search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peace with india"

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் பாகிஸ்தானுக்கு விழும் ஓட்டாகும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. #ImranKhan #LokSabhaElections2019 #BJP #Congress
    புதுடெல்லி:

    இந்தியாவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை  நடத்த வாய்ப்புண்டு என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. 



    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் கூறுகையில், பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக மோடியின் கூட்டணி அமைத்துள்ளது. மோடிக்கு போடும் ஒட்டு பாகிஸ்தானுக்கு அளிக்கும் ஓட்டு ஆகும்.

    மோடி அவர்களே உங்களுக்கு முதலில் நவாஸ்செரீப் நண்பராக இருந்தார். தற்போது இம்ரான் கான் உங்களுக்கு சிறந்த நண்பராகி விட்டார். உண்மை இப்போது வெளிவந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.  #ImranKhan #LokSabhaElections2019 #BJP #Congress
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சிறந்த வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். #ImranKhan #LokSabhaElections2019 #BJP
    கராச்சி:

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளிநாட்டைச்  சேர்ந்த சில பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் அடுத்து அமையவுள்ள இந்திய அரசாங்கம் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்தால், பாகிஸ்தானுடன் பேசுவதற்கு பயப்படலாம். பா.ஜ.க. ஒரு வலதுசாரிக் கட்சி - வெற்றி பெற்றால், காஷ்மீரில் சில வகையான தீர்வு கிடைக்கும்.



    இந்தியாவில் இப்போது என்ன நடக்கிறது என்று நான் பார்க்க நினைத்தேன், முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்த இந்திய முஸ்லிம்களை அவர் அறிந்திருந்தார், தீவிர ஹிந்து தேசியவாதத்தால் இப்போது கவலைப்படுகிறார்.

    ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு நில உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 35-வது பிரிவு அகற்றுவதற்கான பா.ஜ.க. வாக்குறுதி, ஒரு முக்கிய கவலையாக இருந்தது என்று கூறினார். #ImranKhan #LokSabhaElections2019 #BJP
    ×