search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோகுல்ராஜ் கொலை வழக்கு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோகுல்ராஜ் இறப்பு விவகாரம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
    • கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நேரில் வரவழைத்து விசாரித்தனர்.

    சென்னை:

    சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தாா். அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், கோகுல்ராஜ் இறப்பு விவகாரம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    அவர்கள் விசாரணைக்கு பின்பு, இது தொடர்பாக சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இந்த கொலை வழக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இங்கு 2 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜோதிமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவர் மீதான வழக்கு மட்டும் நாமக்கல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண், குமார் என்ற சிவகுமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

    மேலும் அவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சம்பத்குமார் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பின்னர் ஓரிரு நாட்கள் கழித்து முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட யுவராஜ் மட்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    அந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர், இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நேரில் வரவழைத்து விசாரித்தனர். அப்போது அவர் கோகுல்ராஜ் கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கோகுல்ராஜ் தன்னுடைய வகுப்பு தோழர் மட்டும்தான். வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும், வாக்குமூலம் அளித்தார்.

    அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததாக கூறி, அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குபதிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை ஐகோர்ட்டின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று சுவாதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனது.

    இதற்கிடையே தண்டனை பெற்றவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அதன் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் கூறுகையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

    மேலும் 5 பேர் விடுதலையில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்துள்ளனர்.

    வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவரம்:

    கோகுல் ராஜ் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனையை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. போதிய சாட்சிகள் இல்லாததால், 5 பேரை விடுதலை செய்தது.

    யுவராஜ், அருண், குமார் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதில், யுவராஜ் மற்றும் அருண் ஆகிய இருவருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதாவது சாகும் வரையில் சிறை தண்டணை அளிக்கப்பட்டது.

    குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.

    பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கும், குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஆயுள் மற்றும் கூடுதலாக 5 ஆண்டுகளுடன் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • கோகுல்ராஜ் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
    • வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார்.

    சென்னை:

    சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

    விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித்,செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும், தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் அமர்வில் இன்று நடைபெற்றது. யுவராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் குறைகள் உள்ளதாகவும், அந்த தவறுகளை சுட்டிக்காட்டி தங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை எனவும் வாதிட்டார்.

    இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோகுல்ராஜ் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவும், அரசுத் தரப்பு சாட்சிகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவும் வாதிட்டார்.

    இதற்கிடையே, வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். வீடியோ காட்சிகளை வைத்து நீதிபதிகள் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார். இதனால், விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாகக் கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்தது.

    அதேபோல் கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகிய பகுதிகளை நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    நீதிபதிகளின் ஆய்வு மற்றும் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • கோகுல்ராஜின் தாயார் சித்ரா வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்தார்.
    • சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். கோகுல்ராஜ், சுவாதி என்ற பெண்ணை காதலித்ததும், இந்த விவகாரத்தில் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.கோகுல்ராஜ் கொலை வழக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

    இந்த வழக்கில், கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி தீர்ப்பளித்தது.

    கோகுல்ராஜ் கொலை வழக்கில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேர் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா, மற்றும் இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது.

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பொய் சாட்சியம் கூறியும், பிறழ் சாட்சியமாக மாறியும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர். இந்த வழக்குகளை விசாரித்த நிதீபதிகள் இதை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றினர்.

    இதையடுத்து, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு கடந்த 6-ந் தேதி விசாரணைக்கு வந்தது. சுவாதிக்கு பதிலாக அவரது கணவர் ஆஜரானார். சுவாதி கர்ப்பமாக இருப்பதால் ஆஜராக முடியாத நிலை உள்ளதாக சுவாதியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி.யில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அதன்படி இன்று காலை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆனந்த வெங்கடேஷ், ரமேஷ் ஆகியோர் சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து புறப்பட்டு நேராக திருச்கோடு வந்தனர்.

    பின்னர் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் ராஜகோபுரம், படிக்கட்டு, மேற்கு புற வாசல் மற்றும் கோவிலுக்குள் அனைத்து பகுதிகளையும், வீடியோ காட்சிகள் பதிவான இடங்களையும் பார்வையிட்டனர்.

    கோகுல்ராஜ் தொடர்பாக கோவிலில் பதிவான வீடியோ காட்சிகளில் கோர்ட்டில் சமர்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் வைத்து அந்த இடங்களையும் ஆய்வு செய்தனர். மேலும் சுவாதியும், கோகுல்ராஜிம் கோவில் கொடி மரம் வழியாக வரும் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் பார்வையிட்டனர்.

    யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் கோவிலுக்குள் இருந்து 2 பேரையும் அழைத்து கொண்டு வெளியேறுவதையும் அந்த இடத்தையும் பார்வையிட்டனர். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலெட்சுமி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
    • வழக்கு விசாரணையின் போது யுவராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணைக்காக நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த யுவராஜ் உள்பட பலர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதற்காக அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.

    நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது யுவராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த நிலையில் வழக்கை பிப்ரவரி மாதம் 1-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதை அடுத்து அவர் மீண்டும் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி.யில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
    • நீதிபதிகளின் அறிவிப்பை தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    சென்னை:

    சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் பொறியாளர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். கோகுல்ராஜ், சுவாதி என்ற பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கு, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

    இந்த வழக்கில், கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி தீர்ப்பளித்தது.

