search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிம வளங்கள்"

    • கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பல பகுதிகள் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மாநில கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும்.

    கடையம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தென்காசி, அம்பை சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கனிம வளங்களை நமக்காக மட்டுமல்லாமல் நமது வருங்கால சந்ததி யினருக்காகவும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலும், அவசியத்திலும் இருக் கிறோம்.

    கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி யுள்ள பல பகுதிகளை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து அங்கிருந்து கனிம வளங்கள் எடுப்பதற்கு தடை செய்யும் விதத்தில் அங்குள்ள குவாரிகளை மூடிவிட்டு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகத்தில் இருந்து அதி கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கனிமவளங்ள் கொண்டு செல்கின்றனர்.

    தமிழகத்திலும் அதே போல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தமிழகத்தின் வளத்தை பாதுக்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் இது குறித்த ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்து மாநில கனிம வளங்களை நமது தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வழி செய்வதுடன் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு நிரந்தரமாக தடை விதிப்பதற்கும் சட்டம் இயற்ற வேண்டும்.

    எனவே வருகிற 9-ந் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களை உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • குமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது
    • 10 டயர் மேல் உள்ள டிப்பர் லாரிகள் இயக்கக்கூடாது

    நாகர்கோவில் : குமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. 10 டயர் மேல் உள்ள டிப்பர் லாரிகள் இயக்கக்கூடாது என்று கலெக்டர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். மேலும் கனிமவளங்களை கொண்டு செல்வதற்கும் இரண்டு வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து குமரி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து 8 வார காலம் 10 டயருக்கு மேற்பட்ட டிப்பர் லாரி களை இயக்கலாம் என அவகாசம் வழங்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கொண்டு வந்தனர்.

    ஒழுகினசேரி பகுதி யில் போலீசார் 10 சக்கரத்திற்கு மேல் உள்ள டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தினார்கள். அந்த லாரிகளை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் டேவிட் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    கோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில் லாரிகளை திருப்பி அனுப்பு வது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் சங்கத்தின் தலைவர் டேவிட் ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவின் மதுரை கோர்ட்டின் 8 வார காலம் அவகாசம் ஆகியவற்றிற்கான தீர்ப்பின் நகலையும் வழங்கி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கனிம வளங்கள் கொண்டு செல்ல 2 வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது
    • தரமான நெய்யை வழங்கி வருகிறோம். மக்கள் அதிகமாக வாங்குவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்கு வரத்து ஆணையர் மூலமாக ஒரு செயல்முறை ஆணையை பிறப்பித்துள்ளார். அந்த ஆணைப்படி இனி குமரி மாவட்டம் வழியாக 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றி செல்லக்கூடாது. 28 டன் எடைக்கு மேல் கனிம வளங்களை கொண்டு செல்லக்கூடாது. மேலும் கனிம வளங்கள் கொண்டு செல்ல 2 வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக மட்டுமே கனிம வளங்களை கொண்டு செல்ல வேண்டும்.

    அதாவது ஆரல்வாய்மொ ழியில் இருந்து செண்பகரா மன்புதூர், துவரங்காடு வழியாக களியங்காடு வந்து வாகனங்கள் செல்ல வேண்டும். மேலும் காவல்கி ணறில் இருந்து தோவாளை, வெள்ளமடம், அப்டா மார்க்கெட், புத்தேரி, இறச்ச குளம் வழியாக களியங்காடு வந்து செல்லலாம். குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலைகள் இல்லை. குறுகிய சாலைகள் தான் உள்ளன.

    இதன் காரணமாக கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்து வருகிறோம்.

    குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 36 குவாரிகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 7 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடியில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். இதுதொடர்பாக மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் மற்றும் குவாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிற 1-ந்தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும். ஏற்கனவே கனிமவளம் கடத்தலை கண்காணிக்கும் வகையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    கோட்டார் போலீஸ் நிலையம் முன் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே லாரிகளை நிறுத்த வேறு இடம் பார்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் மேலும் கூறுகையில், தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கொள்மு தலை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். உற்பத்தியை பெருக்கும் வகையில் கறவை மாடுகள் வழங்க கடன் வசதி செய்து கொடுக்கப்பட் டுள்ளது. தற்போது நிர்வாக ரீதியாக நல்ல நிலையில் ஆவின் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மின்சார செலவை குறைக்க வும் நடவடிக்கை மேற்கொண் டுள்ளோம். ஆவின் நெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. தரமான நெய்யை வழங்கி வருகிறோம். மக்கள் அதிகமாக வாங்குவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    எனவே உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செயல்பட்டு வரும் பால் கூட்டுறவு நிலையங்களை மேம்படுத்தவும், புதிதாக கூட்டுறவு நிலையங்கள் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்பட்ட பாலுக்கு உடனடிகாக பாக்கி தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்துக்கு ஒருமுறை பாக்கி தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

    பேட்டியின்போது கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மேயர் மகேஷ் ஆகி யோர் உடன் இருந்தனர்.

    • ஜல்லி, எம்சாண்ட் விலை உயர்வை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஏழாவது மண்டலத்தை சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 7-வது மண்டலத்தின் செயற்குழு கூட்டம் திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் சங்க தலைவர் ஜெயராமன் வரவேற்புரையாற்றினார். மண்டல செயலாளர் எஸ்.ஸ்டாலின்பாரதி அறிக்கையை சமர்ப்பித்தார்.

    மாநிலத் தலைவர் டி.ராஜேஷ், மாநில துணைத்தலைவர் விஜயபானு, மாநில மக்கள் தொடர்பு அலுவலர் சரவணராஜா, மாநில உதவி தலைவர் அறிவழகன், மாநில முன்னாள் தலைவர் தில்லைராஜன், மாநில முன்னாள் பொருளாளர் எஸ்.பொன்னுசாமி மற்றும் 7-வது மண்டலத்தைச் சார்ந்த திருப்பூர், கோவை, உடுமலை, தாராபுரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காங்கயம் பொறியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். திருப்பூர் சங்க செயலாளர் ஆர்.பிரகாஷ் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லி, எம்சாண்ட் விலை உயர்வை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் கோவை சங்கத்தலைவர் ராமகிருஷ்ணன், உடுமலை சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன், தாராபுரம் சங்கத் தலைவர் முருகானந்தம், பொள்ளாச்சி சங்கத் தலைவர் ஜவகர் பாண்டியன், மேட்டுப்பாளையம் சங்கத் தலைவர் கார்த்திகேய பிரபு, காங்கயம் சங்கத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட ஏழாவது மண்டலத்தை சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 10 சக்கரம் கொண்ட லாரிகளில் தான் கனிம வளங்கள் ஏற்றி செல்ல வேண்டும்
    • காயல்கரை பகுதியில் ரோடு விரிசல் ஏற்பட்டு பக்க சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியை சுற்றி சுமார் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இருந்து தினமும் கேரளாவுக்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் எம்- சான்ட், என்- சான்ட், கல் ஆகியயை ஏற்றி செல்லப்படுகிறது.

    10 சக்கரம் கொண்ட லாரிகளில் தான் கனிம வளங்கள் ஏற்றி செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தி இருந்தது. ஆனால் கனிமவள லாரிகளின் உரிமையாளர்கள் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை. 12, 14, 16, 18 சக்கரம் என பெரிய டாரஸ் லாரிகளில் இரவு பகலாக கல்களை உடைத்து கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் ரோடுகள் பெரும் சேதம் அடைந்து பல விபத்துக்கள் ஏற்பட்டது.

