search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமை மீறல் நோட்டீஸ்"

    ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தவறான தகவல் அளித்ததாக கூறி, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தது. #RafaleCase #Congress #Parliament
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அந்த தீர்ப்பில், ரபேல் விமான விலை விவரம் குறித்த தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்ததாக கூறப்பட்டு இருந்தது.

    ஆனால், உண்மையில், அந்த அறிக்கை, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு தவறான தகவலை அளித்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதைத்தொடர்ந்து, தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.



    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

    மக்களவையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், மாநிலங்களவையில், எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தும் இந்த நோட்டீசை கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக மத்திய சட்ட அமைச்சகத்துக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளேன். ஏனென்றால், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு சட்ட அமைச்சகம்தான் ஒப்புதல் அளித்தது.

    சுப்ரீம் கோர்ட்டுக்கு தவறான தகவலை அளித்து, நாடாளுமன்றத்தையும், மக்களையும் திசை திருப்பியது ஏன் என்று சட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கும்வகையில் இந்த நோட்டீசை கொடுத்துள்ளோம்.

    இந்த அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கோரி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலங்களவை நேற்று கூடியபோது, உறுப்பினர்கள் கொடுத்த நோட்டீஸ்களை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வாசித்தார். அப்போது, குலாம் நபி ஆசாத், தான் கொடுத்த உரிமை மீறல் நோட்டீஸ் பற்றி தெரிவித்தார்.

    அதற்கு வெங்கையா நாயுடு, இந்த பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரக்கோரி, காங்கிரஸ் உறுப்பினர் சுனில் ஜாக்கர், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு கொடுத்தார். அம்மனு தனது பரிசீலனையில் இருப்பதாக சுமித்ரா மகாஜன் கூறினார்.

    அதுபோல், ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரக்கோரி, பா.ஜனதா தரப்பில் அதன் தலைமை கொறடா அனுராக் தாக்குர் உள்ளிட்ட 4 எம்.பி.க்கள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு அளித்தனர்.

    இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டுக்குழுவை விட சுப்ரீம் கோர்ட்டே உயர்ந்தது என்பதால், ரபேல் விவகாரம் குறித்து கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். #RafaleCase #Congress #Parliament 
    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பிரதமருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளனர். #TDP #PrivilegeMotion #Modi
    புதுடெல்லி:

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் மீது கடந்த 20-ந்தேதி நடந்த விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என 14-வது நிதிக்குழு பரிந்துரைத்து இருப்பதாக கூறினார்.

    ஆனால் அப்படி ஒரு பரிந்துரையை 14-வது நிதிக்குழு வெளியிடவில்லை என தெலுங்குதேசம் கட்சித்தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருக்கும் தனது கட்சி எம்.பி.க்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியபோது இதை அவர்களிடம் கூறிய சந்திரபாபு நாயுடு, இதன் மூலம் பிரதமரும், மத்திய மந்திரிகளும் மக்களவையை தவறாக வழிநடத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

    எனவே பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பரிசீலிக்குமாறு தெலுங்குதேசம் எம்.பி.க்களுக்கு அவர் அறிவுறுத்தினார். அதன்பேரில் பிரதமருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க அந்த கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    முன்னதாக ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  #TDP #PrivilegeMotion #Modi 
    ராகுல்காந்தி மீதான உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். #Speaker #Rahulgandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர், “பிரான்சிடம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்து கொண்ட ஒப்பந்தம் ரகசியமானது அல்ல. இதில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களிடம் பொய் சொல்கிறார். மேலும் பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தத்தில் ஒரு குறிப்பிட்ட தொழில் அதிபருக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.  #Speaker #Rahulgandhi



    இது தொடர்பாக பா.ஜனதா எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, கொறடா அனுராக் தாகூர், துஷ்யந்த் சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோர் நேற்று சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தனர். இந்த நிலையில் மக்களவையில் நேற்று கேள்வி நேரம் தொடங்கியதும் பேசிய பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே, ராகுல்காந்தி மீது பா.ஜனதா சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்து இருக்கிறோம். ராகுல்காந்தி எப்போது பேசினாலும், அது பா.ஜனதாவிற்கு ஓட்டுகளை அதிகரிக்கச்செய்கிறது என்றார்.

    அதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, “இந்த நோட்டீஸ் குறித்து ஆய்வு செய்யப்படும். பிறகு இதுபற்றி உங்களுக்கு தெரியும்” என்றார். 
    ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. #RafaleDeal #PMModi #NirmalaSeetharaman
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட உள்ள ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதற்கு அதில் ஊழல் நடந்திருப்பதே காரணம் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்ற மக்களவையில் விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா, ரன்தீப் சூரஜ்வாலா ஆகியோர் செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர்.



    பின்னர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து ரகசியம் காப்பதுடன், நாட்டு மக்களுக்கு அதை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பது, அதில் தவறு நடந்துள்ளதையே காட்டுகிறது. அவர்கள் தொடர்ந்து அதை மறைப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    அரசு போர் விமானத்தின் விலையை தொடர்ந்து ரகசியமாக வைத்திருக்க முடியாது. தலைமை கணக்காயர் மற்றும் நாடாளுமன்ற பொது கணக்கு குழு ஆய்வில் அம்பலமாகி விடும். இந்த ஒப்பந்தத்தில் அரசு நிறுவனத்தை புறக்கணித்து விட்டு அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்துக்கு விமான பாகங்களை இணைக்கும் ஒப்பந்தம் கொடுத்திருப்பது ஏன் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதற்கு இதுவே உதாரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் ஆனந்த் சர்மா கூறுகையில், பிரதமர் மோடியும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமான விவகாரம் குறித்து பதில் அளிக்கையில், நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது குறித்து ஏன் என்பதை விளக்க வேண்டும். போர் விமான விலையை வெளியிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என பிரான்ஸ் அரசு தெரிவித்து இருக்கிறது. இதை ராகுல் காந்தியிடம், பிரான்ஸ் அதிபர் தெரிவித்து இருக்கிறார். அப்போது மன்மோகன் சிங், நான் (ஆனந்த் சர்மா) உள்ளிட்டோர் உடன் இருந்தோம் என்றார்.

    பின்னர் ரன்தீப் சூரஜ்வாலா கூறும்போது, நாடாளுமன்றத்தில் போர் விமானம் குறித்து மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது உரிமை மீறல் பிரச்சினை ஆகும். இருவருக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் முடிவு எடுப்பார் என்றார்.  #RafaleDeal #PMModi #NirmalaSeetharaman
    ×