    கோகுல்ராஜ் கொலை வழக்கில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    அதேபோல, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேர் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் விசாரணை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பொய் சாட்சியம் கூறியும், பிறழ் சாட்சியமாக மாறியும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர்.

    இந்த வழக்குகளை விசாரித்த நிதீபதிகள் இதை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றினர். இதையடுத்து, இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சுவாதிக்கு பதிலாக அவரது கணவர் ஆஜரானார். சுவாதி கர்ப்பமாக இருப்பதால் ஆஜராக முடியாத நிலை உள்ளதாக சுவாதியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகள், கோகுல்ராஜின் தாயார், அரசு தரப்பு மற்றும் சிபிசிஐடி தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீடுதாரர்கள் தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி.யில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கோயிலின் அமைப்பை புரிந்து கொள்ளவும், உள்ளே செல்லும் வழி, வெளியே வரும் வழி ஆகியவை குறித்து புரிந்து கொள்வதற்காக வருகிற 22-ந்தேதி நேரடியாக சென்று ஆய்வு செய்யவுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீதிபதிகளின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    • சுவாதி மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.
    • பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சென்னை:

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேர், தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் எம்எஸ். ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்து வருகிறது.  விசாரணையின்போது, முக்கிய சாட்சியான சுவாதியிடம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி விளக்கம் கேட்டனர். அப்போது சுவாதி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் மாற்றி மாற்றி பேசியதாக அவர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.

    இரு நீதிபதிகளும் சென்னையில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் நடைபெறுகிறது.

    பிறழ் சாட்சியம் அளித்ததாக பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்காக சுவாதியின் கணவர் ஆஜராகியிருந்தார். சுவாதி கர்ப்பமாக இருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    அப்போது, பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கான மெமோ சுவாதியின் கணவரிடம் கொடுக்கப்பட்டது.

    மேல்முறையீட்டு வழக்கில் கோகுல்ராஜின் தாயார் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், யுவராஜ் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பு பதில் வாதத்துக்காக விசாரணை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக கூறப்படும் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவும் நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். கோகுல்ராஜ், சுவாதி இருவரும் கோயிலுக்குள் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. வெளியே வரும் காட்சி பதிவாகவில்லை. எனவே, கோயிலின் அமைப்பை புரிந்துகொள்ளவும், கோயிலின் உள்ளே வரும் வழி, வெளியே வரும் வழி குறித்து புரிந்துகொள்வதற்காகவும் ஜனவரி 22ம் தேதி நேரில் செல்ல உள்ளதாக நீதிபதிகள் கூறினர்.

    • யுவராஜ் மீது நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
    • போலீசார் யுவராஜை பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து சென்று மீண்டும் சிறையில் அடைத்தனர்.

    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆயுள் தண்டனை விதித்தது.

    இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யுவராஜ் மீது நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதற்காக அவரை போலீசார் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5-தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து போலீசார் யுவராஜை பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து சென்று மீண்டும் கோவை சிறையில் அடைத்தனர்.

    • சுவாதி பயம் இல்லாமல் கோர்ட்டுக்கு வருவது உறுதி செய்து, அவரை நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
    • கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள சுவாதிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த சுவாதியை காதலித்தார். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் கோகுல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் டிரைவர் அருண்குமார் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீதான வழக்கு மதுரை தாழ்த்தப்பட்டோர் நல கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உட்பட 10 பேர் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தனர். 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜ் தாய் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி தரப்பிலும் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மனுக்கள் நீதிபதிகள் ரமேஷ் ஆனந்த், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட பெஞ்சில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது. எனவே சுவாதி பயம் இல்லாமல் கோர்ட்டுக்கு வருவது உறுதி செய்து, அவரை நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினார். அப்போது நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதற்கிடையே கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள சுவாதிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியிலும், 24 மணி நேர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.




    • உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாட்சியம் அளித்து வந்த நிலையில், சுவாதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • ஜாதி, மதத்தை விட சத்தியம், தர்மம், நியாயம் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்பவரை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

    விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தொடக்கத்தில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சுவாதி இருந்துள்ளார். இதனால் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது. அதன்பின் அவர் முன் தெரிவித்த வாக்குமூலத்திற்கு எதிரான தகவல்களை தெரிவித்ததால் பிறழ்சாட்சியாக அறிவிக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்பது தெரிகிறது.

    சுவாதியை மீண்டும் சாட்சி கூண்டில் ஏற்ற எங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவது அவசியமாகிறது. சுவாதியை போதுமான பாதுகாப்புடன் இந்த கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி இன்று காலை சுவாதி நீதிமன்ற வளாகத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் காத்திருந்தார். அதனை தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆனந்தராஜ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் முன்பு சுவாதி ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் அழைத்து வந்ததில் ஏதேனும் சிரமம் இருந்ததா? என கேட்டனர். அதற்கு சுவாதி உரிய பாதுகாப்புடன் அழைத்து வந்ததாக தெரிவித்தார். கோகுல்ராஜ் உங்களுடன் படித்தாரா? சக மாணவர்களுடன் பேசுவதுபோல் உங்களுடன் பேசுவாரா? என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர் ஆம் என்று தெரிவித்தார்.

