என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கடத்தல் வழக்கில் விடுதலையாகி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜ்
- பெருந்துறையில் 2013-இல் ஹேமலதா மற்றும் பாலாஜி கடத்தல் வழக்கில் யுவராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் 2013-இல் ஹேமலதா மற்றும் பாலாஜி கடத்தல் வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கும் எதிரான சாட்சிகள் அனைத்தும் பிறழ் சாட்சியாக மாறியதால் யுவராஜ் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து ஈரோடு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விடுதலை குறித்து எக்ஸ் தளத்தில், யுவராஜின் ஆதரவாளர்கள் கொண்டாட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த வழக்கு கோகுல்ராஜ் கொலை வழக்குடன் தொடர்புடையதல்ல. இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள் ஆகும். இதனால் கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் கோவை மத்திய சிறைக்கு யுவராஜ் அழைத்துச் செல்லப்பட்டார்.






