search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமாதான பேச்சுவார்த்தை"

    • கடலூரில் அனைத்துக் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க கோரி நடைபெற்றது.

    கடலூர்:

    அனைத்துக்கட்சி சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் காரைக்கால், மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மற்றும் கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்தில் உழவன், ராமேஸ்வரம், திருப்பதி எக்ஸ்பிரஸ் ெரயில்கள், விழுப்புரம், மயிலாடுதுறை அனைத்து பாசஞ்சர் ெரயில்கள் மீண்டும் இயக்க வேண்டும்.

    கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி காலை, மாலை ெரயில்கள் இயக்க வேண்டும். புதுவை, சென்னை ெரயிலுக்கு இணைப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை போராட்டம் அறிவித்தவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என போராட்டம் செய்பவர்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து இன்று காலை கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் குளோப், தி.க மாவட்ட தலைவர் சிவக்குமார், குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன், விடுதலை வேங்கைகள் மாநில செயலாளர் வெங்கடேசன், மக்கள் அதிகாரம் பாலு, மாநகராட்சி கவுன்சிலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அமெரிக்கா, ரஷியா இடையிலான சமாதான பேச்சுவார்த்தையை மூன்றாவது நாட்டில் நடத்த இருநாடுகளும் இன்று சம்மதம் தெரிவித்துள்ளன. #USRussiasummit
    மாஸ்கோ:

    சிரியா விவகாரத்தால் அமெரிக்கா - ரஷியா இடையே சமீபத்தில் ஏற்பட்ட பூசல், பிரிட்டன் நாட்டில் ரஷிய முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகளை ரசாயன தாக்குதலால் ரஷியா கொல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டினால் பூதாகரமாக வெடித்தது.

    இதுதவிர, அமெரிக்கா - ரஷியா இடையிலான மேலும் சில வேறுபாடுகளை களைவதற்காக இருநாட்டு தலைவர்களும் நேருக்குநேர் சந்தித்துப் பேச வேண்டும் என சர்வதேச அரசியில் நோக்கர்கள் கருதுகின்றனர். ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு ஒற்றுமையை ஏற்படுத்துவதில் ஆஸ்திரியா நாட்டு பிரதமர் செபாஸ்டின் குரூஸ் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் என ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிர்ட்டி பெஸ்கோவ் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு அச்சாரமாக அமெரிக்க தேசிய ஆலோசகர் ஜான் பால்டோன் இன்று ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது அவரை வரவேற்று கருத்து தெரிவித்துள்ள புதின், உங்களது மாஸ்கோ பயணம் நமது இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவு முழுமையடைவதற்கான முதல் படிக்கட்டாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். 

    இதைதொடரந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான சமாதான பேச்சுவார்த்தையை அமெரிக்கா, ரஷியா அல்லாத மூன்றாவது நாட்டில் நடத்த இருநாடுகளும் இன்று சம்மதம் தெரிவித்துள்ளதாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளர் யூரி உஷாக்காவ் குறிப்பிட்டார்.

    பேச்சுவார்த்தைக்கான தேதியும் நேரமும் தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் இதுதொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #USRussiasummit 
    ×