search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஹாக்கி அணி"

    • இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.
    • 2020 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர் வருண் குமார்.

    இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் பெங்களூருவில் உள்ள ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகார் அடிப்படையில் ஹாக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் வருண் குமார் இடம் பெற்றிருந்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

    2021-ல் அர்ஜூனா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போக்சோ தவிர்த்து மோசடி பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புகார் அளித்த பெண் ஐதராபாத்தை சேர்ந்த கைப்பந்து வீராங்கனை ஆவார். இவருக்கு 17 வயதாக இருக்கும்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

    • ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி இருக்கிறது.
    • சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நமது அணி நன்றாக விளையாடி கோப்பையை வென்றது.

    பெங்களூரு:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகுவதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் பயிற்சி பெற்று வந்த இந்திய ஹாக்கி அணி நேற்று விமானம் மூலம் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது.

    முன்னதாக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அளித்த பேட்டியில், 'ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நமது அணி நன்றாக விளையாடி கோப்பையை வென்றது. அத்தகைய சிறந்த செயல்பாட்டை தொடர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்களது பிரிவில் சில கடினமான அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. இருப்பினும் நாங்கள் சிறப்பாக தயாராகி இருப்பதால் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறோம்' என்றார்.

    இதேபோல் துணைகேப்டன் ஹர்திக் சிங் கூறுகையில், 'ஆசிய போட்டிக்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டு இருப்பதுடன் எல்லோரும் ஒரே இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். நாங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல நிலையில் போட்டிக்கு செல்கிறோம். கடந்த சில மாதங்களை போல் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் சீனாவில் இருந்து பதக்கத்துடன் திரும்புவதே எங்களது இலக்கு' என்றார்.

    ஆண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர், ஜப்பான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். 'பி' பிரிவில் தென்கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 24-ந் தேதி உஸ்பெகிஸ்தானை (காலை 8.45 மணி) சந்திக்கிறது. அடுத்த ஆட்டங்களில் 26-ந் தேதி சிங்கப்பூரையும் (காலை 6.30 மணி), 28-ந் தேதி ஜப்பானையும் (மாலை 6.15 மணி), 30-ந் தேதி பாகிஸ்தானையும் (மாலை 6.15 மணி), அக்டோபர் 2-ந் தேதி வங்காளதேசத்தையும் (பகல் 1.15 மணி) எதிர்கொள்கிறது.

    ஆசிய விளையாட்டில் இந்திய ஹாக்கி அணி 3 முறை தங்கப்பதக்கமும், 9 முறை வெள்ளிப்பதக்கமும், 3 தடவை வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளது. இதில் கடைசியாக 2018-ம் ஆண்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றதும் அடங்கும்.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி வருமாறு:-

    கோல்கீப்பர்கள். ஸ்ரீஜேஷ், கிரிஷன் பஹதுர் பதக், பின்களம்: வருண்குமார், அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், சஞ்சய், நடுகளம்: நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், சுமித், ஷாம்ஷெர் சிங், முன்களம்: அபிஷேக், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், லலித்குமார் உபாத்யாய்.

    • இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி ஸ்பெயினில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றுள்ளது.
    • பெண்கள் ஹாக்கி அணிக்கு சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    டெல்லி:

    ஸ்பெயின் ஹாக்கி கூட்டமைப்பின் 100-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 4 நாடுகளுக்கு இடையிலான ஹாக்கித் தொடர் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க இந்திய அணியையும் தேர்வு செய்து இருந்தது. தொடரில் இந்தியா,இங்கிலாந்து,நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த ஹாக்கித் தொடர் ஜூலை 25 முதல் 30 வரை நடைபெற இருக்கிறது.

    இந்தத் தொடரில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இங்கிலாந்து,நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக மோத உள்ளது. இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுடன் மோத உள்ளது.

    இந்த தொடருக்கான இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். பெண்கள் ஹாக்கி அணிக்கு சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    ஸ்பெயின் தொடர் குறித்து இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கூறுகையில்:-

    ஸ்பெயின் தொடர் வலுவான அணிகளுக்கு எதிராக அணியின் உத்திகளைச் சரிசெய்வதற்கும், திறன்களை அளவிடுவதற்கும் சிறந்த களம். மேலும் இந்தத் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் வரவிருக்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கித் தொடருக்கு முன் அணியின் தரத்தை அறிய உதவும். மேலும் இந்தத் தொடரில் சிறந்த வெற்றி பெற முயற்சி செய்வோம்.

    என்று கூறி உள்ளார்.

    இன்று நடைபெறும் முதல் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி இரண்டுமே தொடரை நடத்தும் ஸ்பெயினின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை எதிர்கொள்கின்றன.

    • பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது இந்திய ஹாக்கி அணியின் முன்னுரிமையாக உள்ளது என கிரேக் புல்டான் தெரிவித்தார்.
    • ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது எங்களது முன்னுரிமையாகும்.

