search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுதி இளவரசர்"

    • துருக்கியில் உள்ள சவுதி அரேபியா துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை செய்யப்பட்டார்.
    • அவரை கொலை செய்ய உத்தரவிட்டதாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது வழக்கு தொடரப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி சவுதி அரேபிய அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். துருக்கி பெண்ணான ஹதீஜா ஜென்கிஸை காதலித்தார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்த அவர், முதல் திருமணத்தின் மணமுறிவு ஆவணங்களைப் பெற 2018-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்குச் சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை.

    இதையடுத்து, துருக்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தூதரகத்துக்கு உள்ளே பதிவான ரகசிய உரையாடல்களை வைத்து கசோகி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. துருக்கியில் உள்ள சவுதி அரேபியா துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோகியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது.

    ஹதீஜா ஜென்கிஸ் மற்றும் கசோகியால் நிறுவப்பட்ட உரிமைக் குழு இந்த வழக்கைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் இளவரசரின் இரண்டு உதவியாளர்களும் குற்றம்சாட்டப்பட்டனர்.

    இதற்கிடையே, சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், தனது மகன் இளவரசர் முகமதுவை பிரதமராக நியமித்தார். இதையடுத்து அமெரிக்க அரசு, பிற நாடுகளின் நீதிமன்றங்களில் இருந்து அரசாங்கத் தலைவர்களுக்கு விலக்கு பெறுவதற்கான நீண்டகால சட்ட முன்மாதிரியை குறிப்பிட்டு முகமது பின் சல்மான் சமீபத்தில் பிரதமராக பதவியேற்றிருந்தாலும் அவருக்கு இறையாண்மை விலக்கு அளிக்கவேண்டும் என கோரியது.

    இது முகமது பின் சல்மானை பாதுகாக்கும் சூழ்ச்சி என்று கஷோகியின் வருங்கால மனைவி மற்றும் அவரது உரிமைகள் குழு வாதிட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமெரிக்க அரசு அவருக்கு விலக்கு அளிக்க தகுதி இருப்பதாக கண்டறிந்ததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்தார்.

    மேலும், குற்றம் சாட்டப்பட்ட அவரது உதவியாளர்கள் மீது அமெரிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

    பத்திரிகையாளர் கொலை விவகாரத்தில் சவுதிஅரேபியாவுடன் உறவை முறிக்க மாட்டோம், தொடர்ந்து நீடிக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். #Journalistsmurder #trump

    வாஷிங்டன்:

    சவுதிஅரேபியாவை சேர்ந்தவர் ஜமால் ஹசோக்கி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபராக இருந்து வந்தார். அவர் சவுதி அரேபிய அரச குடும்பத்தை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதினார்.

    துருக்கி நாட்டில் வசித்து வந்த அவர் அங்குள்ள சவுதிஅரேபியா தூதரகத்துக்கு சென்றார். அதன்பிறகு அவர் மாயமாகி விட்டார்.

    தூதரகத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது. இந்த கொலைக்கு பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காவும் கண்டித்தது.

    சவுதிஅரேபியாவின் இளவரசர் முகமது சல்மான் தூண்டுதலால் தான் இந்த கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுசம்பந்தமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹசோக்கி கொலை இளவரசர் சல்மானுக்கு நன்றாக தெரிந்திருக்கும் என்றும் குற்றம் சாட்டினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே உறவு பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதுசம்பந்தமாக டொனால்டு டிரம்ப் கூறும்போது, சவுதிஅரேபியா அமெரிக்காவில் மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை செய்ய உள்ளது. அந்த நாட்டுடன் எப்போதுமே நாங்கள் உறவை மேம்படுத்த விரும்புகிறோம். எங்கள் இரு நாடுகளின் உறவும் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

    ஹசோக்கி கொலையால் சவுதிஅரேபியாவுடன் உள்ள உறவை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்த நிலையில் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Journalistsmurder #trump

    ×