search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலா"

    • தேயிலை தோட்ட பாறையில் அமர்ந்து ஒய்வெடுத்த சிறுத்தை
    • ரெயில் தண்டவாளத்தை தாண்டி, பஸ் நிலையம் வந்த காட்டெருமை

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சிங்காரா பகுதியில் ஒரு சிறுத்தை வலம் வந்தது.

    அது நேற்று மாலை தேயிலை தோட்டத்தில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்தது. இதனை அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்த்து அச்சம் அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்த சிறுத்தை பின்னர் தாமாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

    இதற்கிடையே குன்னூர் ரயில் நிலையத்தில் ஒற்றை காட்டெருமை உலாவந்தது. இது தீடிரென அங்குள்ள தண்டவாளத்தை தாண்டி, பஸ் நிலையம் வந்து, பின்னர் மவுண்ட் ரோடு சாலை வழியாக ஆந்த பகுதிகளில் சுற்றி திரிந்தது. காட்டெருமை முக்கிய சாலையில் சென்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குன்னூரில் பலத்த மழை காரணமாக மேகமூட்டமும் அதிகளவில் இருந்ததால், எதிரேவரும் காட்டெருமையை வாகன ஓட்டிகளால் சரிவர பார்க்க இயலவில்லை. அப்போது அது வாகனங்களை தாக்க முயன்றது. இதில் ஒரு சிலர் மயிரிழையில் உயிர்தபினர். பின்னர் அந்த காட்டெருமை ஒருவழியாக அருகே உள்ள வண்ணாரப்பேட்டை வனத்திற்குள் சென்று மறைந்தது.

    குன்னூரில் காட்டெருமை உலா காரணமாக மவுண்ட் ரோடு பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. எனவே நகரப்பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    9-ம் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி பார்வதிகாரர் குடும்பத்தினர் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மனை எழுந்தருள செய்து மேளதாளம் முழங்க சன்னதி தெரு வழியாக தெற்குரத வீதியில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் விசேஷ பூஜை களும், அலங்கார தீபாராத னையும் நடந்தது. இதில் மண்டகப்படி கட்டளைதாரர்கள் ஹரிகரன், சிவசுப்பிரமணியன் விஜய் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பின்னர் இரவு 7 மணிக்கு சமயசொற்பொழிவும் அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பக்தி பஜனை யும் நடந்தது. அதன்பிறகு பகவதி அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரதவீதி, சன்னதிதெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடு கிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.

    • வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு வழிபாடு
    • ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழா வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை யொட்டி தினமும் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    2-ம் திருவிழாவான நேற்று மாலை சமய உரையும், அதைத்தொடர்ந்து வயலின் இன்னிசை கச்சேரியும், பரதநாட்டியமும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிளி வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிதுநேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது.

    அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    3-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழு சார்பில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்கா ரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்ன தானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும், 9 மணிக்கு அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து வழிபாடு
    • பகவதி அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்த கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாஅடுத்தமாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னி சைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    1-ம் திருவிழாவான நேற்று மாலை நாதஸ்வர கச்சேரியும் இரவு சமய உரையும் அதைத் தொடர்ந்து பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழி நெடு கிலும் பக்தர்கள் வாக னத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், திருவிழா மண்டகப்படி கட்டளைதாரர் பகவதி பெருமாள் பிள்ளை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேல் சாந்திகள் விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி, கண்ணன் போற்றி, கோவில் கணக்காளர் கண்ணதாசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    2-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர் களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்ன தானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசை கச்சேரி யும் 9 மணிக்கு அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
    • தொடர்ந்து 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதையடுத்து 12-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மறு காப்பு கட்டுதலும் நடைபெற்றது. 15-ந் தேதி முதல் நேற்று 20-ந் தேதி வரை அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், ரிஷபம், அன்னபட்சி உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய விதிகள் வழியாக திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று 21-ந் தேதி மாலை வடிசோறு, மாவிளக்கு மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை 22-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் ரதம் ஏறுதலும், மாலை 3.30 மணிக்கு மகா மாரியம்மன் திருத்தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஆண்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், பெண்கள் பூவாரி போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் 24-ந் தேதி புதன்கிழமை பொங்கல் வைத்து, மாவிளக்கு கொண்டு வந்து பூஜையும், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    25-ந் தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந் தேதி மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 28-ந் தேதி காலை 6 மணிக்கு யாக பூஜை, அன்னபாவாடை மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது.

    • சேலம் அம்மாபேட்டை யில் பன்னிரு திருமுறை மன்றம் சார்பாக அறுபத்துமூவர் திருவீதி உலா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது.
    • மதியம் பேரொளி வழிபாடு, அன்னம் பாலிப்பு நடக்கிறது.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை யில் பன்னிரு திருமுறை மன்றம் சார்பாக அறுபத்துமூவர் திருவீதி உலா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது.

    இதையொட்டி காலை விநாயகர், வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், சொக்கநாதர், அங்க யற்கண்ணி அம்மை உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருமஞ்சனம், பொல்லாப்பிள்ளையார், அம்மையப்பர், சேயிடை செல்வர், நாயன்மார், தொகையடியார், மணிவாசகர், சேக்கிழாருக்கு பெருந்திருமஞ்சனம், திருமுறை இன்னிசை, அருளுரை நடக்கின்றன.

    மதியம் பேரொளி வழிபாடு, அன்னம் பாலிப்பு நடக்கிறது. மாலை யில் அறுபத்து மூவர் திரு வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவ்பனடியார்கள் செய்துள்ளனர்.

    • பரமத்தி வேலூர் வைத்தியநாதப் பெருமாள் கோவிலில் அம்மையப்பர் திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • அடியார்கள் புடை சூழ, கைலாய வாத்தியங்களுடன்‌ அம்மையப்பர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியில் அருள் தரும் தையல் நாயகி அம்மை உடனமர் வைத்தியநாதப் பெருமாள் கோவில் 15-ம் ஆண்டு விழா, அம்மையப்பர் திரு க்கல்யாணம் மற்றும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு திருப்பள்ளி யெழுச்சி, திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், திருமுறை‌ பாராயணம் மற்றும் பேரொளி வழிபாடு ‌‌‌நடைபெற்றது.

    காலை 10 மணிக்கு திருமுறை வேள்வியும், 12 மணிக்கு அருள்தரும் தையல் நாயகி அம்மை உடனமர் வைத்திய நாதப் பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மதியம் 1 மணிக்கு அன்ன ம்பாலித்தலும்,மாலை 6 மணிக்கு அடியார்கள் புடை சூழ, கைலாய வாத்தியங்களுடன்‌ அம்மையப்பர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவி ற்கான ஏற்பாடுகளை பரமத்தி தையல்நாயகி அம்மை உடனமர் வைத்திய நாதப் பெருமாள் கோயில் விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×