    இதை கட்டுப்படுத்தும் விதமாக வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட சித்திரங்கோடு சந்திப்பில் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஒரு எடைமேடை அமைக்கப்பட்டு அனைத்து லாரிகளுக்கும் எடை போட்டு ரூ. 50 வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    லாரிகள் அனைத்தும் எடை போட்டு சரியான எடைக்கு மேல் இருந்தால் அபராதம் விதித்து அனுப்பி வைத்து இருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் அதிக எடை கொண்ட லாரிகள் இரவு பகலாக செல்கிறது. அந்த லாரிகளுக்கு அபராதம் விதிப்பதில்லை மறைமுகமாக பணம் பெற்றுக்கொண்டு லாரிகளை அனுப்பி வைக்கின்றனர். அதி காலையில் அதிக வாகனங்கள் அந்த பகுதியில் வரிசையாக வந்து நிற்பதால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பல புகார்கள் அனுப்பியும், மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதிக எடை கொண்ட லாரிகள் மீது அரசு, போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் 12 சக்கர வாகனங்கள் முதல் 16 சக்கர வாகனங்கள் இந்த பகுதி வழியாக செல்வதால் காயல்கரை பகுதியில் ரோடு விரிசல் ஏற்பட்டு பக்க சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இந்த ரோடு உடைந்தால் சுமார் 200-க்கு மேல் பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    தற்போது மழை காலம் என்பதால் ரோடு பெரிய அளவில் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. அந்த பகுதியில் உள்ள பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிக்கு உள்ளவர்கள். எனவே மாவட்ட நிர்வாகம் அதிக எடை கொண்டு செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க கேட்டு சித்திரன்கோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் சங்க தலைவர் யேசுராஜா தலைமையில் மாவட்ட பொருளாளர் ஐஜிபி. லாரன்ஸ் வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெப சிங்குமார் முன்னிலையில் எடை மேடை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் வேர்கிளம்பி பேரூராட்சி உறுப்பினர்கள் சிங், ராஜேஸ், ராமன் ரஜினி மற்றும் கட்சி நிர்வாசிகள் எட்வர்ட் நிக்சன், ஊர் பொதுமக்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
    • லாரிகளில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது

    களியக்காவிளை,ஜூன்.20-

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள் கனிம வளங்களை வாக னங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறை களை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை தனிப்பிரிவு போலீசார் களியக்காவிளை பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த 9 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது லாரிகளில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனங்களை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • லாரிகளில் அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க ஏற்கனவே லாரிகளை சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தோம்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்,கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள், விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்து,போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் சாலைமறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விதிமுறைகளின் படி ஜல்லிக்கற்கள் மற்றும் எம். சாண்ட் கொண்டு செல்லப்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இரவு கோடாங்கிபாளையத்தில் அதிக அளவில் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்த கேரள மாநில லாரியை அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறைப்பி டித்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த லாரிக்கு ரூ.71 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    லாரிகளில் அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க ஏற்கனவே லாரிகளை சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தோம். இதை தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்ததையடுத்து, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் சில நாட்கள் கேரள லாரிகள் வராமல் இருந்தன. தற்போது இரவு நேரங்களில் மீண்டும் வருவதாக தெரிகிறது. இது மேலும் தொடர்ந்தால் பொதுமக்கள் மீண்டும் லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நடுவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
    • ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

    இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுது ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சுக்கம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் இது பற்றி பாதகையும் கிராம மக்கள் வைத்தனர். இந்த நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற நான்கு கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார்,மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தத்தின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • வாகனங்களில் சில அனுமதியின்றி கனிம வளங்களை கடத்தி வருவதாக புகார்கள் உள்ளன.
    • குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படு கின்றன. அதிகபாரம் ஏற்றி செல்லும் இந்த வாகனங்களில் சில அனுமதியின்றி கனிம வளங்களை கடத்தி வருவதாக புகார்கள் உள்ளன.