    23.6.2015 அன்று நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா? ஞாபகம் இருக்கிறதா? அன்று கோகுல்ராஜை பார்த்தீர்களா? என கேட்கப்பட்டது. ஆனால் சுவாதி அன்று பார்க்கவில்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் கோவிலில் பதிவான வீடியோவை காண்பித்து அதில் உள்ள பெண், பின்னால் வரும் ஆண் யாரென கேள்வி எழுப்பினர்.

    ஆனால் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என சுவாதி தெரிவித்தார். பின்னால் வருவது கோகுல்ராஜ் போல் உள்ளது என பதில் தெரிவித்தார். மீண்டும் வீடியோ ஒளிபரப்பபட்டது. அப்போது சுவாதி வீடியோவில் இருப்பதுதான் இல்லை என்று கண்ணீர் மல்க சுவாதி தெரிவித்தார். இதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.

    தொடர்ந்து நீதிபதிகள் சுவாதியை பார்த்து கூறுகையில், மாஜிஸ்திரேட்டிடம் கூறிய வாக்குமூலத்திலும், தற்போது கூறிய வாக்குமூலத்திலும் வேறுபாடுகள் உள்ளது. வீடியோவில் உங்களை பார்த்து நீங்கள் தெரியவில்லை என கூறுகிறீர்கள். ஜாதியை விட சத்தியம் முக்கியம்.

    நீங்கள் இங்கு புத்தகத்தில் கை வைத்து உண்மை தகவல்களை கூறுவதாக சத்தியம் செய்தீர்கள். ஆனால் தற்போது முரணான தகவல்களை கூறி வருகிறீர்கள். மதத்தை விட சத்தியம், தர்மம், நியாயம் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    நீங்கள் பேசியதாக கூறப்படும் ஆடியோவை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதில் உண்மை தெரிந்துவிடும் என கோபத்துடன் நீதிபதிகள் கூறினர்.

    இதனை கேட்டவுடன் சாட்சி சொல்லும்போதே சுவாதி கண்ணீர்விட்டு கதறியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து 15 நிமிடத்திற்கு பின் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    இதற்கிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாட்சியம் அளித்து வந்த நிலையில், சுவாதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுவாதி கர்ப்பமாக இருப்பதால் பரிசோதனைக்காக நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சத்தியம் என்றைக்கானாலும் சுடும் என பிறழ்சாட்சியான சுவாதியிடம் நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, சுவாதி வரும் 30ம் தேதி மீண்டும் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினமும் இதே நிலை தொடர்ந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
    • கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா, மதுரை ஐகோர்ட்டில் ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

    மதுரை:

    சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தாா். போலீஸ் விசாரணையில், அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பில், கோகுல்ராஜ் கொலை வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண் என்ற சிவகுமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகியோருக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள்தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள்தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் 5 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு கூறப்பட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இதனிடையே கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா, மதுரை ஐகோர்ட்டில் ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எனது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கொலை வழக்கில் ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்ட 10 பேரின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அவர்களுக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அடுத்த கட்ட விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
    • முக்கிய குற்றவாளி யுவராஜ் மட்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார்.

    மதுரை:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சோ்ந்த என்ஜினீயர், கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதி தண்டவாளத்தில் பிணமாக கிடந்தாா். போலீஸ் விசாரணையில், அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இந்த கொலை வழக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இங்கு 2 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பில், கோகுல்ராஜ் கொலை வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண், சிவகுமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு கூறப்பட்டது.

    வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்த ஜோதிமணி என்ற பெண் ஏற்கனவே கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் மீதான வழக்கு மட்டும் நாமக்கல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தண்டனை பெற்ற 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முக்கிய குற்றவாளி யுவராஜ் மட்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார்.

    இந்தநிலையில் தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்களில், கோகுல்ராஜ் இறப்பு வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களும்தான். இவர்கள் அனுமானத்தின் அடிப்படையில் சாட்சியம் அளித்துள்ளனர். அதன்படி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

    நாங்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளோம். எனவே எங்களுக்கு கீழ்கோர்ட்டு அளித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த தண்டனையை நிறுத்தி வைத்து, எங்களுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா, நீதிபதிகள் முன்பு ஆஜராகி, மனுதாரர்கள் தரப்பினரால் எங்கள் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே மனுதாரர்களுக்கு விதித்த தண்டனையை நிறுத்திவைத்து, ஜாமீன் அளிக்கக்கூடாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என முறையிட்டார்.

    அதற்கு நீதிபதிகள், இதுதொடர்பாக தங்கள் தரப்பில் வாதாடுவதற்கு வக்கீல் நியமிக்க வேண்டுமா? என கேட்டனர். அதற்கு அவர், ஏற்கனவே எங்கள் தரப்பில் வக்கீல்கள் உள்ளனர் என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் அளிக்க வேண்டும் என்ற மனுவை மனுதாரர்கள் வாபஸ் பெற வேண்டும். தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற பிரதான மனு மீது மட்டும் விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    ×