search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா்    அம்மன் வீதியில்  சாலையின் உயரத்துக்கு ஏற்ப சாக்கடை  கால்வாய் பாலம் அமைக்க வேண்டும் - பா.ஜ.க., வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    திருப்பூா் அம்மன் வீதியில் சாலையின் உயரத்துக்கு ஏற்ப சாக்கடை கால்வாய் பாலம் அமைக்க வேண்டும் - பா.ஜ.க., வலியுறுத்தல்

    • திருப்பூா் மாநகராட்சி 1 -வது மண்டத்துக்குட்பட்ட 24 -வது வாா்டில் உள்ள அம்மன் வீதியில் புதிதாக சாக்கடை கால்வாயும், புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.
    • திருப்பூா் மாநகராட்சி 1 -வது மண்டத்துக்குட்பட்ட 24 -வது வாா்டில் உள்ள அம்மன் வீதியில் புதிதாக சாக்கடை கால்வாயும், புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகராட்சி 24-வது வாா்டுக்குட்பட்ட அம்மன் வீதியில் சாலையின் உயரத்துக்கு ஏற்ப சாக்கடைக் கால்வாய் பாலம் அமைக்க வேண்டும் என பாஜக., வலியுறுத்தியுள்ளது.

    இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி மேயா் தினேஷ்குமாரிடம், முன்னாள் மாமன்ற உறுப்பினா் நடராஜன் உள்ளிட்ட பாஜக., நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாநகராட்சி 1 -வது மண்டத்துக்குட்பட்ட 24 -வது வாா்டில் உள்ள அம்மன் வீதியில் புதிதாக சாக்கடை கால்வாயும், புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலமானது ஏற்கெனவே இருந்த சாலையின் மட்டத்தில் இருந்து சுமாா் ஒன்றரை அடி உயா்த்தி கட்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. சாலையின் மட்டத்துக்கு தகுந்தவாறு ஏற்கனவே பாலம் இருந்தது. இந்நிலையில், புதிய பால கட்டுமான பணியின்போது அப்பகுதி பொதுமக்கள் பாலத்தை உயா்த்தக்கூடாது என தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த வாா்டில் பல இடங்களில் இதேபோல சாலையின் உயரத்தைவிட பாலம் உயா்த்தி கட்டப்பட்டுள்ளதால், மழை காலங்களில் வீடுகளுக்குள் மழை நீா் செல்ல வாய்ப்பு உள்ளது.ஆகவே, சாலையின் உயரத்துக்கு தகுந்தவாறு பாலங்களை அமைக்க வேண்டும். மேலும், அம்மன் குறுக்கு வீதி, செல்லம்மாள் காலனி, ஜீவா வீதி உள்ளிட்ட இடங்களில் சாக்கடைகள் தூா்வாரப்படாமல் கழிவு நீா் தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, சாக்கடை கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×