search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruveedi"

    • புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
    • தொடர்ந்து 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதையடுத்து 12-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மறு காப்பு கட்டுதலும் நடைபெற்றது. 15-ந் தேதி முதல் நேற்று 20-ந் தேதி வரை அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், ரிஷபம், அன்னபட்சி உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய விதிகள் வழியாக திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று 21-ந் தேதி மாலை வடிசோறு, மாவிளக்கு மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை 22-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் ரதம் ஏறுதலும், மாலை 3.30 மணிக்கு மகா மாரியம்மன் திருத்தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஆண்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், பெண்கள் பூவாரி போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் 24-ந் தேதி புதன்கிழமை பொங்கல் வைத்து, மாவிளக்கு கொண்டு வந்து பூஜையும், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    25-ந் தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந் தேதி மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 28-ந் தேதி காலை 6 மணிக்கு யாக பூஜை, அன்னபாவாடை மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது.

    ×