அறுபத்து மூவர் திருவீதி உலா

சேலம் அம்மாபேட்டை யில் பன்னிரு திருமுறை மன்றம் சார்பாக அறுபத்துமூவர் திருவீதி உலா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது. மதியம் பேரொளி வழிபாடு, அன்னம் பாலிப்பு நடக்கிறது.
அறுபத்து மூவர் திருவீதி உலா
Published on

சேலம்:

சேலம் அம்மாபேட்டை யில் பன்னிரு திருமுறை மன்றம் சார்பாக அறுபத்துமூவர் திருவீதி உலா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது.

இதையொட்டி காலை விநாயகர், வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், சொக்கநாதர், அங்க யற்கண்ணி அம்மை உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருமஞ்சனம், பொல்லாப்பிள்ளையார், அம்மையப்பர், சேயிடை செல்வர், நாயன்மார், தொகையடியார், மணிவாசகர், சேக்கிழாருக்கு பெருந்திருமஞ்சனம், திருமுறை இன்னிசை, அருளுரை நடக்கின்றன.

மதியம் பேரொளி வழிபாடு, அன்னம் பாலிப்பு நடக்கிறது. மாலை யில் அறுபத்து மூவர் திரு வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவ்பனடியார்கள் செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com