search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pakistanPM"

    பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பாகிஸ்தான் எம்பிக்கள் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியினை பரிசாக வழங்கினர். #GoldPlatedGun #SaudiArabiaCrown #MohammedBinSalman #PakistanSenators
    இஸ்லாமாபாத்:

    கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அவரது அழைப்பின் பேரில் சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, இருநாடுகளுக்கு இடையில் சுமார் 2 ஆயிரம் கோடி டாலர் அளவிலான 8 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
     
    மேலும் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வியை சவுதி இளவரசர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிபர் ஆரிப் ஆல்வி, பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய ‘நிஷான் இ பாகிஸ்தான்’ விருதினை சவுதி இளவரசருக்கு வழங்கி கவுரவித்தார்.



    அதன்பின்னர் பாகிஸ்தான் செனட் சபை உறுப்பினர்கள் சார்பில், தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று சவுதி இளவரசருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இது ஹெக்லர் அண்ட் கோச் எம்பி5கே ரக துப்பாக்கி ஆகும். இஸ்லாமாபாத்தில் இளவரசர் தங்கியிருந்த குடியிருப்புக்குச் சென்று பாகிஸ்தான் செனட் சபை தலைவர் சாதிக் சஞ்ரானி இந்த பரிசை வழங்கியுள்ளார். #GoldPlatedGun ##SaudiArabiaCrown #MohammedBinSalman #PakistanSenators
     
    சவுதி இளவரசர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்த வார இறுதிக்குள் பாகிஸ்தான் செல்ல இருந்த நிலையில், தற்போது ஒரு நாள் தாமதமாகியுள்ளது. #SaudiPrince #MohammedbinSalman
    இஸ்லாமாபாத்:

    சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இஸ்லாமாபாத்திற்கு வர இருக்கிறார். இந்த வார இறுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சவுதி இளவரசர் பாகிஸ்தான் செல்வார் என அறிவிக்கப்பட்டது.

    இதற்காக 5 டிரக்குகளில் இளவரசரின் பயிற்சி சாதனங்கள், மரப்பொருட்கள், நாற்காலி மற்றும் அவர் பயன்படுத்தும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டன.

    சவுதி இளவரசரின் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சவுதி பத்திரிக்கையாளர்களும் வந்திருந்தனர். பாகிஸ்தானுக்கு இளவரசராக வருகை தர உள்ளது இதுவே முதல் முறையாகும். முன்னதாக பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்தபோது, ஏமன் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் பாகிஸ்தானுக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் சவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒருநாள் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (பிப்ரவரி 17, 18) அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புல்வாமா தாக்குதலுக்கு இளவரசர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த சுற்றுப் பயண தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சவுதி இளவரசர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிப்ரவரி 19ம் தேதி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SaudiPrince #MohammedbinSalman 
    சவுதி இளவரசர் பாகிஸ்தானில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி, 5 டிரக்குகளில் அவரது பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. #SaudiPrince #MohammedbinSalman #Imrankhan
    இஸ்லாமாபாத்:

    சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இஸ்லாமாபாத்திற்கு வர இருக்கிறார். இந்த வார இறுதிக்குள் சவுதி இளவரசர் பாகிஸ்தான் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதுகாப்பு காரணங்களினால் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து 5 டிரக்குகளில் இளவரசரின் பயிற்சி சாதனங்கள், மரப்பொருட்கள், நாற்காலி  மற்றும் அவர் பயன்படுத்தும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் நேற்று இஸ்லாமாபாத்தை அடைந்தன.

    சவுதி இளவரசரின் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சவுதி பத்திரிக்கையாளர்களும் வந்துள்ளனர். பாகிஸ்தானுக்கு இளவரசராக வருகை தர உள்ளது இதுவே முதல் முறையாகும். முன்னதாக பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்தபோது, ஏமன் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் பாகிஸ்தானுக்கு வந்திருந்தார்.

    சவுதி இளவரசரின் தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளார். இரு நாடுகளுக்கிடையே பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. .  #SaudiPrince #MohammedbinSalman #Imrankhan
    ×