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
    • இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    வீரபாண்டி:

    திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடையில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் 2 ஆண்டுகளாக உள்ளது.

    திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பாலத்தின் அடியில் சாக்கடை மண் நிரம்பியுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

    இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி பலவகை வைரஸ் நோய்கள் ஏற்படுகின்றன. மக்கள் பிரதிநிதி வந்த பின்பு இதற்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் இதற்கு இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே எங்களின் நீண்டநாள் கோரிக்கையை திருப்பூர் மேயர் மற்றும் நான்காம் மண்டலத்தலைவர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×