    இப்படி செல்லும் வாகனங்களால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் நடந்து வருகிறது. சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்துவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருப்பினும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்தே வருகிறது. இந்த நிலையில் அதிகபாரத்துடன் கனிம வளம் ஏற்றிய ஒரு லாரி குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி குழித்துறை பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

    இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. சாலையில் சென்றவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நிலைதடுமாறி ஓடிய லாரி, முன்னால் சென்ற 2 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் 2 கார்களின் பின்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய கனிமவள லாரியை பறிமுதல் செய்து, மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கனிம வளங்களை லாரிகளில் அதிகபாரம் ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதாகவும், அதிகபாரம் ஏற்றி செல்லும் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
    • அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மூலம் பொதுநல வழக்கு தொடங்கப்பட உள்ளது.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், அவைத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் ஒன்றிய செயலாளர் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு எதிராக அனைத்து கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அ.தி.மு.க.வும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    செங்கோட்டையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும் கனிம வளங்களுக்கு எதிராக அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மூலம் பொதுநல வழக்கு தொடங்கப்பட உள்ளது எனவும் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் தெரிவித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கடையநல்லூர் எம்.எல்.ஏ.வும் ,தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது கனிம வளங்கள் ஒரு யூனிட் கூட கேரளாவிற்கு கடத்தப்படவில்லை. ஆனால் தற்பொழுது தினமும் 4500 முதல் 5000 யூனிட் வரை கனரக லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது என்றார். கூட்டத்தில் இன்னும் சில தினங்களில் அ.தி.மு.க. சார்பில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் தென்காசி மாவட்டத்தில் நடத்தப்படும் என்று முடிவு செய்துள்ளனர்.

    • கனிமவளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அய்யா வழி சிவச்சந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் இருந்து அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன்,ராமநாதன் அருள்செல்வன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் துணைத்தலைவர்கள் முத்துக்குமார், பால்ராஜ் முத்துலட்சுமி, பால சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் மாரியப்பன், இளைஞர் அணி தலைவர் முப்புடாதி, மகளிர் அணி தலைவி மகாலட்சுமி மற்றும் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்,விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் குருசாமி, இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அய்யா வழி சிவச்சந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு கனிம வள கொள்ளையை தடுக்க கோரி செங்கோட்டை தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை செங்கோட்டை நகர பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

    • தமிழகத்தில் இருந்து சட்டத்தை மீறி கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
    • வருங்கால சந்ததியினருக்கு கனிமவளங்களே இல்லை என்ற நிலை உருவாகும்.

    கடையம்:

    முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்கள் தமிழ கத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விதிகளையும், மோட்டார் வாகன சட்டத்தையும் மீறி கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள குவாரிகளை சர்வே செய்ய வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான குவாரிகள் சட்ட விதிகளை மீறி தான் செயல்பட்டு வருகிறது. தற்போது அரசு கனிமவள கொள்ளையை தடுக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருப்பது கனிமவள கடத்தலை தடுக்க உதவாது. சாலை பாதுகாப்பு விதி களையும், மோட்டார் வாகன சட்டத்தையும், கனிமவள சட்டத்தையும் அரசு அதிகாரிகள் முறையாக கடைபிடித்தாலே கனிமவள கடத்தல் முற்றிலுமாக தவிர்க்கப்படும். மாநில எல்லையில் வருவாய்துறை, கனிமவளத்துறை, போக்கு வரத்துத்துறை, காவல்துறை செக்போஸ்டுகள் இருந்தும் கனிமவள கடத்தல் தொடர்கிறது.

    அதிகனரக வாகனங்களில் விதிகளை மீறி அதிக பாரத்துடன் கனிமங்கள் ஏற்றி செல்வதால் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் சாலையில் பயணிக்கவே அச்சப்படு கின்றனர். கனிமவள கடத்தல் தொடருமானால் வருங்கால சந்ததியினருக்கு கனிமவளங்களே இல்லை என்ற நிலை இன்னும் 10 ஆண்டுகளில் உருவாகி, வருங்கால சந்ததியினர் வெளி மாநிலத்தில் கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

    எனவே அரசு கனிமவள கடத்தலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×