    புதுடெல்லி:

    இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளரான தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரேக் புல்டான் நேற்று காணொலி மூலம் அளித்த பேட்டியில், 'ஆசிய மண்டலத்தில் இந்தியா நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டும் என்பது எங்கள் இலக்குகளில் முதன்மையானதாகும். அத்துடன் உலக தரவரிசையில் முன்னேற்றம் காண்பதுடன் பதக்க மேடையை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டியது அவசியமானதாகும்.

    அணியில் போதுமான அனுபவத்தை உருவாக்கி, ஒவ்வொரு வீரருக்கும் பொருந்தக்கூடிய ஆட்ட திட்டத்தை வைத்து இருந்தால் நீங்கள் சர்வதேச போட்டியில் இறுதிசுற்றுக்குள் நுழைவதுடன் பதக்கத்தையும் வெல்ல முடியும். இந்த ஆண்டு இறுதியில் அரங்கேறும் ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது எங்களது முன்னுரிமையாகும்.

    அதனை எட்ட புரோ லீக், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகளை சரியாக பயன்படுத்தி கொள்வோம். நாங்கள் சிறந்த அணி கிடையாது. ஆனால் ஒரு நல்ல அணி. அதேநேரத்தில் மற்ற அணிகள் எதிர்கொள்ள ஒரு கடினமான அணியாகும். நமது அணி இருக்கும் நிலைக்கும், உலக தரவரிசையில் முதல் 2 இடங்களுக்குள் உள்ள அணிகளுக்கும் இடையே இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியை குறைக்க நாம் உழைக்க வேண்டியது அவசியமானதாகும்' என்று தெரிவித்தார்.

    • தென்னாப்பிரிக்க அணிக்காக சுமார் 195 போட்டிகளில் 10 ஆண்டு காலம் விளையாடி உள்ளார்.
    • இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பெருமைக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கிரேக் ஃபுல்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. வரும் 10-ம் தேதி ஹாக்கி ப்ரோ லீக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    48 வயதான அவர் தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர். பயிற்சியாளராக சுமார் 25 ஆண்டுகால அனுபவம் கொண்டவர். 2014 முதல் 2018 வரையில் அயர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு பெல்ஜியம் ஹாக்கி அணியின் துணை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். இந்த காலகட்டத்தில் 2018 உலகக் கோப்பை தொடர் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது பெல்ஜியம் அணி.

    தென்னாப்பிரிக்க அணிக்காக சுமார் 195 போட்டிகளில் 10 ஆண்டு காலம் விளையாடி உள்ளார். வெகு விரைவில் இவர் இந்திய அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பெருமைக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கிரஹாம் ரீட், உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு விலகி இருந்தார். அவருக்கு மாற்றாக அந்த பணியை ஃபுல்டன் கவனிக்க உள்ளார்.

    • உலக கோப்பை ஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
    • இந்திய ஹாக்கி அணியில் 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    புவனேஸ்வர்:

    2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு உலக கோப்பை ஹாக்கி போட்டியை ஒடிசாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    உலக கோப்பைஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் அணிகளுடன் 'டி' பிரிவில் இந்தியா உள்ளது.

    இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியில் 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய அணி :

    கோல்கீப்பர் - கிரிஷன் பகதூர் பதக், ஸ்ரீஜேஷ் ரவீந்திரன்

    பின்களம் - ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), நிலம் சஞ்சீப் செஸ்

    நடுகளம் - மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப் சிங்

    முன்களம் - மந்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத் சிங்

    மாற்று வீரர்கள் - ராஜ்குமார் பால், ஜுக்ராஜ் சிங்

    பெங்களூருவில் உள்ள இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பூச்சி, முடி இருந்ததாக பயிற்சியாளர் ஹரேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். #HockeyIndia
    பெங்களூரு:

    இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நெதர்லாந்தில் இந்த மாதம் 23-ல் தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இருக்கிறது. அதற்காக பெங்களூருவில் உள்ள ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்நிலையில், வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் தலைவர் நரேந்தர் பத்ராவிற்கு எழுதிய கடிதத்தில், பெங்களூரு எஸ்.ஏ.ஐ. மையத்தில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருக்கிறது. உணவில் பூச்சு, வண்டு மற்றும் முடி போன்றவை இருக்கின்றன.

    வீரர்களுக்கு மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால் இது போன்ற உணவுகளால் வீரர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். சமீபத்தில் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் உணவு சார்ந்த குறைபாடு இருப்பது தெரிய வந்தது. இது வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலககோப்பை விளையாட்டுகளில் விளையாடும் போது பாதிப்பை ஏற்படுத்தும். இதனை கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ஹரேந்திர சிங்கின் கடிதத்திற்கு விளக்கம் அளித்த பத்ரா பெங்களூரு  எஸ்.ஏ.ஐ. மையத்தின் தலைவரிடம் இப்பிரச்சனை குறித்து பேசியதாக கூறினார். விரைவில் இந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்படும். வீரர்களுக்கு தரமான, ஆரோக்கியமான மற்றும் சுத்தமான உணவுகள் வழங்கப்படும் என கூறினார். #HockeyIndia

    ×